search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "33 percent reservation"

    • பெண்களுக்கு 33 சதவீதம்
    • மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும்

    வேலூர்:

    த.மா.கா. மகளிரணி துணை தலைவி வீ.கீதா தேச பக்தன் கூறியிருப்பதாவது:-

    ஜவஹர்லால் நேரு, மொராஜ் தேசாய், வாஜ்பாய் மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வர முடியாத காலத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ஜியம் திட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்கியும் பாராளுமன்ற ராஜசபையிலும் நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

    ஆனால் எதிர்க்கட்சிகளுடைய ஒற்றுமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பாராளுமன்ற அரங்கத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் சட்டத்தில் கொண்டு வந்து பெருமை சேர்த்து்ளார்.

    மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும். உலக அரங்கில் பாரத நாடு பெருமை பெறும். மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடிமீண்டும் பிரதமராக வரவேண்டும். இந்நாளில் தமிழ் மக்களின் சார்பாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பாகவும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • மசோதாவிற்கு 2 எம்.பி.க்களை தவிர அனைவரும் ஆதரவு தெரிவித்தனர்
    • தே.ஜ.க. கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை

    மேற்கு வங்காளத்திலிருந்து திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சார்பாக மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர் டெரிக் ஓ பிரையன் (62). பல சந்தர்ப்பங்களில் பா.ஜ.க.விற்கு எதிராக பாராளுமன்றத்தில் குரல் கொடுத்து வருபவர்.

    இந்தியாவின் பாராளுமன்ற தொகுதிகளிலும், மாநிலங்களின் சட்டசபை தொகுதிகளிலும் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கான மசோதாவை நேற்று மக்களவையில் பா.ஜ.க. தாக்கல் செய்தது. இந்திய பாராளுமன்றத்திற்கான புதிய கட்டிடத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் மசோதா இது என்பது குறிப்பிடத்தக்கது.

    மக்கள் தொகை கணக்கெடுப்பும், பாராளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை மறுசீரமைப்பும் முடிந்ததும்தான் இந்த ஒதுக்கீடு நடைமுறைக்கு வரும். 2024 பொதுத்தேர்தலுக்கு பிறகு இதற்கான பணிகள் தொடங்கும் என அரசு தெரிவித்துள்ளது.

    மக்களவையில் 2 உறுப்பினர்கள் நீங்கலாக அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்த மசோதாவிற்கு ஆதரவு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று இந்த மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. மசோதாவிற்கு ஒப்புதல் அளித்த எதிர்கட்சிகள் அதன் சில அம்சங்களை குறித்து விமர்சித்தனர்.

    இது குறித்த விவாதத்தின் போது மாநிலங்களவையில் பேசிய டெரிக் ஓ பிரியன் தெரிவித்ததாவது:

    பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பா.ஜ.க. உண்மையில் விரும்பவில்லை. தேர்தலில் போட்டியிட தொகுதி ஒதுக்குவது வேறு; வெல்லும் வாய்ப்புள்ள தொகுதிகளை ஒதுக்குவது என்பது வேறு. மேற்கு வங்காளத்தில் சுகாதாரம், நிதி, நில சீர்திருத்தம், தொழில் துறை மற்றும் வர்த்தகம் ஆகியவற்றிற்கு பெண்கள்தான் அமைச்சர்களாக உள்ளனர். தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை. நீங்கள் பழைய பாராளுமன்ற கட்டிடத்திலிருந்து புது பாராளுமன்றத்திற்கு மாறலாம். ஆனால் முதலில் உங்கள் கண்ணோட்டத்தை நீங்கள் மாற்றி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    டெரிக் ஓ பிரையன் அரசியலில் நிழைவதற்கு முன் தொலைக்காட்சிகளில் புகழ் பெற்ற போர்ன்விட்டா கேள்வி-பதில் நிகழ்ச்சியில் கேள்வியாளராக பிரபலம் அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே பெண்களுக்கு பல இடங்களில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
    • கால தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அமலுக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்.

    சென்னை:

    பெருந்தலைவர் மக்கள் கட்சித் தலைவர் என்.ஆர்.தனபாலன் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

    நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை பாராளுமன்றத்தில் அனைத்து கட்சி ஆதரவுடன் நிறைவேற்றி இருப்பதை பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் வரவேற்கிறேன்.

    கால தாமதமாக நிறைவேற்றப்பட்டாலும் உடனடியாக அமலுக்கு வந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். தமிழகத்தை பொறுத்த வரை மறைந்த முதல்வர் ஜெயலலிதா ஆட்சி காலத்திலேயே பெண்களுக்கு பல இடங்களில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. பெண்களுக்கு முழு சுதந்திரம் கொடுத்து அதிகாரத்தை கொடுக்கும் பட்சத்தில் தவறுகள் தடுக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. #OdishaAssembly #33pcreservation #womenreservation
    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட பெண்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என பெண்ணுரிமை ஆர்வலர்கள் நாடு முழுவதும் குரல் எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    147 உறுப்பினர்களை கொண்ட ஒடிசா மாநில சட்டசபையில் தற்போது 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். ஆண்-பெண்களுக்கு இடையிலான இந்த விகிதாச்சாரத்தை ஓரளவுக்கு சீரமைக்க முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தீர்மானித்தார்.

    இதைதொடர்ந்து,  எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா ஒன்றை அவர் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    எனினும், நேற்றிரவு இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டசபை பா.ஜ.க. தலைவர் கே.வி.சிங்டியோ, பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி கொறடாவும் இதே கருத்தை முன்வைத்தார்.

    இதற்கு பதிலளித்த அரசு கொறடா, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விஷயத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒடிசா முன்மாதிரியாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். #OdishaAssembly #33pcreservation #womenreservation 
    ×