search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாரத பிரதமர் மோடிக்கு த.மா.கா. மகளிர் அணி நன்றி
    X

    கோப்புப்படம்

    பாரத பிரதமர் மோடிக்கு த.மா.கா. மகளிர் அணி நன்றி

    • பெண்களுக்கு 33 சதவீதம்
    • மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும்

    வேலூர்:

    த.மா.கா. மகளிரணி துணை தலைவி வீ.கீதா தேச பக்தன் கூறியிருப்பதாவது:-

    ஜவஹர்லால் நேரு, மொராஜ் தேசாய், வாஜ்பாய் மற்றும் இந்திரா காந்தி போன்ற பிரதமர்கள் 33 சதவீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு செய்து சட்டம் கொண்டு வர முடியாத காலத்தில் பாரத பிரதமர் ராஜீவ் காந்தி பஞ்சாயத்து ராஜ்ஜியம் திட்டத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் வழங்கியும் பாராளுமன்ற ராஜசபையிலும் நிறைவேற்ற வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

    ஆனால் எதிர்க்கட்சிகளுடைய ஒற்றுமையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் புதிய பாராளுமன்ற அரங்கத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் சட்டத்தில் கொண்டு வந்து பெருமை சேர்த்து்ளார்.

    மகளிர் அதிகாரம் பெற்றால் நாடு உயரும். உலக அரங்கில் பாரத நாடு பெருமை பெறும். மேலும் பாரத பிரதமர் நரேந்திர மோடிமீண்டும் பிரதமராக வரவேண்டும். இந்நாளில் தமிழ் மக்களின் சார்பாகவும் தமிழ் மாநில காங்கிரஸ் மகளிர் அணி சார்பாகவும் நன்றி.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×