search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மூதாட்டியை தாக்கி"

    • வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கினார்.
    • போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் கோபி சாலை ஒண்டி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த வர் சகுந்தலா (65). இவர் வீட்டு அருகே தேங்காய் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் சகுந்தலா கடைக்கு வந்தார். இதை யடுத்து அன்று இரவு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த அந்த வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி சகுந்தலாவை தாக்கினார்.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

    இதில் அவர் விழுப்புரம் மாவட்டம் கானைகோனூர் புதுக்காலனியை சேர்ந்த கிறிஸ்தாஸ் (25) என்பதும், குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர் சகுந்தலாவை தாக்கி செல்போனை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து செல்போனை கைப்பற்றிய பங்களாப்புதூர் போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    • மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
    • 2 பேரும் மூதாட்டியை தாக்கி தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.

    பவானி:

    பவானி காளிங்கராய ன்பாளையம் மூவேந்தர் நகர் பகுதியில் வசிப்பவர் ராஜா. இவருடைய மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (94) வசித்து வந்து உள்ளனர். ராஜாவின் மனை வி உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    அவரை தினசரி ராஜா தனது வாகனத்தில் சென்று வீட்டிற்க்கு அழைத்து வருவது வழக்கமாகக் கொண்டுள்ளார். சம்பவத்தன்று தனது வீட்டில் தாய் குஞ்சமாவை விட்டுவி ட்டு மனைவியை அழைத்து வர ராஜா சென்றுள்ளார். பின்னர் வீட்டிற்கு வந்து பார்க்கும் போது தனது தாய் ரத்த வெள்ளத்தில் பலத்த காயத்துடன் கழுத்து மற்றும் கைகளில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் பறித்து சென்றது தெரியவந்தது.

    காயத்துடன் அவதி பட்டு க்கொண்டு இருந்த அவரை மீட்டு பவானி அரசு மருத்துவ மனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மேல் சிகிச்சைக்காக ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் தொடர்பாக ஈரோடு போலீஸ் சூப்பிரண்டு ஜகவர் உத்தர வுபடி பவானி டி.எஸ்.பி. சித்தோடு இ ன்ஸ்பெக்டர் உட்பட போலீ சார் சம்பவ இடம் விரைந்து சென்று தீவிர விசாரணை மேற்கொ ண்டனர். அப்பகுதி யில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை கொண்டு விசா ரணையை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் சித்தோடு போலீசார் கவுந்தப்பாடி மெயின் ரோடு பெரியார் நகர் பகுதியில் வாகன சோத னையில் ஈடுபட்டு கொண்டி ருந்தனர்.

    அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசார ணை மேற்கொ ண்டனர். அவர்கள் 2 பேரும் முன்னுக்கு முரணாக பதில் அளித்த நிலையில் சித்தோடு போலீஸ் நிலையத்தில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்ட னர்.

    விசாரணையில் பவானி மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்த சரவணன் (45), திருப்பூர் வருவாய்த்து றையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வரும் இவரும், இவரின் நண்பரான நாமக்கல் மாவட்டம் குமராபா ளைய த்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி பாலூ (47) என்பது தெரியவந்தது.

    மேலும் குடிப்பழ க்கத்தி ற்கு அடிமையான இவர்கள் பணம் தேவை ப்பட்ட நிலையில் ராஜாவி ன் தாய் குஞ்சம்மாள் வீட்டில் தனியாக இருப்பதை கண்டு உள்ளே நுழைந்த 2 பேரும் மூதாட்டியை தாக்கி ரத்த காயம் ஏற்படுத்தி அவர் கழுத்தில் அணிந்திருந்த 2 பவுன் தங்க செயின் மற்றும் கையில் அணிந்திருந்த 3 பவுன் கொண்ட 2 தங்க வளையல்கள் என 5 பவுன் தங்க நகைகளை பறித்து சென்றது தெரியவந்தது.

    இதனையடுத்து சித்தோடு போலீசார் சரவணன் மற்றும் பாலூ ஆகிய 2 பேரையும் கைது செய்து ஈரோடு குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன் ஆஜர் படுத்தப்பட்டு பின்னர் கோபி மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

    • குஞ்சம்மாள் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.
    • மர்ம நபர் ஒருவர் தாக்கி நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்க ராயன்பாளையம் அடுத்த மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (65).

    அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ஒன்றாக வசித்து வருகி றார்கள். உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் உமா சாந்தியை அழைத்து வருவ தற்காக ராஜா கவுந்தப்பாடி புதூருக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது தாய் கஞ்ச ம்மாள் மட்டும் தனி யாக இரு ந்தார். இதையடுத்து ராஜா பள்ளியில் இருந்து மனைவி யை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது குஞ்சம்மா ள் வீட்டின் படுக்கை அறையி ல் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ர்ச்சி அடைந்த அவர்கள் மூதா ட்டி யிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கி அவர் கழுத்தில் அணி ந்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் கையில் அணிந்திரு ந்த 3 பவுன் வலையல் என 5 பவுன் நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    இதில் படுகாயம் அடைந்த குஞ்சம்மாளை அக்கம் பக்க த்தினர் உதவி யுடன் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனு ப்பி வைத்துள்ளனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகி ச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ராஜா சித்தோ டு போலீசில் புகார் கொடு த்தார். அதன் பேரில் சித்தோ டு போலீசார் மற்று ம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி ஆகியோர் சம்பவ இடம் வந்து அந்த மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

    இதில் மூதாட்டி தனியாக வீட்டில் இருந்ததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவரை தாக்கி நகைகள் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு மர்ம நப ர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சித்தோடு போலீ சார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×