search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Warehouse"

    • விற்பனை கூடங்களின் செயல்பாடுகள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகியவை குறித்து ஆய்வு செய்தார்.
    • தேங்காய் பால் உற்பத்தி அலகு மற்றும் கிடங்குகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்டார்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தில் வேளாண்மை விற்பனன மற்றும் வேளாண் வணிகத் துறைக்குட்பட்ட தஞ்சாவூர் விற்பனனக்குழுவில் இனண இயக்குநர் (வேளாண் வணிகம்) முரளிதரன், தஞ்சாவூர், ஒரத்தநாடு மற்றும் பட்டுக்கோட்டை ஆகிய ஒழுங்கு முறை விற்பனைக்கூடங்களில் விலை ஆதரவு திட்டத்தின் கீழ் கொப்பரை கொள்முதல் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

    இந்த ஆய்வின்போது விவசாயிகளின் ஆவண ங்களை சரிபார்த்ததுடன் ஒரத்தநாடு ஒழுங்கு முறை விற்பனை கூட பகுதிக்கு ட்பட்ட சோழகன்குடிக்காடு மற்றும் பாலாமுத்தூர் கிராமங்களில் கொப்பரை விற்பனை செய்த விவசாயிகளின் வயலிற்கு நேரடியாக சென்று விவசாயிகளிடம் கொப்பரை கொள்முதல் குறித்து கேட்டறிந்தார்.

    மேலும் விற்பனை கூடங்களின் செயல்பாடுகள், திட்டங்கள் மற்றும் மின்னணு தேசிய வேளாண் சந்தை ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டு வேளாண்மை அலுவலர்கள் மற்றும் விற்பனைக்கூட பொறுப்பாளர்களுக்கு விவசாயிகளின் பண்ணை வயலிற்கு சென்று தினசரி பரிவர்தனை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

    தஞ்சாவூர் உழவர் சந்தை, ஒரத்தநாட்டில் அமைந்துள்ள திருநாடு உழவர் உற்பத்தி யாளர் குழு ஆகியவற்றின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டதுடன் பட்டுக்கோட்டை தென்னை வணிக வளாகத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகள், இயந்திர தளவாடங்கள், காயர் அலகு, தேங்காய் பால் உற்பத்தி அலகு மற்றும் கிடங்குகள் பற்றி விரிவான ஆய்வு மேற்கொண்டு தென்னை வணிக வளாகத்தினை முழு செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் உழவர் உற்பத்தியாளர் குழுக்கள் மூலம் தென்னை வணிக வளாகத்தில் அமைந்துள்ள கட்டமைப்புகளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் ஆலோசனை மற்றும் அறிவுரை வழங்கினார்.

    இந்த ஆய்வில் விற்பனனக்குழு செயலாளர் சரசு, வேளாண் வணிக துனண இயக்குநர் வித்யா, விற்பனனக்குழு மேலாளர் சரண்யா, விற்பனனக்கூட பொறுப்பாளர்கள் முருகானந்தம் , சுரேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்

    • கடுகுசந்தை ஊராட்சியில் நெல் உலர்களம்- சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும்.
    • காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வாய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது.

    சாயல்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே கடுகு சந்தை ஊராட்சி தலைவர் காளிமுத்து. இவர் முன்னாள் அ.தி.மு.க. கடலாடி ஒன்றிய கவுன்சிலராகவும், 25 வருட மாக சத்திரம் அ.தி.மு.க. கிளை செயலாளராகவும் உள்ளார். கடுகு சந்தை ஊராட்சித்தலைவர் காளிமுத்து கூறுகையில்:-

    கடுகு சந்தை ஊராட்சியில் மினி பாரஸ்ட் என ஆயிரம் மரக்கன்றுகள் மற்றும் மெகா பாரஸ்ட் என 5 ஆயிரம் மரக் கன்றுகள் வளர்த்து கடுகு சந்தை ஊராட்சியை பசுமை ஊராட்சியாக மாற்றி உள் ளேன். இந்த கிராமத்தில் ரூ.3 லட்சத்து 70 ஆயிரம் மதிப்பீட்டில் கிணறு அமைத்து தண் ணீர் வழங்கப்பட்டு வருகிறது.

    காவிரி கூட்டுக் குடிநீர் திட் டம் தேவர்நகர், கடுகுசந்தை பகுதிகளுக்கு விஸ்தரிப்பு செய்யப்பட்டுள்ளது. தேவர்நகர் உயர் நிலைப்பள்ளி, தொடக்கப்ப ள்ளியில் ரூ.13 லட்சத்து 50 ஆயிரத்தில் சுற்றுச்சுவர் அமைக்கப் பட்டுள்ளது.

    தேவர் நகர் உயர்நிலைப் பள்ளி சமையலறை கட்டிடத்திற்கு ரூ.7.43 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. சத்தி ரம் கிராமத்தில் இருந்து கூரான்கோட்டை செல்லும் சாலை அருகே புதிய ஊருணி அமைத்து படித்துறை கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. கடுகு சந்தை ஊராட்சி சத்திரம், நடுத்தெரு, மேற்கு தெரு, கிழக்குத் தெரு, பகுதியில் ரூ.5 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் பேவர் பிளாக்சாலை அமைக் கப்பட்டுள்ளது.

    கடுகுசந்தை ஊராட்சியில் ஆயிரம் ஏக்கர் நிலப்ப ரப்பில் 5லட்சம்பனை மரங்கள் உள்ளன. ஆகையால் பனை தொழி லாளர்களுக்காக கடுகு சந்தை ஊராட்சி யில் பனங்கற்கண்டு தொழிற் சாலை அமைக்க வேண்டும். சத்திரம் பகுதியில் ராமேசுவரம் முதல் திருச்செந்தூர் செல் லும் பக்தர்கள் சத்திரத்தில் உள்ள ராஜாசத்திரம் பகுதியில் தங்கி செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக சத்திரத்தில் உள்ள ராஜா ஊரு ணிக்கு படித்துறை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். பல ஆண்டுகளாக வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

    சத்திரம் கிராமத்தில் புதிய நியாய விலை கடை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். சத்திரம், கடுகுசந்தை, முத்துராம லிங்கபுரம், தேவர் நகர், ஆதிதிராவிடர் காலனி, ஆகிய பகுதிகளில் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஊராட்சி கட்டிடம் புதிதாக கட்டித் தரவேண்டும். கண்மாய்களை தூர் வாரி, மடைகள் கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண் டும். தெருவிளக்குகள் விஸ்தரிப்பு செய்து தர வேண்டும்.

    நெல் உலர்க்களம் மற்றும் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். கடுகுசந்தை ஊராட்சி முழுவதும் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் வீடுகளுக்கு பைப் லைன் அமைத்து குடிநீர் வழங்க வேண்டும். காவிரியில் இருந்து தண்ணீர் வரும் கால்வா ய்கள் பல ஆண்டுகளாக தூர்வா ரப்படாமல் உள்ளது. அதனை தூர்வாரி கடுகு சந்தை ஊராட்சியில் உள்ள கண் மாய்களுக்கு காவிரியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.
    • குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்து சென்றனர்.

    வேதாரண்யம்:

    உலக கடற்கரை தூய்மை தினத்தை முன்னிட்டு வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் மற்றும் நகராட்சி சார்பில் வேதாரண்யம் கடற்கரையில் தூய்மை பணி நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேதாரண்யம் கடலோர காவல் குழும டி.எஸ்.பி. சுரேஷ், இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜசேகரன், ஏட்டு சசிகுமார், அரசு கல்லூரி நாட்டு நல திட்ட அலுவலர் மாரிமுத்து உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    நகராட்சி ஆணையர் ஹேமலதா தலைமையில் குப்பையில்லா நகரத்தை உருவாக்குவோம் என நூற்றுக்கணக்கான மாணவ- மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

    பின்பு, மாணவர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு அமைப்பினர், கடலோர காவல்படைபோலீசார் என 100-க்கும் மேற்பட்டோர் கடற்கரை பகுதியில் கிடந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குப்பைகளை சேகரித்தனர்.

    சேகரிக்கப்பட்ட குப்பைகளை வேதாரண்யம் நகராட்சி பணியாளர்கள் குப்பை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் சென்றனர். இதன் மூலம் வேதாரண்யம் கடற்கரை மிக தூய்மையாக காட்சியளித்தது.

    நகராட்சி நிர்வாகம் கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பதால் மாணவர்கள் குறைந்த அளவே மண்ணில் புதைந்து கிடந்த குப்பைகளை மட்டுமே சேகரிக்க முடிந்தது. கடற்கரையை மிக தூய்மையாக வைத்திருந்த வேதாரண்யம் நகராட்சி ஆணையர் ஹேமலதாவை பள்ளி மாணவ- மாணவிகள் காவல்துறை அதிகாரிகள் பாராட்டினர்.

    • சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.
    • கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் , தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.25 லட்சத்து13ஆயிரத்து110-க்கு விற்பனை ஆனது.

    பரமத்தி வேலூர்:

    சாலைப் புதூரில் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் தேங்காய், தேங்காய் பருப்பு, ஆகியவற்றுக்கான ஏலம் நடைபெறுகிறது.

    இதில் கரூர் ஒன்றியம் மற்றும் பரமத்திவேலூர் பகுதி விவசாயிகள் தாங்கள் விளைவித்த வேளாண் பொருட்களை விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். அதை தமிழகம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வரும் வியாபாரிகள், எண்ணைய் நிறுவனங்களின் முகவர்கள் ஏல முறையில் வாங்கி செல்கின்றனர்.

    அதன்படி இந்த வாரம் நடந்த ஏலத்தில் 37.77குவிண்டால் எடை கொண்ட 11ஆயிரத்து 70தேங்காய் விற்பனைக்கு வந்தது. இதில் கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.25.86-க்கும், குறைந்த விலையாக ரூ.21.29-க்கும், சராசரி விலையாக ரூ.24.36-க்கும் என ரூ.87ஆயிரத்து 109-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 234.87 குவிண்டால் எடை கொண்ட 502 மூட்டை தேங்காய் பருப்பு விற்பனைக்கு வந்தது. இதில் முதல் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ84.39-க்கும், குறைந்த விலையாக ரூ82.20-க்கும் சராசரி விலையாக ரூ83 .76-க்கும் விற்பனையானது.

    இரண்டாம் தரம் தேங்காய் பருப்பு கிலோ ஒன்றுக்கு அதிக விலையாக ரூ.82.40-க்கும், குறைந்த விலையாக ரூ.66.60-க்கும், சராசரி விலையாக ரூ.78.99-க்கும் என ரூ.18லட்சத்து 86ஆயிரத்து 644-க்கு விற்பனை ஆனது. அதேபோல் 81.98½ குவிண்டால் எடை கொண்ட254 மூட்டை நிலக் கடலைக்காய் விற்ப னைக்கு வந்தது. இதில் நிலக்கடலைக்காய் அதிக விலையாக கிலோ ஒன்றுக்கு ரூ69.40-க்கும், குறைந்த விலையாகரூ 62.30-க்கும் சராசரி விலையாக ரூ67. 60க்கும் என 5 லட்சத்து39 ஆயிரத்து357 -க்கு விற்ப னையானது.

    இந்த வாரம் சாலைப்பு தூர் அரசு வேளாண் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நடந்த ஏலத்தில் தேங்காய் , தேங்காய் பருப்பு மற்றும் நிலக்கடலை காய் ஆகியவை ரூ.25 லட்சத்து13ஆயிரத்து110-க்கு விற்பனை ஆனது.

    • 2015ம் ஆண்டில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டி திறப்பு விழா செய்யப்பட்டது.
    • அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்டரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    பல்லடம் :

    பல்லடம் அருகேயுள்ள பருவாய் கிராமத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகத்தில் கடந்த 2015ம் ஆண்டில் சேமிப்பு கிடங்கு கட்டடம் கட்டி திறப்பு விழா செய்யப்பட்டது. இந்த நிலையில், சேமிப்புக் கிடங்கில்,அரிசி மூட்டைகள், பருப்பு உள்ளிட்டரேசன் பொருட்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

    இந்த நிலையில், கிடங்கின் ஒரு பகுதியில் பள்ளம் ஏற்பட்டு நீண்ட நாட்களாக பராமரிக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டு உள்ளது .இதனை முறையாக பராமரிக்காததால் அவற்றின் வழியாக பெருச்சாளிகள் புகுந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை சேதப்படுத்தி வருகின்றன. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- சேமிப்பு கிடங்கு தரமில்லாத கட்டுமான பணியால் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனை கூட்டுறவு சங்க நிர்வாகமும் அலட்சியப்படுத்தி வருவதால் அந்தப் பள்ளத்தின் வழியாக பெருச்சாளிகள் புகுந்து உணவுப் பொருட்களை நாசமாக்கி வருகின்றன. இதனால் சுத்தமான உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது.

    எனவே கூட்டுறவு சங்க நிர்வாகம், ரேஷன் கடை நிர்வாகம், உடனடி நடவடிக்கை எடுத்து சேமிப்பு கிடங்கில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    • தற்போது வாணிபக்கழக நிறுவனமே லாரிகளை அனுப்பும்போது லாரி டிரைவர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.
    • தனியார் நிறுவனத்திடம்ஒப்படைக்கப்பட்டால் இது மேலும் அதிகமாகும்.

    பூதலூர்:

    தமிழகத்தில் விவசாயிகளின் நலன் பாதுகாக்கப்படவும் குறைந்த விலையில் ஏழை எளிய மக்களின் உணவு தேவையை பூர்த்தி செய்வதற்காகவும் 1972ம் ஆண்டுஅப்போதய முதலமைச்சர் கருணாநிதியால் தொடங்கப்பட்டது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்.

    தமிழ்நாட்டில் அனைத்து கிராம பகுதிகளிலும் ரேஷன் கடைகளுக்கு உணவுப்பொருள் விநியோகம், விவசாயிகளிடம் விளைவிக்கப்படும் நெல் கொள்முதல் உள்ளிட்ட பணிகளை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் செய்து கொண்டுள்ளது. இந்தியாவிலேயே சிறப்பான முறையில் பொது விநியோகத் திட்டத்தின் மூலம் உணவுப் பொருட்களை விநியோகம் செய்து வருவது தமிழகம் தான் என பாராட்டப்படும் வகையில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் பணியாற்றி வருகிறது.

    தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் தமிழ்நாட்டில் பெருவாரியாக விளைவிக்கப்படும் நெல்லை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து பாதுகாத்து அரவை மில்களுக்கு அனுப்பி அரிசி ஆக்கி பொது விநியோகத் திட்ட கடைகளுக்கு அனுப்புவது வரை பணிகளை செய்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில் நடப்பு ஆண்டு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் வெளியிட்டுள்ள ஒப்பந்த புள்ளி கோரும் அறிவிப்பு விவசாயிகளையும், முன்னோடிகளையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    காவிரி டெல்டா மாவட்டங்களான தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் இனிவரும் காலங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குகளை தனியார் நிறுவனங்கள் வசம் ஒப்படைக்க ஒப்பந்த புள்ளியில் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் கொள்முதல் செய்யப்படும் நெல்லை, நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்று ஒப்பந்த புள்ளியில் கோரப்பட்டுள்ளது.

    இதுவரை கொள்முதல் பணிகள், கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை எடுத்துச் சென்று சேமிக்கும் பணிகள், உள்ளிட்ட அனைத்தையும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகமே செய்து வந்த நிலையில், திடீரென சேமிப்பு கிடங்குகளை தனியார் வசம் ஒப்படைப்பது, எதிர்காலத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தையே தனியார் மயமாக்கும் முயற்சியோ? என விவசாயிகள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.வழக்கமாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் இருந்து நெல்லை சேமிப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதில் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருவதாக நேரடி நெல் கொள்முதல் நிலைய பணியாளர்கள் கூறிவருகின்றனர்.இது போன்ற நிலையில், தனியார் ஒப்பந்ததாரரிடம் ஒப்படைத்தால் கூடுதலாக சிரமங்களைசந்திக்க வேண்டி இருக்குமே தவிர நன்மை எதுவும் ஏற்படாது என்று விவசாயிகள்.பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    தற்போது வாணிபக்கழக நிறுவனமே லாரிகளை அனுப்பும்போது லாரி டிரைவர்களுக்கு மாமுல் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது.தனியார் நிறுவனத்திடம்ஒப்படைக்கப்பட்டால் இது மேலும் அதிகமாகும். குறைவதற்கான வாய்ப்பு இல்லை. இதை ஈடுகட்ட விவசாயிகளிடம் கூடுதலாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் பணம் பெறுவதற்கான நிலை ஏற்படும் என்று விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.கொள்முதல் நிலையங்களில் அதிகாரப்பூர்வமற்ற முறையில் பெறப்படும் தொகை குறித்ததகவல்கள்வாணிபக்கழகத்தின்அனைத்துஉயர்அலுவலர்களுக்கும்தெரியும் என்று கூறப்படுகிறது.

    இதுகுறித்து காவிரி டெல்டா விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ கே ஆர் ரவிச்சந்தர் தெரிவித்ததாவது;- நேரடி நெல் கொள்முதல் நிலையம் மூலம் விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்படும் நெல் மூட்டைகளை மாவட்டம் முழுவதும் பல இடங்களில் திறந்தவெளி சேமிப்பு கிடங்குளில் சேமித்து வைத்து அரிசி அரவைக்கு அனுப்புவது வழக்கம்.

    தற்போது அந்த திறந்த வெளி கிடங்குகளை தனியாருக்கு தாரை வார்த்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இதனால் கொள்முதல் நிலையங்களில் லாரி மாமூல் ரூ 4000 விருந்து ரூ.6000 ஆக உயரும். இது விவசாயிகளின் தலையில் வைத்து சிப்பத்திற்கு ரூ.60 வசூலிக்கும் நிலை வரும். சில மாதங்களுக்கு அரசு பராமரிப்பில் இருந்த கிடங்குகளில் பல ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் முளைத்தது.குறிப்பாக திருவாரூர் கிடங்கில் 40 ஆயிரம் மூட்டைகள் முளைத்தே போனது.

    தனியார் வசம் கிடங்குகள் போவதால் அன்றாடம் உழைக்கும் ஏழை அடித்தட்டு மக்கள், ஏழை விவசாயக்கூலி தொழிலாளர்களுக்கு மோசமான தரமற்ற அரிசியை அரசே விநியோகிக்கும் நிலை ரத்த வியர்வை சிந்திய உழைப்பு, விவசாயிகளின் உணர்வு, பலருக்கும் பகர்ந்தளிக்கும்உணவு, இது ஆற்றில் ஓடும் மணல் அல்ல. இதை தன் மக்களின் வயிற்று பிரச்சினை. நெல் சேமிப்பு தனியாருக்கு போனால் தரமற்ற அரிசி விநியோகித்துஅல்லல்படநேரிடும். மேலும்பலவிதங்களிலும்விவசாயிகள், வாங்கி உண்போர்பாதிப்படைவார்கள். இதனால் காலரா, வாந்தி-பேதி, கொரோனா போன்ற கொடிய நோய்காளால் மக்கள் பாதிக்கப்படுவார்கள்.

    சேமிப்பு கிடங்கு தனியார் வசம் போவதால் ஆயிரக்கணக்கான அப்பாவி தற்காலிக சுமை தூக்கும் பணியாளர்கள் வேலை இழந்து வாழ்வாதாரம் பாதிக்கும் நிலை ஏற்படும். எனவே நெல் சேமிப்பு கிடங்குகளை தனியார் வசம் ஒப்படைக்கும் முடிவை கைவிட்டு அரசே பராமரித்து ஏழைகளின் நலம் காக்க வேண்டுகிறேன் என்று தெரிவித்து உள்ளார்.

    • காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது.
    • 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது.

    குடிமங்கலம்,

    திருப்பூர் மாவட்டத்தில் நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாக நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன. முதல் கட்டமாக பிப்ரவரி மாதம் முத்தூர், வெள்ளகோவில், குட்டப்பாளையம், கீரனூர், குடிமங்கலம், மடத்துக்குளம், ருத்ராபாளையம் பகுதிகளில் திறக்கப்பட்டன.அதற்கு பிறகு அலங்கியம் உட்பட தாராபுரம் தாலுகாவில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டன.

    காவிரி டெல்டா பகுதிக்கு தேவையானவிதைநெல் உற்பத்தி திருப்பூரில் நடக்கிறது. விதை நிறுவனங்கள், விவசாயிகளிடம் இருந்து நெல்லை நேரடியாக கொள்முதல் செய்கின்றன. மற்ற நெல்லை நுகர்வோர் வாணிப கழகம் கொள்முதல் செய்கிறது.இந்தாண்டு சன்ன ரகம் நெல் கிலோ 21.65 ரூபாய், மோட்டா ரகம் 21.15 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட்டது .ஆன்லைன்பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால்விவசாயிகள்தனியார் வியாபாரிகளுக்கு கிலோ 13 முதல் 15 ரூபாய்க்கு நெல்லை வழங்கினர். ஆன்லைன் பதிவில் சுணக்கம் ஏற்பட்டதால் சில நாட்கள் காத்திருந்த பிறகே நெல் மூட்டைகளை வழங்க முடிந்தது.

    திருப்பூர் மாவட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் மையங்களில் போதிய மேற்கூரை வசதியில்லை. மாறாக திறந்தவெளி களத்தில் மூட்டைகள் அடுக்கப்பட்டிருந்தன. பாலிதீன் சாக்குகளால் மூடி வைத்து பாதுகாத்தனர்.அப்படியிருந்தும் எதிர்பாராத திடீர் மழையால் நெல்மூட்டைகள் நனைந்து சேதமாகின. எனவே நிரந்தரமான மேற்கூரையுடன் கூடிய கிடங்குகளை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    இது குறித்து நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் குணசேகரனிடம் கேட்டபோது, திருப்பூர் மாவட்டத்தில் விவசாயிகள் வசதிக்கு தகுந்தபடி 20 இடங்களில், நெல் கொள்முதல் மையம் திறக்கப்பட்டது. இறுதியாக ருத்ராபாளையத்தில் இன்னும் கொள்முதல் நடந்து வருகிறது.இதுவரை21 ஆயிரத்து 102 மெட்ரிக் டன் அளவுக்கு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. போதிய பாலிதீன் சாக்குகளால் மூடப்பட்டிருந்ததால் மழையால் பெரிய சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றார்.

    உழவர் உழைப்பாளர் கட்சியின் மாவட்ட தலைவர் ஈஸ்வரமூர்த்தி கூறுகையில், திருப்பூர் மாவட்டத்தில், எதிர்பார்த்த அளவை காட்டிலும் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆன்லைன் பதிவால் காலதாமதம் ஏற்பட்டது. நெல் கொள்முதல் மையங்களில் மழையால் நெல் மூட்டைகள் சேதமாகின்றன. வேலை உறுதி திட்டம், தேசிய உணவு பாதுகாப்பு திட்டங்களில் கூடுதலாகநெல் மூட்டைகள் அடுக்கும் மேற்கூரையுடன் கூடிய கிடங்குகள் அமைக்கலாம். கிடங்குகள் விரைவில் நிரம்பிவிட்டால் வெட்ட வெளியில் மூட்டைகள் அடுக்கப்படுகின்றன. இந்நிலை மாற வேண்டும். ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் நெல் இருப்பு மையங்களை படிப்படியாக அமைத்து வைக்க வேண்டும்என்றார்.

    ×