search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The old lady was attacked"

    • குஞ்சம்மாள் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.
    • மர்ம நபர் ஒருவர் தாக்கி நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    பவானி:

    பவானி அருகே உள்ள காளிங்க ராயன்பாளையம் அடுத்த மூவேந்தர் நகர் பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவரது மனைவி உமா சாந்தி. ராஜாவின் தாய் குஞ்சம்மாள் (65).

    அவர்கள் அனைவரும் அந்த பகுதியில் ஒன்றாக வசித்து வருகி றார்கள். உமா சாந்தி கவுந்தப்பாடி புதூர் பகுதி யில் உள்ள அரசு பள்ளியில் தலைமை ஆசிரி யராக பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் உமா சாந்தியை அழைத்து வருவ தற்காக ராஜா கவுந்தப்பாடி புதூருக்கு சென்று விட்டார். வீட்டில் அவரது தாய் கஞ்ச ம்மாள் மட்டும் தனி யாக இரு ந்தார். இதையடுத்து ராஜா பள்ளியில் இருந்து மனைவி யை வீட்டிற்கு அழைத்து வந்தார். அப்போது குஞ்சம்மா ள் வீட்டின் படுக்கை அறையி ல் ரத்த காயத்துடன் அலறி துடித்து கொண்டு இருந்தார்.

    இதை கண்டு அதிர்ர்ச்சி அடைந்த அவர்கள் மூதா ட்டி யிடம் விசாரணை நடத்தினர்.

    இதில் அவரை மர்ம நபர் ஒருவர் தாக்கி அவர் கழுத்தில் அணி ந்திருந்த 2 பவுன் தங்கச் செயின் மற்றும் கையில் அணிந்திரு ந்த 3 பவுன் வலையல் என 5 பவுன் நகைகள் திருடு சென்றது தெரியவந்தது.

    இதில் படுகாயம் அடைந்த குஞ்சம்மாளை அக்கம் பக்க த்தினர் உதவி யுடன் மீட்டு பவானி அரசு மருத்துவம னைக்கு அனு ப்பி வைத்துள்ளனர்.

    அங்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகி ச்சை க்காக ஈரோடு அரசு மருத்து வமனையில் அனுமதிக்கப்ப ட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இது குறித்து ராஜா சித்தோ டு போலீசில் புகார் கொடு த்தார். அதன் பேரில் சித்தோ டு போலீசார் மற்று ம் பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி ஆகியோர் சம்பவ இடம் வந்து அந்த மூதாட்டியிடம் விசாரணை மேற்கொண்ட னர்.

    இதில் மூதாட்டி தனியாக வீட்டில் இருந்ததை நோட்ட மிட்ட மர்ம நபர்கள் அவரை தாக்கி நகைகள் கொள்ளை யடித்து சென்றது தெரிய வந்தது.

    இது குறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற் கொண்டு மர்ம நப ர்களை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் இன்று அதிகாலை சித்தோடு போலீ சார் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பிடித்து அவரிடம் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×