search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முன்னாள் முதல்வர்"

    • தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தார்.
    • முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் தகவல்.

    ஜம்மு காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள சங்கம் என்ற இடத்தில் மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவரும், முன்னாள் முதல்வருமான மெகபூபா முப்தியின் வாகனம் விபத்துக்குள்ளானது. இதில், அவர் காயமின்றி உயிர் தப்பினார். 

    தீ விபத்தில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்திப்பதற்காக கானாபலுக்குச் மெகபூபா சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டுள்ளது. மெகபூபா சென்றுக் கொண்டிருந்த வாகனம் மற்றொரு கார் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. மெகபூபாவின் தனிப்பட்ட பாதுகாப்பில் இருந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    முப்தி பாதுகாப்பாக இருப்பதாகவும், காயம் ஏதும் ஏற்படவில்லை என்றும் பிடிபி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

    • உடுமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி (எக்ஸ்டன்ஷன்) மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.
    • முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளை பள்ளி மாணவர்களுடன் கொண்டாடபட் டது.

    உடுமலை :

    மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பிறந்தநாளையொட்டி உடுமலை10-வது வார்டுக்கு உட்பட்ட உடுமலை நகராட்சி நடுநிலைப்பள்ளி (எக்ஸ்டன்ஷன்) மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள் ,எழுது பொருட்கள் மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டது.

    இதில் உடுமலை நகராட்சி தலைவர் மு.மத்தீன், 10வது வார்டு கவுன்சிலர் தண்டபாணி ஆகியோர் கலந்துகொண்டு பள்ளி மாணவ மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுது பொருட்களை வழங்கினர்.

    இதில் பள்ளி தலைமை ஆசிரியர் புனிதா ,ஆசிரியர்கள் பால அன்பு வள்ளி, சத்தியபாமா ,கனக சுந்தரி ,அலாவுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×