என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "லால் சலாம்"
- ’லால் சலாம்’ திரைப்படத்தில் தன்யா நடித்துள்ளார்.
- இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இவர் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பல வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியின்போது ஆர்.சி.பி அணிக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடி தன்யா பாலகிருஷ்ணா போட்ட பதிவு இணையத்தில் வைரலானது. அதுமட்டுமல்லாமல் தமிழர்களை இழிவுப்படுத்தியவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்படி வாய்ப்பு வழங்கலாம்? என நெட்டிசன்கள் சாடி வந்தனர்.
இந்நிலையில், மன்னிப்பு கேட்டு நடிகை தன்யா பாலகிருஷ்ணா சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "நான் செய்யும் தொழில் மேல் சத்தியம் கடந்த சில நாட்களாகச் சமூக வலைதளங்களில் தமிழர்களை இழிவு படுத்தும் விதமாக நான் கூறியதாகப் பகிரப்பட்டு வரும் கருத்து நான் கூறியதே அல்ல. 12 வருடம் முன்பு இது நடந்த போதே நான் இதைத் தெளிவுபடுத்த முயன்றேன்.. அதையே இப்பொழுதும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்..
அந்த பதிவை நான் பதிவிடவே இல்லை. அந்த ஸ்கீர்ன் ஷாட், ஒரு ட்ரோல் செய்யும் நபரால் உருவாக்கப்பட்டு பகிரப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக இதை ஆதாரபூர்வமாக நிரூபிக்க எவ்வளவு முயன்றும் என் சக்திக்கு உட்பட்டு என்னால் முடியவில்லை. இந்த 12 வருடங்கள், நான் இதைப் பற்றி பேசாமல் இருந்ததற்குக் காரணம் அந்த சம்பவம் நடந்த சமயத்தில் என் மீதும் என் குடும்பத்தின் மீதும் வந்த அச்சுறுத்தல்கள்தான். அதிலிருந்து விலகி இருப்பதே எனக்குச் சரி என்று பட்டது. இப்பொழுது இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் இதைத் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். அந்த கருத்து நான் கூறியதே அல்ல.
நான் என் சினிமா பயணத்தைத் துவங்கியதே தமிழ் சினிமாவில் தான். தமிழ் சினிமாவில் வேலை செய்ய வாய்ப்பு கிடைத்தமைக்கு நான் என்றும் நன்றி கடன் பட்டுள்ளேன். அப்பொழுதும் இப்பொழுதும் என் நெருங்கிய நண்பர்களில் பலரும் தமிழர்களே... அதனால் விளையாட்டுக்குக்கூட இப்படி ஒரு கருத்தை சொல்ல நான் என் கனவிலும் நினைக்க மாட்டேன். என் ஆரம்ப காலங்களில் தமிழ் சினிமா ரசிகர்களும் ஊடகங்களும் கொடுத்த ஆதரவே இத்தனை வருடம் தொடர்ந்து நடிக்க எனக்கு ஊக்கமாய் அமைந்திருக்கிறது.
மனிதாபிமான அடிப்படையிலும், நான் யாரையும் காயப்படுத்தும் விதத்தில் எந்த வித சொல்லையோ செயலையோ செய்யக்கூடியவள் அல்ல. இந்த சம்பவம் நடந்ததற்குப் பின் நான் சில தமிழ் திரைப்படங்களும் (ராஜா ராணி, நீதானே என் பொன் வசந்தம், கார்பன்) சில தமிழ் வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளேன். அப்போது இது போன்ற எதிர்வினைகள் எதுவும் நேரவில்லை.
சர்சைக்குரிய இந்த கருத்து என்னுடையது இல்லை என்றாலும், துரதிரஷ்டவசமாக என் பெயர் இதில் சம்மந்தப்படுத்தப்பட்டுவிட்டது.. அதனால் நான் தமிழ் மக்களிடம் முழு மனதாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். என் பெயரை வைத்து உங்களை காயப்படுத்தும் விதமாக நடந்த செயலுக்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த சர்ச்சையினால் திரு.ரஜினிகாந்த், ஐஷ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்கள் அனைவர்களுக்கும் ஏற்பட்ட சிரமங்களுக்கும் மனவுளைச்சலுக்கும் எனது மனவருத்தத்தை தெரிவித்து கொள்கின்றேன்.
நான் இதை செய்யவில்லை என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் இல்லாமல் தவித்துக்கொண்டு உங்கள் முன் இந்த கோரிக்கையை வைக்கிறேன். என் தொழில் மேல் சத்தியம் செய்து நான் கூறும் இந்த உண்மையை ஏற்று கொள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு..." என்று குறிப்பிட்டுள்ளார்.
- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் 'லால் சலாம்' திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
- இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. இந்த படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் ரஜினி நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தினை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் வெளியிடுகிறது. இப்படத்தில் நடிகை தன்யா பாலகிருஷ்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலும் இவர் கலந்து கொண்டார். இதைத்தொடர்ந்து பல வருடங்களுக்கு முன்பு ஐ.பி.எல். போட்டியின்போது ஆர்.சி.பி அணிக்கு ஆதரவாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாடி தன்யா பாலகிருஷ்ணா போட்ட பதிவு இணையத்தில் வைரலானது.
அதில், "அன்புள்ள சென்னை, நீங்கள் தண்ணீருக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். மின்சாரத்துக்காக பிச்சை எடுக்கிறீகள், நாங்கள் கொடுக்கிறோம். உங்களுடைய மக்கள் எங்களுடைய அழகான நகரத்துக்கு வந்து அதனை ஆக்கிரமித்து கொச்சைப் படுத்துகிறார்கள். டேய் உங்களுக்கு வெட்கமே இல்லையாடா?" என்று குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு அப்போது கடும் கண்டனங்கள் எழுந்ததையடுத்து இனி தமிழ் படங்களில் நான் நடிக்கமாட்டேன் என தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் அவருக்கு தமிழ் படங்களில் வாய்ப்புகளும் கிடைக்கவில்லை.
இந்நிலையில் தற்போது 'லால் சலாம்' படத்தில் தன்யா பாலகிருஷ்ணா நடித்துள்ளது இணையத்தில் பேசுப்பொருளாகியுள்ளது. மேலும், தமிழர்களை இழிவுப்படுத்தியவருக்கு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எப்படி வாய்ப்பு வழங்கலாம்? என நெட்டிசன்கள் சாடி வருகின்றனர். இதுகுறித்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தரப்போ அல்லது தன்யா பாலகிருஷ்ணா தரப்போ இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
- இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால், "நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். நான் 'லால் சலாம்' படம் பார்த்தது தெரிந்ததும் ரஜினி சார் என்னை பேச அழைத்தார். அவரிடம் இந்த மாதிரி ஒரு படம் செய்ததற்கு நான் ஒரு ரசிகனாக பெருமைப்படுகிறேன். இந்த தைரியம் யாருக்கும் வராது என்றேன். ரஜினி சார் படம் என்றாலே விசில் அடிக்க வேண்டும், கைத்தட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அது எல்லாமே இந்த படத்தில் அளவாக இருக்கிறது. யாரும் அதை மிஸ் செய்யமாட்டார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு ரஜினி சாருக்கு தலை வணங்குகிறேன்" என்றார்.
- ’லால் சலாம்’ திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இதில், தன் அப்பா சங்கி இல்லை என ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், 'லால் சலாம்' படத்தின் ஜூக் பாக்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், 'திமிறி எழுடா' என்கிற பாடலை மறைந்த பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது பாடியுள்ளனர். ஏ.ஜ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அவர்களின் குரலை 'லால் சலாம்' பாடலுக்கு பயன்படுத்தி புது டிரெண்டை உருவாக்கி இருக்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.
இந்த ஜூக் பாக்ஸை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், 'பாடகர்களான பம்பா பாக்யா மற்றும் சாகுல் ஹமீது குரலை அவர்களின் குடும்பங்களின் அனுமதியோடு தான் பயன்படுத்தினோம். இதற்கான தொகையும் கொடுத்துள்ளோம். தொழில்நுட்பத்தை சரியான வழியில் பயன்படுத்தினால் அது தொல்லை இல்லை" என குறிப்பிட்டுள்ளார்.
- பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை.
- லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு.
சென்னை:
சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
படப்பிடிப்பிற்காக ஆந்திர மாநிலம் கடப்பா செல்கிறேன்.
சங்கி என்பது கெட்டவார்த்தை இல்லை. சங்கி என்பது கெட்டவார்த்தை என ஐஸ்வர்யா எங்கேயும் சொல்லவில்லை.
அப்பா ஆன்மிகவாதி, எல்லா மதங்களையும் விரும்ப கூடியவர் என்றுதான் ஐஸ்வர்யா கூறினார். பட விளம்பரத்திற்காக எதுவும் இல்லை. லால் சலாம் படம் சூப்பரா வந்துருக்கு. படத்தில் மத நல்லிணக்கத்தை பற்றி சொல்லியிருக்கிறார்கள் என்றார்.
- சங்கி என்றால் "லால் சலாம்" படத்தில் பங்கேற்றிருக்க மாட்டார் என்றார் ஐஸ்வர்யா
- மோடி-அமித் ஷா ஜோடியை கிருஷ்ணர்-அர்ஜுனன் என நேரடியாக பாராட்டினார் ரஜினி
தமிழ் திரையுலகின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் பிப்ரவரி மாதம் திரைக்கு வரவிருக்கும் படம், "லால் சலாம்" (Lal Salaam). இத்திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று, (ஜனவரி 26), இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு நிகழ்ச்சி, சென்னையில் உள்ள சாய்ராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பேசிய ஐஸ்வர்யா, "என் தந்தையை சங்கி என சமூக வலைதளங்களில் விமர்சிக்கின்றனர். இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. ரஜினிகாந்த் சங்கி அல்ல. அவர் சங்கியாக இருந்திருந்தால், லால் சலாம் போன்ற திரைப்படத்தில் பங்கேற்கவே சம்மதித்திருக்க மாட்டார்" என தெரிவித்தார்.
மகள் ஐஸ்வர்யா இவ்வாறு பேசும் போது ரஜினிகாந்த் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.
"ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்" (RSS) எனும் அமைப்பிலிருந்து உருவானது இன்றைய பா.ஜ.க. ஆர். எஸ். எஸ். அமைப்பினை ஆதரிப்பவர்களை "சங்கி" என அதன் எதிர்ப்பாளர்கள் அழைக்கின்றனர்.
பா.ஜ.க. தலைவர்களுக்கும் ரஜினிகாந்திற்கும் நட்பு ரீதியான உறவை தாண்டி, அரசியல் ரீதியாக பிணைப்பு இருந்தது அனைவரும் அறிந்ததே.
தேசிய நதிநீர் இணைப்பு முயற்சியை பா.ஜ.க. முன்னெடுத்துள்ளதால் அக்கட்சிக்கே தனது வாக்கு என முன்னர் ஒரு பொதுத்தேர்தலின் போது ரஜினி தெரிவித்திருந்தார்.
சிவசேனா கட்சியின் நிறுவனர் பால் தாக்கரேவுடனான சந்திப்பின் போது, அவர் எனக்கு கடவுளை போன்றவர் என கூறினார்.
2016 பா.ஜ.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு முழு ஆதரவு தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடியை ரஜினி பாராட்டினார்.
குடியுரிமை திருத்த சட்டம் (Citizenship Amendment Act) கொண்டு வந்த போது அதனை வரவேற்று, "அதில் இஸ்லாமியர்கள் அச்சப்பட ஒன்றும் இல்லை" என கூறினார்.
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது குறித்து பேசும் போது, பிரதமர் மோடியையும், உள்துறை அமைச்சர் அமித் ஷாவையும், மகாபாரத அர்ஜுனர்-கிருஷ்ணர் என பாராட்டினார்.
மேலும், மோடிக்கு எதிராக அரசியலில் பல தலைவர்கள் ஒன்று சேர்ந்து எதிர்க்கும் போது, "பலர் ஒன்று சேர்ந்துதான் ஒருவரை எதிர்க்க முடியும் எனும் நிலை இருந்தால் அந்த ஒருவர்தானே பலசாலி" என மோடியை நேரடியாக புகழ்ந்தார்.
2021ல் பா.ஜ.க. அரசு, ரஜினிகாந்தின் நீண்டகால திரைத்துறை பங்களிப்பிற்கு அவருக்கு சினிமாத்துறையின் புகழ் பெற்ற உயரிய தாதா சாகேப் பால்கே விருதை வழங்கி கவுரவித்தது.
புகை மற்றும் மது ஆகியவற்றின் தீமைகள் குறித்து பேசும் போது, உடலாரோக்கியத்தை காக்க, அசைவ உணவிலிருந்து விலகி இருக்கும்படி கேட்டுக் கொண்டார்.
உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களின் கால்களில் விழுந்து ரஜினி ஆசி பெற்றார். அதை விமர்சித்தவர்களுக்கு, "அதில் தவறில்லை" என பதிலளித்திருந்தார்.
தற்போது உ.பி.யின் அயோத்தியில் பகவான் ஸ்ரீஇராமர் திருக்கோயில் கும்பாபிஷேகத்திற்கு நேரில் சென்றிருந்தார்.
இப்பின்னணியில், தனது திரைப்படங்கள் வெளியாகும் சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதும், அதன் மூலம் திரைப்பட வெற்றியை அதிகரிக்க வழிகோலுவதும் ரஜினிகாந்திற்கு வழக்கமான ஒன்று என அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்படுவதுண்டு.
இம்முறை, தான் அதிகம் பேசாமல், தனது மகளின் உரையின் மூலம் அதை நடத்தி கொள்ள முயல்வதாகவும், தான் "சங்கி அல்ல" என காட்டிக் கொண்டு அதன் மூலம் சங்கி எதிர்ப்பாளர்களின் புறக்கணிப்பை சமாளிக்க திட்டமிடுவதாகவும், சமூக வலைதளங்களில் பயனர்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர்.
- ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
- இந்த திரைப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்நிலையில், 'லால் சலாம்' படத்தில் இடம்பெற்றுள்ள 'ஜலாலி' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சரத் சந்தோஷ் பாடியுள்ள இந்த பாடலில் 'ஏய் நீ ஆட்டாத வால்.. கிட்ட வந்தா நீ ஹலால்' போன்ற வரிகள் இடம்பெற்றுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
- 'லால் சலாம்' படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
- நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி.
ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள புதிய படம் 'லால் சலாம்'. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ளார். விக்ராந்த், விஷ்ணு விஷால், கே.எஸ்.ரவிக்குமார், ஜீவிதா உள்ளிட்ட பலா் நடித்துள்ளனர். இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த படம் அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. 'லால் சலாம்' படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை தாம்பரத்தில் நேற்று இரவு நடந்தது.
இந்த விழாவில் ரஜினிகாந்த், விக்ராந்த், விஷ்ணு விஷால், தனுஷ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இயக்குனர்கள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ், நெல்சன், தயாரிப்பாளர் தானு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பேசியதாவது:-
இது ஒரு வித்தியாசமான கதைக்களம் கொண்ட படம். 'லால் சலாம்' படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
நான் எனது தந்தையை பற்றி சமீபத்தில் அடிக்கடி கேட்கும் வார்த்தை சங்கி. எனக்கு இந்த வார்த்தையை கூறும்போது மிகவும் கோபமாக இருந்தது. இதை நான் உங்களிடம் சொல்ல வேண்டும், எனது தந்தை சங்கி இல்லை, அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவர் சங்கியாக இருந்தால் 'லால் சலாம்' படத்தில் இருக்க மாட்டார்.
இவ்வாறு அவர் பேசினார்.
மகளின் பேச்சை கேட்ட ரஜினிகாந்த் உணர்ச்சி வசப்பட்டு கண் கலங்கி போனார்.
- தற்போது விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுவது மிகவும் கவலை அளிக்கிறது.
- விஜயை போட்டியாக நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கவுரவம் ஆகாது.
லால் சலாம் பட இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில கலந்து கொண்ட ரஜினி காந்த் பேசியதாவது:-
விஜய் என் கண்ணுக்கு முன்னால வளர்ந்த பையன். தர்மத்தின் தலைவன் சூட்டிங்போது விஜய்க்கு 13, 14 வயசு இருக்கும். சூட்டிங்கை பார்த்துக் கொண்டிருந்தார். சூட் முடிஞ்சதும் சந்திரசேகர் அறிமுகப்படுத்தினார்.
"என் பையன். நடிப்புல ரொம்ப ஆர்வம் இருக்கு. படித்த முடித்த பிறகு நடிக்கலாம் என நீங்க சொல்லுங்க" எனத் தெரிவித்தார். நான் விஜயிடம் "நல்லா படிப்பா. அதன்பின் நடிகர் ஆகலாம் என்று சொன்னேன்.
அதன்பின் விஜய் நடிகராகி, படிப்படியாக அவருடைய டிசிப்ளின், திறமை, உழைப்பால் தற்போது இந்த உயர்வான இடத்துல இருக்கிறார். சமூக சேவை செய்து வருகிறார். அடுத்து அரசியல்... இதுல எனக்கும் விஜய்க்கும் போட்டி என சொல்வது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கிறது.
தயவு செய்து ரெண்டு பேரின் ரசிகர்களும் எங்களை ஒப்பிட வேண்டாம். ஒப்பிடுவதை நிறுத்துங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்.
நான் கூறிய காக்கா- கழுகு கதை விஜயை விமர்சித்து கூறியதாக பலர் தவறாக புரிந்து கொண்டனர். விஜயை விமர்சித்ததாக சமூக வலைத்தளங்களில் பேசுபொருளானது வருத்தம் ஏற்படுத்தியது.
விஜய் படிப்படியாக வளர்ந்து பெரிய நடிகராக உயர்ந்திருக்கிறார். விஜய்க்கும் எனக்கும் போட்டியில்லை. எனக்கு நானே போட்டி. விஜய்க்கும் எனக்கும் போட்டி என கூறுகின்றனர். எனக்கு என் படங்களே போட்டி. அவருக்கு அவரே போட்டி. விஜயை போட்டியாக நினைப்பதோ, என்னை அவர் போட்டியாக நினைப்பதோ இருவருக்கும் கவுரவம் ஆகாது.
என்றும் நான் விஜயின் நலம் விரும்பியாக இருப்பேன்.
இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.
- ரஜினிகாந்த் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
- இந்த படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார்.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா 26-ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது. இதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், ரஜினியின் குட்டி கதைக்கு ரெடியாகும் படி குறிப்பிட்டுள்ளது.
Celebration awaits! ?✨ Join us for the star-studded GRAND AUDIO LAUNCH EVENT of Lal Salaam this Friday, Jan 26 ?️ at Sri Sairam Institute of Technology, Chennai. ? Get ready for another classic album from our 'Isaipuyal' AR Rahman & of course our Thalaivar's Kutty Kadhai!… pic.twitter.com/600UiDCiD4
— Lyca Productions (@LycaProductions) January 23, 2024
- விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
- இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலீஸ் தேதி பிப்ரவரி 9-ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், 'லால் சலாம்' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தின் டப்பிங் பணியை நடிகர் விஷ்ணு விஷால் முடித்துள்ளார். இதனை அவர் தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து அறிவித்துள்ளார். மேலும், "தலைவரின் நடிப்பு பிரமிக்க வைக்கிறது. இது ஒரு சிறந்த திரைப்படமாக இருக்கும். பிப்ரவரி 9-ஆம் தேதி உங்கள் அனைவரையும் திரையரங்குகளில் பார்ப்பதில் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த படத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.
- கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ள திரைப்படம் ‘லால் சலாம்’.
- இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.
இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பொங்கலுக்கு திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது பின்னர் ஒரு சில காரணங்களால் பிப்ரவரி 9-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு தெரிவித்திருந்தது.
லால் சலாம் போஸ்டர்
இந்நிலையில், இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, 'லால் சலாம்' திரைப்படத்தின் இரண்டாவது பாடல் 15-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு போஸ்டரை பகிர்ந்து அறிவித்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.
Get ready to stroll through the rural musical streets! ? LAL SALAAM's 2nd single, drops this Monday, 15th Jan! Stay tuned for this soulful melody! ?✨
— Lyca Productions (@LycaProductions) January 13, 2024
An @arrahman musical ?
Lyrics ✍? @KaviKabilan2
Singer ? @sidsriram
Music on @SonyMusicSouth ??#LalSalaam ?… pic.twitter.com/XlhLpvorJb
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்