என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "முதியோர்"
- பொங்கலூரில் உலக முதியோர் தின விழா நடந்தது.
- முதியோர்களின் நலனை பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
திருப்பூர் :
பொங்கலூரில் உலக முதியோர் தின விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வினீத் பங்கேற்றார்.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, பொங்கலூர் பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் சார்பில் உலக முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் வினீத் பேசியதாவது:-
ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள படி உலக முதியோர் தின விழா ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாட ப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும் மரியாதை செய்யவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் விதத்தில் அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. முதியோர்களின் நலனை பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூத்த குடிமக்களுக்காக அரசு 2007-ம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2009-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் தீர்ப்பாயம் அமைத்து இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில் தீர்ப்பாயம் மூலம் (திருப்பூர், தாராபுரம்,உடுமலை) இதுவரை 324 மனுக்கள் பெறப்பட்டு 303 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டரிடம் 89 மேல் முறையீடு மனுக்கள் பெறப்பட்டு, அதில் 83 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமரச அலுவலரிடம் ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை 27 மனுக்கள் பெறப்பட்டு, 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
மேலும் முதியோர்களு க்காக இலவச அரிசி திட்டம், ஓய்வூதியம், அரசு மருத்துவமனைகளில் தனி படுக்கை வசதி அமைக்கப்ப ட்டுள்ளது. ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்காக அவர்களை பராமரிக்கும் பொருட்டு அரசு முதியோர் இல்லங்களை உருவாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 12 முதியோர் இல்லங்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ன் கீழ் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.12 முதியோர் இல்லங்களில் 250 ஆண் மற்றும் பெண் முதியோர்கள் தங்கி உள்ளனர். மேலும் மத்திய அரசு முதியோருக்காக 14567 என்ற உதவி எண்ணை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதன் பின்னர் உலக முதி யோர் தின விழாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி உலகம் முதியோர் தினத்தை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட 13 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வழங்கி சிறப்பு செய்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதியோர் இல்லங்களுக்கு ஊன்று கோல்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.
இவ்விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் எஸ் சௌமியா, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, யூனிவர்சல் பீஸ் பவுண்டேஷன் நிறுவனர் ராஷ்ரிய ரத்னா குருஜி.சிவாத்மா சர்வாலயம் முதியோர் இல்ல தலைமை நிர்வாக அதிகாரி ஆர் ராஜம்மாள், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சேவையர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
- 85 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு வந்துள்ளார்.
- பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் கொண்டு போய் சேர்த்தனர்.
வெள்ளகோவில் :
முத்தூர் நகர் பகுதியில் சுமார் 85 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் சுற்றி திரிந்து பிச்சை எடுத்து சாப்பிட்டுக்கொண்டு வந்துள்ளார்.
இது குறித்த தகவல் அறிந்த நண்பர்கள் ரத்ததான அறக்கட்டளை, மனிதம் அறக்கட்டளை மற்றும் வெள்ளகோவில் தனியார் ஆம்புலன்ஸ் தன்னார்வ அமைப்பினர் முதியவரை மீட்டு முகசவரம் செய்து, குளிக்க வைத்து நல்ல உடை உடுத்தி பல்லடத்தில் உள்ள ஒரு தனியார் காப்பகத்தில் கொண்டு போய் சேர்த்தனர். முதியவர் ரூ.47 ஆயிரத்து 250 பணம் வைத்திருந்ததாகவும் பணத்துடன் கொண்டு சென்று சேர்த்துள்ளதாகவும் நண்பர்கள் ரத்ததான குழுவை சேர்ந்த பாலு கூறினார்.
- தக்கலையில் சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனத்தலைவர் பேட்டி
- முதியோர்களது நோய்த் தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
கன்னியாகுமரி:
சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக உலக முதியோர் தினம் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. இது குறித்து சட்ட விழிப்புணர்வு இயக்க நிறுவனத்தலைவர் வழக்கறிஞர் ஜார்ஜ் பிலீஜின் தக்கலையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
முதியவர்களை மகிழ்ச்சியோடு வைத்து கொள்ளும் நிலையை உருவாக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் நமக்கு இருக்கிறது. முதியோர் இல்லங்கள் இன்று அதிகரித்து கொண்டே செல்வது மிகுந்த வேதனையளிக்கிறது. வயதாகும் போது நீடித்து நிலைக்கும் நோய்கள் உருவாகி முதியோர்களின் உடலுறுப்புகள் செயலிழந்து போகவும் வாய்ப்புண்டு. இதனால், சுதந்திரமாக வாழும் திறனை அவர்கள் இழந்து போக நேரிடும். அவர்களது நோய்த் தடுப்பு மண்டலம் பலவீனமாகி நோய்கள் தாக்கும் ஆபத்து ஏற்படுகிறது.
முதியோருக்கான அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்திய அரசு 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு முதியோருக்கான சுகாதார பராமரிப்பு தேசியத் திட்டத்தின் கீழ் பல்வேறு நோய்த் தடுப்பு, குணப்படுத்தல் மற்றும் மறுவாழ்வு சேவைகளை வழங்கி வருகிறது.
பொருளாதார, சமூக வளர்ச்சிக்கு முதியோர் பேரளவில் நன்மைகளை வழங்குகின்றனர். இருப்பினும், பாரபட்சமும், சமூக புறக்கணிப்பும் தொடர்கின்றன. சமூகப் பொருளாதார அளவில் செயல் திறனுடனும், பாதுகாப்பாகவும், ஆரோக்கியமாகவும் முதிர்ந்து வரும் மக்கள் கூட்டம் திகழுவதை உறுதிப்படுத்த நாம் இந்த பாரபட்சத்தை களைந்தே தீர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
- தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது.
- இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர்.
முதியவர்கள் பெரும்பாலும் பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, எலும்பு பலம் குறைதல் மற்றும் ஞாபக மறதியால் பாதிக்கப்படுகின்றனர். உலக அளவில் மக்கள் தொகையில் முதியோர்களின் எண்ணிக்கை 10 சதவீதம் ஆகும். இந்தியாவில் 8 சதவீதம் முதியோர்கள் உள்ளனர். வயதான காரணத்தால் பார்வை குறைதல், சோர்வு, கழுத்து எலும்பு தேய்வு, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், பக்கவாதம், இதயக் கோளாறு, எலும்பு பலம் குறைதல், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி, மன அழுத்தம் போன்றவைகளால் முதியவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
கடந்த 5 ஆண்டுகளாக பக்கவாதம், நரம்புத் தளர்ச்சி, ஞாபகமறதி மற்றும் எலும்பு பலம் குறைதல் போன்ற பிரச்சினைகளால் முதியவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எலும்பு பலம் குறைவதால், திடீரென்று கால் தவறி கீழே விழுகின்றனர். அப்போது இடுப்பு எலும்பு, முதுகுத் தண்டுவடம், கை மணிக்கட்டு எலும்பில் முறிவு ஏற்படுகிறது. தனியாக இருக்கும் முதியவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. ஒரு சிலரின் மனநிலையும் பாதிக்கப்படுகிறது.
முதுமை என்றாலே நோய்களும் கூடவே வந்து விடுகிறது. அவர்களுக்கு 4, 5 நோய்கள் ஒன்றாக வருகிறது. அவர்களை கவனிப்பது என்பது குழந்தையைக் கவனிப்பது போன்றது. அதே மாதிரிதான் சிகிச்சை அளிப்பதும். முதியவர்களுக்கு நோயின் தன்மையைப் பொறுத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. 100 வயது முதியவருக்குக்கூட அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. முதியோர்களுக்கு ஏற்படும் பக்கவாதம், நினைவாற்றல் குறைவு, மூளை அறிவுத்திறன் குறித்தும் அடிக்கடி கீழே விழும் முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்சினைகள் பற்றியும் ஆய்வு செய்யப்படுகிறது.
- மனிதனுக்கு வயதான பின்புதான் அல்சைமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன.
- மனிதன் 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறைய தொடங்கும்.
இந்தியாவிற்கு இளமையான நாடு என்றொரு பெயர்இருக்கிறது. அதே நேரத்தில் முதியோர்களின் எண்ணிக்கை சதவீதமும் அதிகரித்து வருகிறது.
முதுமைக்கு அரசு ஓர் அளவுகோல் வைத்திருக்கிறது. ஆண்களுக்கு 65 வயது, பெண்களுக்கு 60 வயது. ஆனால் உளவியல் கணக்குப்படி ஒருவருக்கு முதுமை என்பது 50 வயதிலேயே தொடங்கி விடுகிறது.
இப்போது போகும் வேகத்தில் போனால் 2060-ல் இந்திய மக்களில் 34 கோடி பேர் முதியவர்களாக இருப்பார்கள்.
பொதுவாகவே மனிதன் 40 வயதை கடந்துவிட்டாலே மூளையின் எடை குறைய தொடங்கும் என்கிறது, மருத்துவ உலகம்.
சராசரியாக 1394 கிராம் எடை கொண்ட மூளை, அதன்பின் 1161 கிராமாக குறைந்துவிடுகிறது. அதோடு மூளைக்கு போகும் ரத்த ஓட்டமும் நாளடைவில் கொஞ்சம், கொஞ்சமாக குறைய தொடங்குகிறது. மூளையில் ஏற்படும் இந்த மாற்றம் நரம்பு மண்டலத்தையும் பாதிக்கிறது.
நரம்பு மண்டலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கண், காது, சுவை உணர்வு, வாசனை உணர்வு, தசைகளின் இயக்கம், உணர்திறன் ஆகியவற்றின் செயல்பாடுகள் குறைகிறது. நரம்பணு இழப்பும், இணைப்பு திசுக்களில் ஏற்படும் மாற்றம்தான் இந்த எடை குறைவுக்கு காரணம் என்கிறார்கள், மருத்துவர்கள்.
மேலும் மூளையில் உள்ள ஹிப்போகாம்பஸ் மற்றும் சிங்குலேட் மேடு என்ற பகுதிதான் மனதை கட்டுப்படுத்துகிறது. முதுமை வந்தபின் இவை தங்கள் சக்தியை இழந்து விடுகின்றன. இதனால் முதுகெலும்பும் பாதிக்கப்படுகிறது. உணர்வு முடிச்சுகள், உள் மூளை நரம்பு அணுக்கள், சிறு மூளை அணுக்கள் ஆகியவை சுமார் 25 சதவீதம் வரை குறைந்துவிடுகிறது.
ஒரு மனிதனுக்கு வயதான பின்புதான் அல்சைமர், மனநல இழப்பு நோய் ஆகியவை தாக்குகின்றன. இவை ஒரு மனிதனின் சுய நினைவாற்றல், மானம், வெட்கம் ஆகிய உணர்வுகளை மழுங்க செய்துவிடுகிறது. இதன் தாக்கம் உள்ளவர்கள் நெருப்பு, மின்சாரம், கத்தி போன்றவற்றின் ஆபத்தை உணராமல் கூட செயல்படுவார்கள். காலை, மாலை நேரம் போன்ற எதையும் புரிந்துகொள்ள முடியாது. உடையில் சிறுநீர் கழிப்பார்கள். குளித்துவிட்டு ஆடை அணியாமல் வெளியே வருவார்கள். எனவே இதுபோன்ற நிலையில் உள்ள முதியோர்களை பாதுகாக்க அரசுமருத்துவமனைகளில் முதியவர்களுக்கென்று தனிப்பிரிவு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.
- ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை
- இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும்
நாகர்கோவில்:
தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ. விடுத்துள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் பாதுகாப்பற்ற நிலையில் வறிய நிலையில் வாழும் முதியோர்களுக்கு அரசின் சார் பில் ரூ.1,000 உதவித்தொகை மாதந்தோறும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருக்கும் முதியோர்களுக்கு உதவித் தொகை நிறுத்தப்படும் என்ற அரசு திடீரென அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு முதியோர்கள் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாக்கி உள்ளது.
ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளவர்களுக்கு மட்டும் உதவித்தொகை என்ற அறிவிப்பை தொடர்ந்து இரண்டு சமையல் எரிவாயு சிலிண்டர்கள் வைத்திருப்பவர்கள் ஒன்றை திரும்ப ஒப்படைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். 20 ஆண்டுகளுக்கு முன் சிலிண்டர்வைப்பு தொகை ரூ.450 மட்டுமே இருந்தது.
எனவே அந்த எரிவாயு சிலிண்டரை திருப்பி ஒப்படைக்கும் போது ரூ.450 மட்டுமே வழங்கப்படுகிறது. ஒரே வைப்புத் தொகையின் மூலம் இரண்டு சமையல் எரி வாயு சிலிண் டரை பெற்றவர்கள் ஒரு சிலிண்ட ரை மட்டும் ஒப்படைக்க முடியாது.
இரண்டு சிலிண்டர்களை யும் ஒன்றாகதான் ஒப்படைக்க முடியும். அப்படி ஒப்படைக்கப்படும்போது அவர்களுக்கு இரண்டு சிலிண்டர்களுக்கான வைப்புத் தொகையாக ரூ.900 வழங்கப்படுகிறது.
அதன் பிறகு புதிதாக ஒரு சமையல் எரிவாயு சிலிண்டர் பெற வைப்புத் தொகையாக ரூ.2,500 ரூபாய் கட்டி சமையல் எரிவாயு சிலிண் டர் பெறுகின்ற சூழ்நிலை ஏற்பட் டுள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு முதியோர் உதவித் தொகை பெற ஒரு சமையல் எரிவாயு என்ற அரசின் புதிய உத்தரவினை ரத்து செய்து முதல்வர் உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர்
- முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது
நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட சமூக நலத்துறை மற்றும் ரோஜாவனம் முதியோர் இல்லம் சார்பில் உலக முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு தினம் இல்ல இயக்குனர் அருள் ஜோதி தலைமையில், மேலாளர் கோபி முன்னிலையில் நடைபெற்றது. மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முதியோர்களுக்கு இனிப்பு, கதர் ஆடை வழங்கி பேசினார். முதியோர் பராமரிப்பில் சிறப்பாக சேவை செய்யும் சேவையாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நாகர்கோவில், கன்னியாகுமரி, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, குற்றாலம், சென்னை மற்றும் புதுடில்லி உள்ளிட்ட பகுதிகளில் ரோஜாவனம் முதியோர் இல்லம் செயல்பட்டு வருவதாகவும் இங்கு வந்து முதியோர்கள் பயன் பெறலாம் என ரோஜாவனம் இயக்குனர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் ரோஜாவனம் செவிலியர் கல்லூரி முதல்வர் புனிதா டேனியல், மருத்துவர் ஸ்டீவ் வாழ்த்துரை வழங்கினர். ரோஜாவனம் செவிலியர் கல்லூரி மாணவியர் கலை நிகழ்ச்சிகள் நடத்தினர். முதியோர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
முன்னதாக செவிலியர் கல்லூரி ஆசிரியர் பரமேஸ்வரி வரவேற்று பேசினார். நிறைவாக முதியோர் இல்ல ஆலோசகர் சுசீலா நன்றி கூறினார்.மேலாளர் சாமுவேல் ராஜன், செவிலியர் கல்லூரி பேராசிரியர்கள் சிபியா, செல்லம்மாள், பிரியா, மற்றும் மலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை.
- வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க செய்ய வேண்டியவை குறித்து பார்ப்போம்.
வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை. அது அவர்களின் மனம் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது.
நோய் எதிர்ப்பு சக்தி என்பது உடலுக்கு பாதுகாப்பு கவசமாகும். பிறக்கும் குழந்தைக்கு நோய் எதிர்ப்பு சக்தி சற்று பலவீனமாக இருக்கும். தாய்ப்பாலும், ஊட்டச்சத்து உணவுகளும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். அதுபோலவே வயதாகும்போது மீண்டும் நோய் எதிர்ப்பு சக்தி குறையத் தொடங்கும். தன்னம்பிக்கையும், ஊட்டச்சத்துமிக்க உணவும்தான் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
வயதானவர்கள் எல்லோரும் நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடுடன் இருப்பார்கள் என்பதில்லை. அது அவர்களின் மனம் மற்றும் ஆரோக்கியத்தைப் பொறுத்தது. நல்ல உணவை உட்கொள்வதும், உணர்ச்சிகளை சமநிலையில் வைத்திருப்பதும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த உதவும். கொரோனா வைரஸ் நீடிக்கும் இந்த காலகட்டத்தில் வயதானவர்கள் உடல்நலம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வயதானவர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை மீட்டெடுக்க செய்ய வேண்டிய விஷயங்கள் குறித்து பார்ப்போம்.
1. தினமும் மேற்கொள்ளும் வழக்கமான உடற்பயிற்சி உடல் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கும். மெதுவான மற்றும் ஆழமான சுவாசம் நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும். சிந்தனைகளை பகுத்தறிந்து செயல்படவும் ஊக்குவிக்கும்.
2. முதிய தம்பதியர் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிக்கலாம். குழந்தை பருவத்தில் விளையாடிய விளையாட்டுகளை மீண்டும் விளையாடி மகிழ்ச்சியை பரிமாறிக்கொள்ளலாம்.
3. தயிர், கஞ்சி போன்ற இயற்கை புரோபயாட்டிக்குகளை எடுத்துக்கொள்வதும், கோதுமை புல், ஸ்பைருலினா எனப்படும் சுருள் பாசி போன்றவற்றை சாப்பிடுவதும் ரத்தத்தை உருவாக்க உதவும்.
4. சமையலில் உப்பையும், எண்ணெய்யையும் குறைத்துக்கொள்வது செரிமான அமைப்புக்கு நல்லது. பழங்கள், காய்கறிகள் சாப்பிடுவதும் செரிமான செயல்பாடுகளுக்கு துணைபுரியும். தண்ணீர், பழஜூஸ், மூலிகை தேநீர், காபி போன்ற பானங்களை குறிப்பிட்ட இடைவெளியில் பருகுவது நீர்ச்சத்தை தக்கவைத்து, நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும்.
5. நோய் எதிர்ப்பு சக்தி தூக்கத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டது. தூக்கமின்மை நோய்களுக்கு நுழைவுவாயிலாக அமைந்துவிடும். இளைஞர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் தூக்க விஷயத்தில் அசட்டையாக இருக்கக்கூடாது. நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு போதுமான அளவு ஓய்வு எடுத்தாக வேண்டும். தினமும் இரவு குறைந்தது 7 மணிநேரம் தூங்குவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
6. அலைபேசி, டி.வி., கணினி ஆகியவை உடலின் இயற்கையான தூக்கவிழிப்பு சுழற்சியை சீர்குலைக்கும் என்பதால் தூங்க செல்வதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக அவைகளை தவிர்க்க வேண்டும்.
7. சுத்திகரிக்கப்பட்ட கார்போஹைட்ரேட் கலந்த உணவுகளும், சர்க்கரையும் அதிக எடை, உடல் பருமனுக்கு வித்திடும். வயதான காலத்தில் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்வது இருதய நோய்கள், நீரிழிவு போன்ற நீண்டகால உடல்நலப் பிரச்சினைகளுக்கு அடித்தளமிட்டுவிடும். ஆதலால் உடலை கட்டுக்கோப்புடன் வைத்துக் கொள்ள வேண்டும்.
8. உடற்பயிற்சி செய்தாலோ, வேலை செய்தாலோ, வெப்பமான காலநிலையில் வாழ்ந்தாலோ உடலுக்கு அதிக திரவங்கள் தேவைப்படும். வயதானவர்களுக்கு பெரும்பாலும் தாகம் எடுப்பதில்லை. தாகத்தை உணராவிட்டாலும் போதுமான இடைவெளியில் தவறாமல் திரவ உணவுகளை பருக வேண்டும். வயதானவர்கள் இன்றைய காலகட்டத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கங்களில் போதிய மாற்றங்களை செய்ய வேண்டியது அவசியமானது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்