search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "package house"

    • வீட்டின் உள்ளே இருவரும் தூங்கிக் கொண்டிருந்த போது அதிகாலையில் திடீரென மேற்கூரை இடிந்து விழுந்தது.
    • அன்பழகிக்கு கையில் பலத்த காயம் மற்றும் அவரது மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே வேளூர் கிராமத்தில் மேலத் தெருவில் வசித்து வருபவர் அன்பழகி(வயது48). இவர் கணவனை இழந்து தனது மாற்றுத்திறனாளி பெண் விஜயகுமாரியுடன் வசித்து வருகிறார் .இவர்கள் 1990-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் வீட்டின் உள்ளே இருவரும் இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலையில் திடீரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.

    இதில் அன்பழகிக்கு கையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதேபோல் மகள் விஜயகுமாரிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.இது குறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு திரண்டு தாய், மகள் இருவரையும் மீட்டு உடனடியாக திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி த்தனர்.

    மேலும் இந்த விபத்து குறித்து தகவலறிந்த திருத்துறைப்பூண்டி போலீசார், வருவாய் துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் வீடு சேதமடைந்த நிலையில் மேற்கூரையின் காரை பெயர்ந்து விழுந்தது தெரியவந்தது.இந்திரா நினைவு குடியிருப்பு காலனியில் உள்ள தொகுப்பு வீடுகள் சேதமடைந்து உள்ளதாக அங்கு வசிப்பவர்கள் கூறினர். எனவே அரசு சேதமடைந்த வீடுகளை சீரமைத்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×