search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளர்"

    • பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நவீன தானியங்கி விசைத்தறிகள் இயங்கி வருகின்றன.
    • தமிழர்கள் தாக்குவது போல் பொய்யான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    பல்லடம் :

    தென்னிந்திய நாடா இல்லா விசைத்தறியாளர்கள் சங்க நிர்வாகிகள் பல்லடம் போலீஸ் துணை சூப்பிரண்ட் அலுவலகத்தில் துணை போலீஸ் சூப்பிரண்ட் சவுமியாவை சந்தித்து கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:- பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், நவீன தானியங்கி விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. இதில் வட மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த நிலையில் சமீப காலமாக தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களை தமிழர்கள் தாக்குவது போல் பொய்யான, போட்டோ மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. இதன் காரணமாக வட மாநில தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர்.

    ஆகையால் தாங்கள் இந்த தவறான வதந்திகளை பரப்புபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பல்லடத்தில் வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான சூழ்நிலைதான் உள்ளது என்பதை தாங்கள் தெரியப்படுத்தியும், வட இந்திய தொழிலாளர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள பீதியை கட்டுப்படுத்த வீண் வதந்திகளை பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், மக்கள் அதிகம் கூடும் கடைவீதி போன்ற இடங்களில் ரோந்து பணியை தீவிரப்படுத்தி அவர்களின் அச்சத்தை போக்கவும் கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.
    • தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் இயங்கி வரும் ஒரே அரசு தொழிற்சாலை கன்யா ஸ்பின் கூட்டுறவு நூற்பாலை.

    தமிழ்நாட்டில் இயங்கி வரும் 6 ஆலையில் இதுவும் ஒன்று. இந்த ஆலையில் 94 நிரந்தர தொழிலாளர்களும், தினக்கூலியாக 206 பேரும் வேலை செய்து வருகிறார்கள். தற்போது ஆைல நிர்வாகம் பஞ்சு விலை அதிகரிப்பை காரணம் காட்டி பாதிக்குமேல் எந்திரங்களை நிறுத்திவிட்டது.

    மேலும் தொழி லாளர்களை விடுப்பு களை எடுத்துக் கொள்ளலாம் எனக் கூறி வேலைக்கு வரவேண்டாம் என கூறி வருகிறார்கள்.

    இந்த நிலையில் குறைந்த சம்பளத்துக்கு படிப்படியாக வடநாட்டு வாலிபர்களை வேலைக்கு அமர்த்த முயற்சி நடப்பதாக கூறப்படுகிறது.

    இதற்காக சிலருக்கு பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்கு கண்டனம் தெரிவித்து தி.மு.க., அ.தி.மு.க., சி.ஐ.டி.யு .தொழிற்சங்கம் ஆகியவை ஆலைக்கு முன்பு சி.ஜ.டி.யு. சங்க பொதுச் செயலாளர் சக்திவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    இதில் தி.மு.க. தொழில் சங்க பொதுச்செயலாளர் மகாராஜாபிள்ளை, மாவட்ட தலைவர்மாடசாமி மாநில தி.மு.க. தொழிற்சங்க பேரவை செயலாளர் இளங்கோ, அழகம்பெருமாள், நம்பி ராஜன் சி.ஐ.டி.யு. சங்க பொறுப்பாளர் வடிவேல், குமார், தாலுகா செயலாளர் மிக்கேல், அண்ணா தொழிற்சங்க செயலாளர் மாசானம் ஜெயக்குமார் உள்பட பலர் கொட்டும் மழையில் ஆண்களும், பெண்களும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அதன் பிறகு வட மாநில தொழிலாளர்கள் தங்கியிருக்கும் அறைக்கு முன்பு அவர்களை வெளியேறும் வரை காத்திருப்புப் போராட் டத்தில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகம் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு உள்ளூர் தொழிலாளர்களுக்கு உரிய வேலை வாய்ப்புகளை சரியான முறையில் வழங்க வேண்டும், வடமாநில தொழிலாளர்கள் உள்ளே புகுவதை நிறுத்த வேண்டு மென்று போராட்டக்காரர்கள் கோஷம் எழுப்பினர்.

    • மோட்டார் சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.
    • 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் ரேஷன் அரிசியை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு விற்பனை செய்யப்படுவதாக திருப்பூர் மாவட்ட குடிமை பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல்கள் கிடைத்தது.

    இந்தத் தகவலின் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் இசக்கி, கார்த்தி மற்றும் போலீஸ்காரர்கள் திருப்பூர் தாராபுரம் பகுதியில் ரோந்து பணியில் மேற்கொண்டனர். அப்போது தாராபுரம் மூலனூர் சாலையில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த ஒருவரை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அவரது மோட்டார் சைக்கிளில் 150 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது.

    தொடர்ந்து அவரிடம் விசாரித்த போது அவர் குளத்துப்பாளையம் குலுக்குப்பாளையம் பகுதியைச் சேர்ந்த உமாநாத் (வயது 47) என்பதும் மேலும் வீட்டில் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து அதிகாரிகள் அவரது வீட்டில் சோதனை செய்தனர். அப்போது அங்கு 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உமாநாத் பல்வேறு இடங்களில் இருந்து ரேஷன் அரிசியை குறைந்த விலைக்கு வாங்கி அதனை பதுக்கி வைத்து வட மாநில தொழிலாளர்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.

    ×