search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அவிநாசிபாளையத்தில் 4 கடைகளில் மேற்கூரையை பிரித்து திருட்டு
    X

    கோப்புபடம்

    அவிநாசிபாளையத்தில் 4 கடைகளில் மேற்கூரையை பிரித்து திருட்டு

    • ரவி காம்ப்ளக்சில் மளிகை கடை, செல்போன் கடை, சலூன் மற்றும் சிப்ஸ் தயாரிக்கும் கடைகள் உள்ளது.
    • ஒரே பகுதியில் நான்கு கடைகளில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் அவினாசிபாளையம் பகுதியில் பழனிசாமி என்பவருக்கு சொந்தமான ரவி காம்ப்ளக்ஸ் உள்ளது. இந்த காம்ப்ளக்சில் மளிகை கடை, செல்போன் கடை, சலூன் மற்றும் சிப்ஸ் தயாரிக்கும் கடைகள் உள்ளது.

    நேற்று முன்தினம் இரவு இந்த கடைகளின் மேற்பகுதியில் உள்ள சிமெண்ட் சீட்டுகளை உடைத்து உள்ளே இறங்கிய மர்ம நபர்கள் செல்போன் கடையில் இருந்து ரூ. 1 லட்சம் ரொக்கம், மளிகை கடையில் இருந்து ரூ. 4 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட் மற்றும் சோப்பு ஆகியவற்றையும், சிப்ஸ் தயாரிக்கும் கடையிலிருந்து ரூ. 1500 ஆகியவற்றை திருடி சென்றனர். இது குறித்து செல்போன் கடை உரிமையாளர் பாலசுப்பிரமணி(33) கொடுத்த புகாரியின் பேரில் அவினாசிபாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை செய்து வருகிறார்கள்.

    ஒரே பகுதியில் தொடர்ந்து நான்கு கடைகளில் நடைபெற்றுள்ள திருட்டு சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×