search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கூரை"

    • மேற்கூரை பெயர்ந்து விழுந்து மருத்துவ கருவிகள் சேதம் அடைந்தது.
    • அந்த வார்டின் வெளிப்புற ஜன்னலின் மேற்கூரை பூச்சும் பெயர்ந்து விழுந்தது.

    மதுரை

    மதுரை கோரிப்பாளையத்தில் அரசு  மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்குள்ள கட்டிடங்கள் பழமையானவை ஆகும்.

    மதுரையில் சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள சில கட்டிடங்களில் கீறல் விழுந்துள்ளது. அவற்றை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    இருந்தபோதிலும் அந்த கட்டிடங்கள் புனரமைக்கப்படவில்லை. மதுரை அரசு ஆஸ்பத்திரி 3-வது தளத்தில் உள்ள 90-வது வார்டு பகுதியில் புற்றுநோய் அறுவை சிகிச்சை பிரிவு இயங்கி வருகிறது. அங்கு மேற்கூரை பெயர்ந்து விழுந்தது. இதில் லேப்ரோஸ்கோப் உள்ளிட்ட மருத்துவ கருவிகள் சேதம் அடைந்தன.

    மேலும் அந்த வார்டின் வெளிப்புற ஜன்னலின் மேற்கூரை பூச்சும் பெயர்ந்து விழுந்தது. இதில் அங்கு பொருத்தப்பட்டிருந்த குடிநீர் பைப் உடைந்து தண்ணீர் வெளியேறியது. இதே போல குழந்தைகள் வார்டிலும் மேற்கூரை பூச்சுகள் பெயர்ந்து விழும் நிலையில் உள்ளன.

    இந்த விபத்துக்களால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இது குறித்து ஆஸ்பத்திரி நிர்வாகத்திடம் கேட்டபோது, இட நெருக்கடி காரணமாக வார்டுகளை மாற்றி அமைப்பதில் சிரமங்கள் உள்ளது. புனரமைப்பு செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்என்று தெரிவித்தனர்.

    தென் தமிழகத்தில் எளிய மக்களின் மருத்துவ தேவையை பூர்த்தி செய்யும் மதுரை அரசு மருத்துவமனையின் கட்டிடங்களை முறையாக பராமரித்து, நோயாளிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் இரும்பிலான செட் அமைத்து அதில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர்.
    • இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தினக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையை அடுத்த தலைஞாயிறு ஊராட்சிக்கு உட்பட்ட மன்னிப்பள்ளம் கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பயின்று வந்தனர்.

    இந்தப் பள்ளி கட்டப்பட்டு 50 வருடங்களுக்கு மேலாகி விட்டது. இதனை சரிவர பராமரிக்காததால் அதன் மேற்கூரை பள்ளியில் மாணவ- மாணவிகள் வகுப்பில் இருக்கும்போதே இடிந்து விழுந்து வருவது வாடிக்கையாகி விட்டது. இதனால் மாணவ, மாணவிகள் அச்சமடைந்து தங்களது பெற்றோரிடம் சென்று கூறியதால் தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர்.

    இதையறிந்த பள்ளி ஆசிரியர்கள் தங்களது சொந்த செலவில் பள்ளி வளாகத்தில் இரும்பிலான செட் அமைத்து அதில் மாணவ, மாணவிகளுக்கு பாடம் நடத்தி வருகின்றனர். பள்ளி மேற்கூரை இடிந்து விழுந்து வருவதால் சில பெற்றோர் தங்கள் குழந்தைகளை அருகிலுள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் சேர்த்து விட்டனர்.

    இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் பலர் தினக் கூலி வேலை செய்து வருகின்றனர்.

    ஏழை குடும்பத்தை சேர்ந்தவர்கள் தங்களது வருமானத்திற்கு அதிகமாக செலவு செய்து பிள்ளைகளை படிக்க வைக்க முடியவில்லை. அவர்களால் நீண்ட தூரம் சென்று குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவது மிகவும் சிரமமாக உள்ளதாகவும் வேதனை தெரிவித்தனர். இந்த பள்ளி கட்டிடத்தை புதியதாக கட்டித்தர சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், கிராம மக்கள் சாலை மறியலிலும் செய்துள்ளனர்.

    ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் பள்ளியை ஆய்வு செய்து புதிய கட்டிடம் நடவடிக்கை எடுக்க வேண்டும் மாணவ-மாணவிகளின் பெற்றோர் மற்றும் கிராமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இப்பள்ளியில் நூலகம் அமைத்து தரவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மேற்கூரை, ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.
    • குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ள நிலையில் உடனடியாக நடவடிக்கை எடுத்து கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்டம் வெளி ப்பாளையம் அருகே காடம்பாடியில் நகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்குள்ள குழந்தைகள் அங்கன்வாடி கட்டிடம் கடந்த 2010-11 ஆம் ஆண்டு எம்.எல்.ஏ. மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்டது. ஒப்பந்தக்காரர் மூலம் கட்டப்பட்ட இக்கட்டிடம் தரமாக கட்டப்பட்டதா? என்ற கேள்வி எழுந்து உள்ள நிலையில் இக்கட்டிடம் மேற்கூரை மற்றும் ஸ்லாப் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காரைகள் பெயர்ந்து விழும் அபாய நிலையில் உள்ளது.

    இங்கு 5 வயதுக்குட்பட்ட 37 குழந்தைகள்படித்து வருகின்றனர். குழந்தை களின் பாதுகாப்பு கேள்வி க்குறியாகி உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் அரசும் உடனடி யாக நடவடிக்கை எடுத்து விபத்து நடக்கும் முன்பாக கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • ரவி காம்ப்ளக்சில் மளிகை கடை, செல்போன் கடை, சலூன் மற்றும் சிப்ஸ் தயாரிக்கும் கடைகள் உள்ளது.
    • ஒரே பகுதியில் நான்கு கடைகளில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவினாசிபாளையம் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான ரவி காம்ப்ளக்ஸ் உள்ளது. இந்த காம்ப்ளக்சில் மளிகை கடை, செல்போன் கடை, சலூன் மற்றும் சிப்ஸ் தயாரிக்கும் கடைகள் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு இந்த கடைகளின் மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் சீட்டுகளை உடைத்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் செல்போன் கடையில் இருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம், மளிகை கடையில் இருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் மற்றும் சோப்பு ஆகியவற்றையும், சிப்ஸ் தயாரிக்கும் கடையிலிருந்து ரூ. 1500 ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து செல்போன் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி(33) கொடுத்த புகாரியின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    ஒரே பகுதியில் தொடர்ந்து நான்கு கடைகளில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • வீட்டின் உள்ளே இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலையில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • அன்பழகிக்கு கையில் பலத்த காயம் மற்றும் அவரது மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் மேலத் தெருவில் வசித்து வருபவர் அன்பழகி(வயது48). இவர் கணவனை இழந்து தனது மாற்றுத்திறனாளி பெண் விஜயகுமாரியுடன் வசித்து வருகிறார் .இவர்கள் 1990-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் உள்ளே இருவரும் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

    இதில் அன்பழகிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டு தாய், மகள் இருவரையும் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், வருவாய் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீடு சேதமடைந்த நிலையில் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது.இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளதாக அங்கு வசிப்பவர்கள் கூறினர். எனவே அரசு சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது.
    • 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.

    குடிமங்கலம்,

    திருப்பூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் முத்தூர், வெள்ளகோவில், குட்டப்பாளையம், கீரனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், ருத்ராபாளையம் பகுதிகளில் திறக்கப்பட்டன.அதற்கு பிறகு அலங்கியம் உட்பட தாராபுரம் தாலுகாவில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

    காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது. விதை நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்கின்றன. மற்ற நெல்லை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.இந்தாண்டு சன்ன ரகம் நெல் கிலோ 21.65 ரூபாய், மோட்டா ரகம் 21.15 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது .ஆன்லைன்பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால்விவசாயிகள்தனியார் வியாபாரிகளுக்கு கிலோ 13 முதல் 15 ரூபாய்க்கு நெல்லை வழங்கினர். ஆன்லைன் பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால் சில நாட்கள் காத்திருந்த பிறகே நெல் மூட்டைகளை வழங்க முடிந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய மேற்கூரை வசதியில்லை. மாறாக திறந்தவெளி களத்தில் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. பாலிதீன் சாக்குகளால் மூடி வைத்து பாதுகாத்தனர்.அப்படியிருந்தும் எதிர்பாராத திடீர் மழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமாகின. எனவே நிரந்தரமான மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வசதிக்கு தகுந்தபடி 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இறுதியாக ருத்ராபாளையத்தில் இன்னும் கொள்முதல் நடந்து வருகிறது.இதுவரை21 ஆயிரத்து 102 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. போதிய பாலிதீன் சாக்குகளால் மூடப்பட்டிருந்ததால் மழையால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

    உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவை காட்டிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆன்லைன் பதிவால் காலதாமதம் ஏற்பட்டது. நெல் கொள்முதல் மையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமாகின்றன. வேலை உறுதி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் கூடுதலாகநெல் மூட்டைகள் அடுக்கும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் அமைக்கலாம். கிடங்குகள் விரைவில் நிரம்பிவிட்டால் வெட்ட வெளியில் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் இருப்பு மையங்களை படிப்படியாக அமைத்து வைக்க வேண்டும்என்றார்.

    ×