search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கூரை"

    • பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.
    • இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புளியம்பட்டி:

    ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமாக பஸ் ஸ்டாண்ட், கோவை சாலை, பவானிசாகர் சாலை உள்ளி ட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.

    இவற்றில் கோவை சாலையில் உள்ள 20-க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு 40 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. பராமரிப்பு இல்லாததால் கடைகளின் மேற்கூரை சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இருந்தது.

    நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையில் திருநெல்வேலியைச் சேர்ந்த வல்லரசு என்பவர் செல்போன் மற்றும் உதிரி பாகங்கள் விற்பனை செய்து வந்தார்.

    இந்நிலையில் சம்பவத்தன்று வல்லரசுவின் செல்போன் கடையின் மேற்கூரை திடீரென இடி ந்து விழுந்தது. உடனே வல்லரசு மற்றும் வியாபாரம் செய்து கொண்டிருந்த பொதுமக்கள் கடையை விட்டு வெளியேறினர்.

    பின்னர் கடையின் மேற்கூரை கான்கிரீட் முற்றிலுமாக சரிந்து விழுந்தது. இதில் விற்பனைக்காக வைத்திருந்த புதிய செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் முழுமையாக சேதம் அடைந்தது. இவற்றின் மதிப்பு ரூ.15 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார். பின்னர் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • செந்தமிழ் செல்வன் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தமிழ் செல்வன் (வயது 33). இவர் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்த பார்த்த பொழுது கடையின் மேற்கூரை உடைத்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையினுள் இருந்த 4 செல்போன்கள், பேட்டரிகள், ஹெட் போன், சார்ஜர் ஒயர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மியோடிட் மனோ, தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

    • சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.
    • நகராட்சி ஆணையர் ஹேமலதா ஆய்வு மேற்கொண்டனர்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சிக்கு உட்பட்ட 21 வது வார்டு துறையூர் பகுதியில் நகராட்சி தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 16 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

    மதிய உணவிற்காக சமையலர் கலா உணவு தயார் செய்யும் பணியை மேற்கொண்டுள்ளார்.

    அப்போது தலைமை ஆசிரியை அழைத்ததால் கலா சமையலறையை விட்டு வெளியே வந்துள்ளார் அந்த நேரம் திடீரென சமையலறை கட்டிடத்தின் மேற்கூரை காரைகள் இடிந்து விழுந்தது.

    இவ்விபத்தில் சமையலறையில் இருந்த அடுப்பு மற்றும் சமையல் உபகரணங்கள் சேதம டைந்தன.

    சமையலர் கலா வெளியே வந்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்.

    47 ஆண்டுகள் பழமை வாய்ந்த சமையலறை கட்டிடத்தை இடித்து அப்புறப்படுத்தி விட்டு புதிய கட்டிடம் அமைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்,

    இந்நிலையில் சமையல் கட்டிடத்தை பார்வையிட்டு நகராட்சி ஆணையர் ஹேமலதா மற்றும் நகர்மன்ற தலைவர் துர்கா பரமேஸ்வரி உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது துறையூர் நகராட்சி தொடக்கப்ப ள்ளிக்கு வகுப்பறைகள் கட்டடம் கட்டுவதற்கு ரூ.33 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ள தாகவும் விரைவில் பணிகள் தொடங்க உள்ளதாகவும், அது வரை தகர ஷெட் அமைத்து சமையலறை பயன்படுத்தப்படும் என ஆணையர் மற்றும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தனர்.

    ஆய்வின் போது நகரமைப்பு ஆய்வாளர் மரகதம் , நகர்மன்ற உறுப்பினர் முழு மதி இமயவரம்பன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
    • தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

    அதன்படி, தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்கள், புதுச்சேரி ரெயில் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், இந்த ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணிகளை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கூறியதாவது:-

    தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும். லிப்ட் மட்டும் எக்ஸ்லேட்டர் வசதி 5 நடைமுறைக்கு செல்ல கூடிய அளவில் புணரமைக்கப்படும். நடைமேடைகள் புதுப்பிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் ரெயில் நிலையத்தின் வெளிப்புறம் சாலை புதிதாக அமைக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது கோட்டாட்சியர் இலக்கியா, ரெயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

    • சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது.
    • மழை ஓய்ந்ததை தொடர்ந்து ரெயில் நிலையத்தில் மீண்டும் புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்தது.

    விழுப்புரம்:

    விழுப்புரத்தில் கடந்த 2 வாரங்களாக பகலில் வெயில் சுட்டெரித்து வருகிறபோதிலும் மாலை, இரவு நேரங்களில் வெப்பச்சலனம் காரணமாக அவ்வப்போது பரவலாக மழை பெய்து மக்களின் மனதை குளிர்வித்து வருகிறது.

    இந்நிலையில் நேற்று முன்தினம் இரவில் விழுப்புரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த சூறைக்காற்றுடன் கூடிய மழை பெய்தது. இந்த சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் விழுப்புரம் ரெயில் நிலைய வளாகத்தில் இருந்த மரங்கள், நகராட்சி பூங்காவில் இருந்த மரம், கிராம நிர்வாக அலுவலகத்தில் இருந்த மரம் என நகரின் பல்வேறு இடங்களில் இருந்த மரங்கள் முறிந்து விழுந்தன. இதன் காரணமாக மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

    மேலும் பலத்த சூறைக்காற்று வீசியதன் காரணமாக விழுப்புரம் ரெயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக அமைக்கப்பட்டிருந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தன. ரெயில் நிலைய 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளில் தற்போது பழைய மேற்கூரைகள் அகற்றப்பட்டு புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தபோது திடீரென பலத்த சூறைக்காற்று வீசியதால் அப்பணியை ஊழியர்கள் பாதியிலேயே கைவிட்டனர்.

    இதனால் சூறைக்காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் அந்த மேற்கூரைகள் காற்றில் பறந்தது. இதை பார்த்ததும் நடைமேடையில் நின்றிருந்த பயணிகள் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். இதனால் பயணிகள் காயமின்றி தப்பினர்.

    மழை ஓய்ந்ததை தொடர்ந்து நேற்று காலை, ரெயில் நிலையத்தில் மீண்டும் புதிய மேற்கூரைகள் அமைக்கும் பணி நடந்தது.

    • மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் திருடி சென்றுள்ளார்.
    • போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு கந்தம்பாளையத்தை சேர்ந்தவர் ஜெயநந்தன் (வயது 37 ). இவர் அந்த பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார்.

    சம்பவத்தன்று இரவு இவரது மளிகை கடையின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் கடையில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 10 ஆயிரம் மற்றும் மளிகை பொருட்கள் ரூ.15 ஆயிரம் ஆகியவற்றை திருடி சென்றுள்ளார். கடையில் இருந்த குளிர் பானங்களையும் மர்ம நபர் எடுத்து குடித்துவிட்டு திருடிச் சென்றுள்ளார். வீட்டின் மேற்கூரையின் ஓட்டை பிரித்து உள்ளே இறங்கிய மர்ம நபர் வெளியே வரும்போது கடையின் கதவை உடைத்து தப்பிச் சென்றுள்ளார். இதுகுறித்து ஜெயநந்தன் அவினாசிபாளையம் போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

    • சேதம் அடைந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையை முழுவதுமாக சீரமைத்து தருவதற்கும் முன்வர வேண்டும்.
    • முறையாக கண்காணித்து இருந்தால் பணிகளும் தரமான முறையில் நடைபெற்று இருக்கும்.

     உடுமலை : 

    உடுமலையை அடுத்த கல்லாபுரம் ஊராட்சி கொம்பேகவுண்டன்புதூரில் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 56 குழந்தைகள் படித்து வருகின்றனர். சம்பவத்தன்று இரவு பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் சம்பவம் நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தடுக்கப்பட்டது.

    இதுவே பகல் நேரத்தில் நடந்திருந்தால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு இருப்பார்கள். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மாணவர்கள் அச்சமடைந்து உள்ளதால் பள்ளிக்கூடம் செல்வதற்கு தயக்கம் காட்டி வருகின்றனர்.

    இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:- இந்த பள்ளியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 2021-2022ம் ஆண்டிற்கான பள்ளி சீரமைப்பு திட்டத்தின் கீழ் ரூ. 1 லட்சத்து 85 ஆயிரம் செலவில் பழுதுபார்ப்பு, வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    பணிகள் தரமாக மேற்கொள்ளப்படாததே இந்த விபத்திற்கு முக்கிய காரணமாகும். எனவே இது குறித்து மாவட்ட நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு தரமான முறையில் புனரமைப்பு பணிகளை செய்யாத நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் சேதம் அடைந்த பள்ளிக்கட்டிடத்தின் மேற்கூரையை முழுவதுமாக சீரமைத்து தருவதற்கும் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

    புனரமைப்பு பணிகள் நடைபெறும் போது பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளோ அல்லது பள்ளி நிர்வாகமோ முறையாக கண்காணித்து இருந்தால் பணிகளும் தரமான முறையில் நடைபெற்று இருக்கும். பொது மக்களின் வரிப்பணம் வீணாகி இருக்காது.

    அதிகாரிகளின் பொறுப்பற்ற தனத்தால் அரசுக்கு பொதுமக்கள் மத்தியில் அவப்பெயர் ஏற்பட்டு உள்ளது. எனவே பள்ளிக் கட்டிடத்தின் மேற்கூரை இடிந்த விவகாரத்தில் உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்பது பொதுமக்களின் வேண்டுகோளாக உள்ளது.

    • மழை நேரத்தில் தண்ணீர் கசியாமல் தவிர்க்க தார்ப்பாய் கொண்டு மேற்கூரைகளை முடியும், அருகில் கீற்று கொட்டகைகளை கட்டியும் பொதுமக்கள் அதில் வசித்து வருகின்றனர்.
    • பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதினோராயிரம் வீடுகள் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்பட உள்ளன.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டத்தில் 25 வருடங்கள் பழமை வாய்ந்த சுமார் 30,000 தொகுப்பு வீடுகள் இடிந்து விடும் நிலையில் உள்ளது. பல்வேறு பகுதிகள் மிகவும் ஏழ்மையான மக்கள் வசிக்கும் காலணி பகுதிகளாக உள்ளன. மேற்கூரைகளில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன.

    பலத்த மழை பெய்யும் போது இந்த வீடுகளில் மேற்கூரை காரைகள் பெயர்ந்து விழுந்து வசிக்கும் மக்கள் மீது காயங்கள் ஏற்படுகின்றன. மழை நேரத்தில் தண்ணீர் கசியாமல் தவிர்க்க தார்ப்பாய் கொண்டு மேற்கூரைகளை முடியும், அருகில் கீற்று கொட்டகைகளை கட்டியும் பொதுமக்கள் அதில் வசித்து வருகின்றனர்.

    கன மழை பெய்யும் பொழுது உயிரை கையில் பிடித்தபடி அச்சத்துடனே பொதுமக்கள் தொகுப்பு வீடுகளில் வசித்து வருகின்றனர். சில நேரங்களில் உறவினர் வீடுகள், கோயில்கள், பள்ளிகள் ஆகியவற்றில் தங்கி வருகின்றனர்.

    கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மயிலாடுதுறை அருகே மாப்படுகை கிராமத்தில் கன்னித்தோப்பு தெரு என்ற இடத்தில் சுப்பையன் என்ற முதியவரது வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது.

    மழைச்சாரல் ஏற்பட்டதால் வீட்டுக்கு பின்புறம் உள்ள கொட்டகையில் அவர் படுத்து இருந்ததால் அதிர்ஷ்ட வசமாக
    உயிர்த்தப்பினார்.

    மாவட்ட நிர்வாகத்தின் கணக்கெடுப்பின்படி 30 ஆயிரம் வீடுகள் இவ்வாறு இடிந்த நிலையில் உள்ளதாக தெரிகிறது.பிரதம மந்திரியின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் பதினோராயிரம் வீடுகள் இந்த ஆண்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டப்பட உள்ளன.

    உடனடியாக முன்னுரிமை அடிப்ப டையில் புதிய வீடுகள் கட்டும் முன்பு பழுதடைந்த பழைய வீடுகளை இடித்துவிட்டு அங்கு வசிப்பவர்களுக்கு புதிய வீடு கட்டி தரவேண்டும்.

    பெரும் விபத்து ஏற்படும் முன் தமிழக அரசு வீடுகளை கட்டித்தந்து பொதுமக்கள் உயிரை காப்பாற்றி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • கடந்த சில நாட்க ளுக்கு முன் மாணவர்கள் இடமாற்றம் செய்து வகுப்பு கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது.
    • பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அருகே திரு.பட்டினம், கருட பாளையம் பகுதியில், அரசு தொடக்கப்பள்ளி 1-ம் வகுப்புமுதல் 5-ம் வகுப்பு வரை இயங்கி வருகிறது. இங்கு நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் போதிய இடவசதி இல்லாத கார ணத்தால், அருகில் உள்ள பல ஆண்டுகள் பரா மரிப்பு இல்லாத அரசு நடுநிலைப்பள்ளியில், மூடிகிடந்த சில வகுப்பறை களில், கடந்த சில நாட்க ளுக்கு முன் மாணவர்கள் இடமாற்றம் செய்து வகுப்பு கள் நடைபெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, அந்த வகுப்புகளில் மாணவர்கள் கல்வி பயின்றுவந்த நேரத்தில், வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை காரை சில இடங்களில் திடீரென இடிந்து விழுந்த தால், அதிர்ச்சி அடைந்த மாணவர்கள், பதறியவாறு வகுப்பறையை விட்டு வெளியே ஓடினர். மாண வர்கள் சுதாரிப்பால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

    இது குறித்து, பள்ளி நிர்வாகம், முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எந்த தகவலும் அளிக்காமல் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து மாணவர்கள் பெற்றோர்களிடம் புகார் கூறியதை அடுத்து, நூற்றுக்கு மேற்பட்ட பெற்றோர்கள், மாணவர்களுடன் சம்பந்த ப்பட்ட பள்ளியை மூடி, முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த பள்ளி நிர்வாகத்திடம், பராமரிப்பு இல்லாத பள்ளிக்கு, யாருடைய அனு மதியும் பெறாமல் வகுப்பு கள் நடத்தியதையும், கட்டிட மேற்கூரை காரை இடிந்து விழுந்ததை பெற்றோ–ர்களுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்ததற்கும் கடும் கண்டனம் தெரிவித்தனர். விபரம் அறிந்த காரைக்கால் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜ சேகரன், திரு.பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின்பாரதி மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் பெற்றோர்களுடன் பேசு வார்த்தை நடத்தினர். பேச்சு வார்த்தையின் முடிவில், தற்போதுள்ள பள்ளியில் போதிய இடவசதிகள் ஏற்படுத்தி தரும்வரை மாணவர்களை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என கூறி, மாணவர்களை பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டு அழைத்துசென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    • பள்ளி கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்ததால் மாணவர்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
    • இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை.

    சிவகங்கை 

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள வேங்கைபட்டியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு 1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை 142 மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளி வளாகத்தில் உள்ள 3 கட்டிங்களில் ஒன்று பழுதடைந்துள்ளது. அங்கு யாரும் உள்ளே செல்லாதபடி எச்ச ரிக்கை நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.

    இதற்கிடையில் அருகே உள்ள மற்ற 2 கட்டிடங்களிலும் 8-ம் வகுப்பு மற்றும் மற்ற வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் காலண்டு விடுமுறைகள் முடிந்து பள்ளிகள் தொடங்கிய நிலையில் பள்ளியை சுத்தம் செய்ய தூய்மை பணியாளர் அந்த கட்டிட அறைகளை திறந்தபோது ஆசிரியர் இருக்கைக்கு மேலே இருந்த மேற்கூரை இடிந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் சிவராணி, வட்டார வளர்ச்சி அலுவலர் பாலசுப்பிரமணியன், கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் லட்சுமண ராஜூ ஆகி யோர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அந்தப்ப குதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில், பள்ளி கட்டிடம் கட்டி சில ஆண்டுகள் தான் ஆகிறது. ஆனால் அதற்குள் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது. தரமற்ற முறையில் கட்டிடங்களை கட்டியுள்ளனர். இதுகுறித்து பலமுறை மனு கொடுத்தும் எந்த அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்கவில்லை. தரமில்லாமல் பள்ளி கட்டிடம், அங்கன்வாடி கட்டிடம் போன்ற அனைத்தும் கட்டிடங்களும் உள்ளது.

    இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதை பார்க்கும் போது பள்ளிகளுக்கு குழந்தைகளை அனுப்ப அச்சமாக உள்ளது. எனவே வரும் காலங்களில் தரமான கட்டிடங்களை கட்ட தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என தெரிவித்தனர். பள்ளி கட்டிடத்தின் நிலைமை மோசமாக இருப்பதால் 1 முதல் 5-ம் வகுப்பு படிக்கும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு வர தயக்கம் காட்டி வருகின்றனர்.

    • சாமிக்கவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
    • சுவர்களில் செடிகள் முளைத்தும், கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் வட்டாரம் செம்மிபாளையம் ஊராட்சி, சாமிக்கவுண்டம்பாளையம் அரசு துவக்கப் பள்ளியில் சுமார் 60க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

    சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த பள்ளி கட்டடம் சுவர்களில் செடிகள் முளைத்தும், கட்டடத்தில் பல இடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த புதன்கிழமை பள்ளி நடைபெற்றுக்கொண்டிருக்கும்போது திடீரென பள்ளி கட்டட மேற்கூரையில் இருந்து சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆசிரியரின் மேஜை மீது விழுந்தது.இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், மேற்கூரை சிமெண்ட் பூச்சு சிறிது விழுந்துள்ளது. அப்போது மாணவர்கள் யாரும் வகுப்பறையில் இல்லை. ஆகவே யாருக்கும் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.பழுதான கட்டடத்தின் பட்டியலில் இந்த கட்டடம் உள்ளது. 6 மாதத்துக்குள் புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதுவரை மாணவர்களை தற்காலிகமாக அருகிலுள்ள உயர்நிலை பள்ளி கட்டடத்துக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர். இந்த சம்பவத்தால் பெற்றோர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    • இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
    • மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது.

    தஞ்சை மாவட்டத்திலும் மாலை, இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.‌

    இரவு 8 மணி வரை வெப்பத்தின் தாக்கம் இருந்தது. பின்னர் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கியது.

    பின்னர் 10 மணி அளவில் சாரல் பெய்தது. நேரம் செல்ல செல்ல மழையின் அளவு அதிகரி த்தது. கன மழையாக கொட்டி பெய்ய தொடங்கி யது.

    தொடர்ந்து 2 மணி நேரத்துக்கு மேலாக இடைவிடாது மழை பெய்தது.

    அதனைத் தொடர்ந்து இடி - மின்னல் அடித்து கொண்டே இருந்தது.

    பின்னர் சில மணி நேரம் மழை தெறித்தது. மீண்டும் அதிகாலையில் லேசான மழை பெய்தது.

    இடைவிடாது விடிய விடிய வெளுத்து வாங்கிய மழையால் சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது.

    கனமழை காரணமாக எம்.கே. மூப்பனார் சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே பழமை வாய்ந்த மரம் வேரோடு சாய்ந்து விழுந்தது.

    இரவு நேரம் என்ப தால் அந்த வழியாக யாரும் செல்லாததால் அதிர்ஷ்டவசமாக அச ம்பாவித சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.

    இருந்தாலும் மரம் சாலையின் குறுக்கே விழுந்ததுடன் எதிரே இருந்த கட்டிடத்தின் மீது விழுந்தது.

    அதில் பெட்டிகடையின் முன்பு தகரத்தால் போடப்பட்ட மேற்கூரை சேதம டைந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து அந்த மரத்தை வெட்டி அகற்றினர்.

    இதேபோல் பூதலூர் ,வல்லம், திருவையாறு ,மதுக்கூர், ஒரத்தநாடு உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் கன மழை பெய்தது.

    இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்து வருகிறது.

    இருந்தாலும் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை பெய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தஞ்சை மாவட்டத்தில் இன்று காலை 8 மணியுடன் முடிவடைந்த மழையின் அளவு வருமாறு (மி.மீ) :-

    தஞ்சாவூர் -31, வல்லம்-31, குருங்குளம்-21, மதுக்கூர்-17.20, நெய்வாசல் தென்பாதி-12.80, பூதலூர்-8.40.

    ×