search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூதாட்டியை தாக்கி கைதான வாலிபர் சிறையில் அடைப்பு
    X

    மூதாட்டியை தாக்கி கைதான வாலிபர் சிறையில் அடைப்பு

    • வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி தாக்கினார்.
    • போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    டி.என்.பாளையம்:

    ஈரோடு மாவட்டம் பங்களாப்புதூர் கோபி சாலை ஒண்டி முனியப்பன் கோவில் பகுதியை சேர்ந்த வர் சகுந்தலா (65). இவர் வீட்டு அருகே தேங்காய் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வாலிபர் ஒருவர் சகுந்தலா கடைக்கு வந்தார். இதை யடுத்து அன்று இரவு மீண்டும் அந்த பகுதிக்கு வந்த அந்த வாலிபர் சகுந்தலாவிடம் பணம் கேட்டு மிரட்டி சகுந்தலாவை தாக்கினார்.

    இதில் அவர் காயம் அடைந்தார். இதையடுத்து அந்த வாலிபர் கொலை மிரட்டல் விடுத்து விட்டு சென்று விட்டார். இது குறித்து பங்களாப்புதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த வாலிபரை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி முன்பு நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை செய்தனர்.

    இதில் அவர் விழுப்புரம் மாவட்டம் கானைகோனூர் புதுக்காலனியை சேர்ந்த கிறிஸ்தாஸ் (25) என்பதும், குமாரபாளையம் பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூளையில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது.

    மேலும் அவர் சகுந்தலாவை தாக்கி செல்போனை பறித்து சென்றதும் தெரிய வந்தது.

    இதனையடுத்து செல்போனை கைப்பற்றிய பங்களாப்புதூர் போலீசார் கிறிஸ்தாஸ் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து கோபிசெட்டிபாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×