search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "67 ஆயுள் கைதிகள் விடுதலை"

    • அடுக்குமாடி குடியிருப்பில் 67 பேருக்கு வீடு ஒதுக்கீடு ஆணையை கலெக்டர் வழங்கினார்.
    • வீடு கட்டிக்கொள்வதற்கான பணி ஆணைகளையும் கலெக்டர் வழங்கினார்

    கரூர்:

    தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டி முடிக்கப்பட்டுள்ள ரூ.270.15 கோடியிலான 9 அடுக்குமாடி திட்டப் பகுதிகளை திறந்து வைத்து நகர்ப்புற பகுதிகளில் ரூ.2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகளே வீடு கட்டிக் கொள்ள பணி ஆணைகளை நேற்று வழங்கினார்.

    அதனை தொடர்ந்து, கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடந்த நிகழ்ச்சியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பாக, 67 பேருக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீடுக்கான ஆணைகளையும், 348 பேருக்கு வீடு கட்டிக்கொள்வதற்கான பணி ஆணைகளையும் மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார்.

    தொடர்ந்து அவர் பேசியது, கரூர் மாநகராட்சி சணப்பிரட்டியில் ரூ.16.08 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 192 வீடுகளில் 67 பேருக்கு குடியிருப்பு ஒதுக்கீடு ஆணைகளையும், மாவட்டத்தின் நகர்ப்புறப் பகுதிகளில் சொந்த வீட்டுமனை வைத்திருந்து கான்கிரீட் வீடு இல்லாதவர்கள்,

    ரூ.3 லட்சத்திற்கு குறைவான ஆண்டு வருவாய் உள்ள 348 பேருக்கு ரூ.2.10 லட்சம் மானியத்துடன் பயனாளிகளே வீடு கட்டிக்கொள்வதற்கான பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன என்றார்.

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் கைதிகள் விடுதலையை சட்டசபையில் அறிவிக்காதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். #TNAssembly #DMK #MKStalin
    சென்னை:

    தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் அனுபவித்தவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி முதல் கட்டமாக 27.5.2018 அன்று 10 வருடங்கள் நிறைவு பெற்ற 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சனை இன்று சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது.

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சட்டசபை நடைபெறும் போது இந்த சபையில் அதை தெரிவிக்காமல் வெளியே செய்தியாக வெளியிடுவது மரபுதானா என்பதை அறிய விரும்புகிறேன். 67 பேர் விடுதலை செய்யப்படுவதை நான் வரவேற்கிறேன். என்றாலும் மரபுபடி அதை சட்டமன்றத்தில் அறிவித்து இருக்க வேண்டும்.

    அமைச்சர் சி.வி.சண்முகம்:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்கனவே முதல்-அமைச்சர் பரிந்துரைத்தபடி நீண்டநாள் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.


    என்றாலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு சிறையிலும் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் விசாரணை நடத்தி அவர்களின் உடல்நிலை, தண்டனை அனுபவித்த காலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

    அரசியல் சட்டப்படி கவர்னர் பரிந்துரையின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இது தொடர் நடவடிக்கை. எனவே இந்த விடுதலை பற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    மு.க.ஸ்டாலின்:- இவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்வதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. தொடர் நடவடிக்கை என்றாலும் அவர்கள் விடுதலை செய்யப்படுவது இதுதான் முதல்முறை. எனவே சட்டமன்றத்தில் இதை அறிவிக்காதது மரபு அல்ல.

    அமைச்சர் சி.வி.சண்முகம்:- கடந்த காலங்களில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மொத்தமாக அறிவிக்கப்படும்.

    தற்போது ஒவ்வொரு கைதியாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவதால் மொத்தமாக யாரையும் விடுவிக்க முடியாது. அது முதல் கட்டம். தொடர்ந்து இன்னும் பலர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நடவடிக்கை தொடங்கி விட்டதால் சபையில் அறிவிக்கவில்லை.

    சபாநாயகர் தனபால்:- கைதிகள் விடுதலையை தொடர் நடவடிக்கை என அமைச்சர் கூறிவிட்டார். எனவே இதுகுறித்து மேலும் விவாதிக்க வேண்டாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #DMK #MKStalin
    ×