search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MGR Centenary Function"

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளதாக திருநாவுக்கரசர் கண்டனம் தெரிவித்துள்ளார். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    சென்னை:

    சிவாஜி கணேசன் பிறந்த நாள் விழா சத்தியமூர்த்தி பவனில் இன்று நடந்தது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் சிவாஜி கணேசன் படத்துக்கு மரியாதை செலுத்தினார். இதில் மூத்த தலைவர் குமரி அனந்தன், மகளிர் காங்கிரஸ் தலைவி ஜான்சி ராணி, தணிகாசலம், சிரஞ்சீவி, முன்னாள் எம்.பி. ராணி, மாவட்ட தலைவர்கள் வீர பாண்டியன், சிவராஜசேகர் உள்ளிட்டோரும் மரியாதை செலுத்தினார்கள்.

    பின்னர் திருநாவுக்கரசர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    உலக அளவில் புகழ் பெற்ற நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மிகச்சிறந்த தேசியவாதி. அவரது பெயர் என்றும் நிலைத்திருக்கும். அவருக்கு மரியாதை செலுத்துவதில் காங்கிரஸ் பெருமைப்படுகிறது.

    நேற்று அரசு சார்பில் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆருக்கு நடத்தப்பட்ட விழா அவருக்கு புகழ் சேர்க்கும் விழா அல்ல. ஒரு சம்பிரதாய சடங்காக நடத்தி இருக்கிறார்கள். எம்.ஜி.ஆரால் ஈர்க்கப்பட்டவர்கள் யாரும் அந்த விழாவுக்கு அழைக்கப்படவில்லை.

    எம்.ஜி.ஆர். புகழை அவர்கள் பரப்பவும் இல்லை. நந்தனம் திடலில் வெறும் 20 ஆயிரம் பேர்தான் அமர முடியும். அதற்கே அரசு பேருந்துகளை தவறாக பயன்படுத்தி உள்ளனர். என்றாலும், கூட்டம் சேர்க்க முடியவில்லை. இந்த விழா அரசு செலவில் எதிர்கட்சிகளை வசைபாடும் விழாவாகவே நடத்தப்பட்டுள்ளது.


    காங்கிரஸ்-தி.மு.க. கூட்டணி பற்றி பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்தது, விரக்தியின் வெளிப்பாடு. பா.ஜனதாவுடன் கூட்டணி சேர கட்சி கிடைக்காததால் புலம்புகிறார். தமிழகத்தில் பா.ஜனதா என்ற கட்சியே இல்லை.

    தமிழர்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்தது என்று 5 வருடத்துக்கு முன்பு நடந்த பழங்கதையை மீண்டும் ஏன் பேச வேண்டும். நாலரை ஆண்டுகளில் மோடி செய்தது என்ன? பா.ஜனதாவின் மோசமான ஆட்சியால் ஒட்டு மொத்த இந்திய மக்களும் வெறுப்பில் இருக்கிறார்கள். தேர்தல் வரும்போது பாடம் புகட்டுவார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மகளிர் காங்கிரஸ் துணை தலைவி மைதிலிதேவி, கஜநாதன், டிராஸ்ளின் பிரகாஷ், சந்திரசேகர், ஓட்டேரி தமிழ் செல்வன் கராத்தே ரவி, அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக அடையாறில் உள்ள சிவாஜி கணேசனின் மணிமண்டபத்தில் வைக்கப்பட்டிருந்த சிவாஜி படத்துக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் மலர்தூவி மரியாதை செலுத்தினார். இதில் எச்.வசந்தகுமார் எம்.எல்.ஏ., மாவட்ட தலைவர் கராத்தே தியாகராஜன், ஸ்ரீராம், மாம்பலம் ராஜேந்திரன், சித்ரா கிருஷ்ணன், நாச்சிக்குளம் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #Congress #Thirunavukkarasar #MGRCentenaryFunction
    எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி மேலும் 1,189 ஆயுள் தண்டனை கைதிகளை விடுவிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. #MGRcentenaryfunction
    சென்னை:

    எம்.ஜி.ஆரின் 100-வது பிறந்தநாளையொட்டி, தமிழக சிறைகளில் 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சட்ட விதிகளுக்கு உட்பட்டு 10 ஆண்டுகள் எந்தவித புகாரும் இல்லாத ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ஆயுள் தண்டனை பெற்றவர்களின் ஜெயில் நடவடிக்கைகள் திருப்தி அளித்தால் மட்டுமே, அவர்களுக்கு தகுந்த ஆய்வுக்குப் பிறகு விடுதலை அளிக்கப்படுகிறது.

    சில ஆயுள் தண்டனை கைதிகள் 20 ஆண்டுகளாக ஜெயிலில் உள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. அவர்களுடைய உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு மாநில மருத்துவ குழு பரிந்துரைப்படி விடுதலை செய்யப்படுகிறார்கள்.

    தமிழ்நாட்டில் மொத்தம் 138 சிறைச்சாலைகள் உள்ளன. இதில் பெண்களுக்காக 5 சிறப்பு மாவட்ட சிறைச்சாலைகள் உள்ளன. 10 மாவட்ட சிறைச்சாலைகள், 38 சப்-ஜெயில் ஆண்களுக்காகவும், 8 சப்-ஜெயில்கள் பெண்களுக்காகவும் உள்ளன. பெண்களுக்காக 2 சிறப்பு ஜெயில்கள் இருக்கின்றன. சிறுவர்களுக்காக 12 சீர்திருத்த பள்ளிகளும் 3 திறந்தவெளி ஜெயில்களும் உள்ளன.



    தமிழகத்தில் உள்ள ஜெயில்களில் மொத்தம் 22 ஆயிரத்து 792 பேரை அடைத்து வைக்கும் வசதி உள்ளது. தற்போது இந்த சிறைச்சாலைகளில் 16 ஆயிரம் பேர் உள்ளனர்.

    ஆயுள் தண்டனை கைதிகளில் இந்த ஆண்டு பிப்ரவரி 25-ந்தேதி வரை 10 ஆண்டு நிறைவு செய்தவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இதில் 60 வயது ஆனவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் முதலில் விடுதலை அளிக்கப்பட்டது.

    இதுவரை தமிழக ஜெயில்களில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த 311 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வரும் மாதங்களில் 1,189 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர். #MGRcentenaryfunction
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி திருச்சி மத்திய சிறையில் இருந்து இன்று 10 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். #MGRcentenary
    திருச்சி:

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் ஆயுள் தண்டனை கைதிகளில் முதல் கட்டமாக 67 கைதிகள் விடுவிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடந்த 6-ந்தேதி சென்னை புழல் சிறைச்சாலையில் 10 ஆண்டுகள் தண்டனை காலம் நிறைவு பெற்ற 67 ஆயுள் கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.

    இந்தநிலையில் எம்.ஜி. ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. அதன்படி சென்னை புழல் மத்திய சிறையில் 44 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் என 52 பேரும் இதர சிறைச்சாலைகளில் இருந்து 16 பேரும் என மொத்தம் 68 கைதிகளை விடுதலை செய்ய உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு பெற்ற தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த திவாகர், ராஜா, பிச்சுமணிவேலு, அய்யனார், கணேசன், புகழேந்தி, பால்ச்சாமி, ரவிசங்கர், குமார், சின்னதம்பி ஆகிய 10 பேர் இன்று காலை விடுதலை செய்யப்பட்டனர்.

    அவர்களை திருச்சி சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. சண்முக சுந்தரம், எஸ்.பி., நிகிலா நாகேந்திரன் ஆகியோர் பல்வேறு அறிவுரைகள் வழங்கி வழியனுப்பி வைத்தனர். 10 பேரையும் அழைத்து செல்ல அவர்களது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சிறை முன்பு குவிந்திருந்தனர். பின்னர் அவர்களை கட்டித்தழுவி மகிழ்ச்சியுடன் அங்கிருந்து அழைத்து சென்றனர்.

    இது பற்றி விடுதலையான கைதிகளின் உறவினர்கள் கூறும் போது, தமிழக அரசு எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி மேலும் 68 கைதிகளை விடுதலை செய்யப்போவதாக அறிவித்த தகவல் எங்களுக்கு நேற்றிரவுதான் தெரியவந்தது. இதில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த எங்களது உறவினர்கள் விடுதலை செய்யப்படுவதை அறிந்து மிக்க மகிழ்ச்சியடைந்தோம்.

    இதையடுத்து அவர்களை அழைத்து செல்வதற்காக நேற்றிரவே திருச்சி மத்திய சிறைக்கு வந்து விட்டோம். விடுதலையான எங்களது உறவினர்கள் நல்வாழ்வு வாழ்வதற்கான உதவிகளை செய்து கொடுப்போம். அரசும் உதவவேண்டும் என்றனர்.

    ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டு காலம் நிறைவு செய்த கைதிகள் மேலும் ஏராளமானோர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களையும் விடுதலை செய்ய வேண்டுமென அவர்களது குடும்பத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர். #MGRcentenary
    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, தமிழக சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ள 67 ஆயுள் தண்டனை கைதிகளின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளது. #MGRcentenaryfunction #PrisonersList
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடின.

    இதற்கிடையே, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்படவுள்ள 67 ஆயுள் தண்டனை கைதிகளின் பெயர் பட்டியலை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. நன்னடத்தை குழு பரிந்துரையின்படி கைதிகள் 67 பேரை விடுவிக்கவுள்ளது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. #MGRcentenaryfunction #PrisonersList
    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 67 ஆயுள் கைதிகள் விடுதலையை சட்டசபையில் அறிவிக்காதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வியெழுப்பினார். #TNAssembly #DMK #MKStalin
    சென்னை:

    தமிழக சிறைகளில் ஆயுள் தண்டனை பெற்று 10 ஆண்டுகள் அனுபவித்தவர்களை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

    அதன்படி முதல் கட்டமாக 27.5.2018 அன்று 10 வருடங்கள் நிறைவு பெற்ற 67 ஆயுள் தண்டனை கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது. இந்த பிரச்சனை இன்று சட்டசபையில் விவாதத்துக்கு வந்தது.

    சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் எதிர்க்கட்சி தலைவர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது:-

    எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஆயுள் தண்டனை பெற்ற 67 பேர் விடுதலை செய்யப்படுவதாக தமிழக அரசு இன்று செய்தி வெளியிட்டுள்ளது. சட்டசபை நடைபெறும் போது இந்த சபையில் அதை தெரிவிக்காமல் வெளியே செய்தியாக வெளியிடுவது மரபுதானா என்பதை அறிய விரும்புகிறேன். 67 பேர் விடுதலை செய்யப்படுவதை நான் வரவேற்கிறேன். என்றாலும் மரபுபடி அதை சட்டமன்றத்தில் அறிவித்து இருக்க வேண்டும்.

    அமைச்சர் சி.வி.சண்முகம்:- எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி ஏற்கனவே முதல்-அமைச்சர் பரிந்துரைத்தபடி நீண்டநாள் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுதலை செய்வது குறித்து ஏற்கனவே முடிவு எடுக்கப்பட்டு இருக்கிறது.


    என்றாலும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி குழு அமைக்கப்பட்டு ஒவ்வொரு சிறையிலும் உள்ள ஆயுள் தண்டனை கைதிகளிடம் விசாரணை நடத்தி அவர்களின் உடல்நிலை, தண்டனை அனுபவித்த காலம் ஆகியவற்றை கணக்கில் கொண்டு அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள்.

    அரசியல் சட்டப்படி கவர்னர் பரிந்துரையின் பேரில் அவர்கள் விடுதலை செய்யப்படுகிறார்கள். இது தொடர் நடவடிக்கை. எனவே இந்த விடுதலை பற்றி அரசு அறிவிப்பு வெளியிட்டது.

    மு.க.ஸ்டாலின்:- இவர்களை சிறையில் இருந்து விடுதலை செய்வதில் எங்களுக்கு கருத்து வேறுபாடு இல்லை. தொடர் நடவடிக்கை என்றாலும் அவர்கள் விடுதலை செய்யப்படுவது இதுதான் முதல்முறை. எனவே சட்டமன்றத்தில் இதை அறிவிக்காதது மரபு அல்ல.

    அமைச்சர் சி.வி.சண்முகம்:- கடந்த காலங்களில் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை மொத்தமாக அறிவிக்கப்படும்.

    தற்போது ஒவ்வொரு கைதியாக விசாரிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுவதால் மொத்தமாக யாரையும் விடுவிக்க முடியாது. அது முதல் கட்டம். தொடர்ந்து இன்னும் பலர் விடுதலை செய்யப்பட இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த நடவடிக்கை தொடங்கி விட்டதால் சபையில் அறிவிக்கவில்லை.

    சபாநாயகர் தனபால்:- கைதிகள் விடுதலையை தொடர் நடவடிக்கை என அமைச்சர் கூறிவிட்டார். எனவே இதுகுறித்து மேலும் விவாதிக்க வேண்டாம்.

    இவ்வாறு விவாதம் நடந்தது. #TNAssembly #DMK #MKStalin
    எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவையொட்டி, 10 ஆண்டுகள் நிறைவு செய்த 67 ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. #MGRcentenaryfunction
    சென்னை:

    முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் கொண்டாடப்பட்டு வருகிறது. இதற்காக ஆளும் அதிமுக அரசு பல்வேறு நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் என ஏற்பாடு செய்து மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரின் புகழ்பாடின.

    இந்நிலையில், எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், 25.02.18 அன்று 10 ஆண்டுகள் நிறைவு செய்த ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்யவுள்ளதாகவும், உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, அரசியலமைப்பு சட்டத்துக்கு உட்பட்டு அவர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #MGRcentenaryfunction
    ×