search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Roofing"

    • முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
    • தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும்.

    தஞ்சாவூர்:

    இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.

    அதன்படி, தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்கள், புதுச்சேரி ரெயில் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.

    இந்நிலையில், இந்த ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணிகளை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    பின்னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கூறியதாவது:-

    தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும். லிப்ட் மட்டும் எக்ஸ்லேட்டர் வசதி 5 நடைமுறைக்கு செல்ல கூடிய அளவில் புணரமைக்கப்படும். நடைமேடைகள் புதுப்பிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் ரெயில் நிலையத்தின் வெளிப்புறம் சாலை புதிதாக அமைக்கப்படும் என்றார்.

    ஆய்வின் போது கோட்டாட்சியர் இலக்கியா, ரெயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.

    ×