search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மேற்கு வங்கம்"

    • மசோதாவிற்கு 2 எம்.பி.க்களை தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்
    • தே.ஜ.க. கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை

    மேற்கு வங்காளத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் (62). பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருபவர்.

    இந்தியாவின் பாராளுமன்ற தொகுதிகளிலும், மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான மசோதாவை நேற்று மக்களவையில் பா.ஜ.க. தாக்கல் செய்தது. இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் தொகை கணக்கெடுப்பும், பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பும் முடிந்ததும்தான் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 2024 பொதுத்தேர்தலுக்கு பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

    மக்களவையில் 2 உறுப்பினர்கள் நீங்கலாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த எதிர்கட்சிகள் அதன் சில அம்சங்களை குறித்து விமர்சித்தனர்.

    இது குறித்த விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய டெரிக் ஓ பிரியன் தெரிவித்ததாவது:

    பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பா.ஜ.க. உண்மையில் விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்குவது வேறு; வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்குவது என்பது வேறு. மேற்கு வங்காளத்தில் சுகாதாரம், நிதி, நில சீர்திருத்தம், தொழில் துறை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு பெண்கள்தான் அமைச்சர்களாக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை. நீங்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து புது பாராளுமன்றத்திற்கு மாறலாம். ஆனால் முதலில் உங்கள் கண்ணோட்டத்தை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெரிக் ஓ பிரையன் அரசியலில் நிழைவதற்கு முன் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்ற போர்ன்விட்டா கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேள்வியாளராக பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார்.
    • தற்போது மம்தாவுடன் சமரசம் செய்து கொள்ள பிரதமர் மோடி வருகிறார்.

    பிரதமர் மோடி இன்று மேற்கு வங்காள மாநிலத்திற்கு பயணம் மேற்கொள்கிறார். ரூ.7800 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைக்கும் அவர், முடிக்கப்பட்ட திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்

    கொல்கத்தாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் ஹவுரா-நியூ ஜல்பாய்குரியை இணைக்கும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தை பிரதமர் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார். மேலும் ஜோகா-தரதாலா இடையே மெட்ரோ ரெயில் போக்குவரத்தை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.

    இந்நிலையில், பிரதமரின் மேற்கு வங்க பயணத்தை காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது. இது குறித்து செய்தி நிறுவனம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ள மேற்கு வங்க காங்கிரஸ் தலைவரும், அக்கட்சியின் மூத்த எம்.பி.யுமான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறியுள்ளதாவது:

    ஒரு ரெயில் இயக்கத்தை நாட்டின் பிரதமர் தொடங்கி வைக்கிறார் என்பதை நாம் கேள்விப்பட்டதே இல்லை. நான் ரெயில்வே அமைச்சராகவும் இருந்துள்ளேன். ஆனால் எங்கள் ஆட்சியின் போது பிரதமர் மன்மோகன் சிங் எந்த ரெயில் இயக்கத்தையும் தொடங்கி வைத்ததில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை மந்திரி அமித் ஷா மேற்கு வங்காளத்திற்கு வந்தார். தற்போது மம்தாவுடன் சமரசம் செய்ய பிரதமர் மோடி வருகிறார். இதனால் மம்தா மற்றும் அவரது கட்சியினருக்கு எதிரான சிபிஐ, அமலாக்கத்துறை விசாரணையின் வேகம் குறையும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். 

    • மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாக பாஜக விமர்சனம்.
    • மம்தா பானர்ஜி பதில் அளிக்க மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

    மேதினிபூர்:

    மேற்கு வங்க மாநிலம் புர்பா மேதினிபூர் மாவட்டத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் பானர்ஜியின் கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த பகுதி அருகே உள்ள பூபதிநகரில் ஒரு வீட்டில் குண்டு வெடித்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    ஓலை கூரையுடன் கூடிய அந்த வீடு முற்றிலும் சேதமடைந்ததாகவும், அங்கிருந்து மூன்று உடல்கள் மீட்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த சம்பவத்தில் மேலும் சிலர் காயமடைந்துள்ள நிலையில் குண்டு வெடிப்புக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தகவல்கள் தெரிவித்துள்ளன.

    இந்த சம்பவம் குறித்து விமர்சித்துள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் திலீப் கோஷ், மாநிலத்தில் வெடிகுண்டு தயாரிக்கும் தொழில் மட்டுமே செழித்து வருவதாகவும், இந்த சம்பவத்திற்கு திரிணாமுல் காங்கிரஸே பொறுப்பேற்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். இதுபோன்ற சம்பவங்கள் குறித்து முதல்வர் மம்தா பானர்ஜி அமைதியாக இருப்பது ஏன் என்றும், அவர் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் மூத்த தலைவர் சுஜன் சக்ரவர்த்தி குறிப்பிட்டுள்ளார்.

    மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை ‘பங்க்ளா’ என மாற்றம் செய்து அம்மாநில சட்டசபையில் இன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. #WestBengal #Bangla
    கொல்கத்தா:

    ஆங்கிலேயர் காலத்தில் இரண்டாக பிரிக்கப்பட்ட வங்காளம், நாடு சுதந்திரம் அடைந்ததற்கு பின் மேற்கு வங்கம் இந்தியாவுடனும், கிழக்கு வங்கம் பாகிஸ்தானுடனும் இணைக்கப்பட்டன. கிழக்கு வங்கம் பின்னர் பங்களாதேஷ் என தனிநாடாக மாறியது.

    மேற்கு வங்காளத்தின் ஆங்கில மொழியாக்கம் ‘வெஸ்ட் பெங்கால்’ என வருவதால், ஆங்கில அகரவரிசைப்படி மத்திய அரசு கூட்டங்களில் கடைசி இடத்தில் மேற்கு வங்காளத்தின் பிரதிநிதிகள் அமர வைக்கப்படுகின்றனர் என்ற குற்றச்சாட்டு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியால் நீண்ட காலமாக கூறப்பட்டது.

    பாராளுமன்ற கூட்டத்தொடர் உள்ளிட்ட மிக முக்கிய இடங்களிலும் தங்களது சார்பில் பங்கேற்கும் பிரதிநிதிகள் பேச கடைசியாக வாய்ப்பு வழங்கப்படுகிறது எனவும் அவர் கூறி வந்தார்.



    வங்காளத்தின் பாரம்பரியதை மீட்டெடுக்கும் விதமாக மேற்குவங்கத்தின் பெயரை மாற்றப்படும் என அவர் 2011-ம் ஆண்டே அறிவித்தார். அறிவித்த கையோடு, அம்மாநிலத்தின் பெயரை வங்காள மொழியில் ‘பச்சிம் பங்கா’ என பெயர் மாற்றம் செய்தார். ஆனால், இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்கவில்லை.

    இதன் பிறகு வங்காளத்தில் ‘பங்களா’ என்றும் ஆங்கிலத்தில் ‘பெங்கால்’ என்றும், இந்தியில் ‘பங்கால்’ என்று அழைக்கும் பரிந்துரையை அம்மாநில அரசு அனுப்பி வைத்தது. ஆனால், இதனையும் மத்திய அஅரசு ஏற்கவில்லை.

    இந்நிலையில், மேற்குவங்கத்தின் பெயரை மீண்டும் ‘பங்க்ளா’ என பெயர் மாற்றம் செய்ய அம்மாநில அரசு முடிவு செய்தது. இதன்படி வங்க மொழியில் மட்டுமின்றி, இந்தி, ஆங்கிலம் என அனைத்து மொழிகளிலும் ‘பங்க்ளா’ என்றே அழைக்கும் விதத்தில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

    இதற்கான தீர்மானம் அம்மாநில சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்படும். மத்திய அரசு ஒப்புதல் அளித்தபின் அது அரசிதழில் வெளியாகும். அதன்பிறகு மேற்கு வங்கத்தின் பெயர் அதிகாரபூர்வமாக ‘பங்க்ளா’ என பெயர் மாற்றம் செய்யப்படும்.

    ஆனால், மத்திய அரசு உடனடியாக எந்த முடிவும் எடுக்காமல் காலம் தாழ்த்தும் என்று கூறப்படுகிறது.
    ×