search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சின்னசேலம் அருகே செல்போன் கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு
    X

    திருடுப்போன செல்போன் கடை

    சின்னசேலம் அருகே செல்போன் கடையில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருட்டு

    • செந்தமிழ் செல்வன் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார்.
    • செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள நயினார் பாளையம் கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மகன் செந்தமிழ் செல்வன் (வயது 33). இவர் நைனார்பாளையம் பஸ் நிலையம் அருகே செல்போன் கடை நடத்தி வருகிறார். நேற்று இரவு 8 மணிக்கு கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இன்று காலை கடையை திறந்த பார்த்த பொழுது கடையின் மேற்கூரை உடைத்து இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். கடையினுள் இருந்த 4 செல்போன்கள், பேட்டரிகள், ஹெட் போன், சார்ஜர் ஒயர் உள்ளிட்ட ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரியவந்தது.

    இது குறித்த புகாரின் பேரில் கீழ்குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனைத் தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் மியோடிட் மனோ, தனிப்பிரிவு காவலர் சரவணன் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். செல்போன்களை திருடிச் சென்ற மர்நபர்களை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×