search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Democratic Duty"

    • பொங்கலூரில் உலக முதியோர் தின விழா நடந்தது.
    • முதியோர்களின் நலனை பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    திருப்பூர் :

    பொங்கலூரில் உலக முதியோர் தின விழா நடந்தது. இதில் மாவட்ட கலெக்டர் வினீத் பங்கேற்றார்.

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் தாலுகா, பொங்கலூர் பிரபஞ்ச அமைதி சேவாஷ்ரமத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைகள் சார்பில் உலக முதியோர் தின விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். விழாவில் மாவட்ட கலெக்டர் வினீத் பேசியதாவது:-

    ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ள படி உலக முதியோர் தின விழா ஆண்டுதோறும் அக்டோபர் 1-ம் தேதி கொண்டாட ப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் உள்ள மூத்த குடிமக்களை மதிக்கவும் மரியாதை செய்யவும், குடும்பம், சமூகம் மற்றும் நாட்டுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளை நினைவு கூறும் விதத்தில் அவர்களின் அறிவு, ஆற்றல் மற்றும் சாதனைகளை மக்களுக்கு எடுத்துரைக்கும் நாளாக கொண்டாடப்படுகிறது. முதியோர்களின் நலனை பாதுகாக்கவும், உரிமைகளுக்காகவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மூத்த குடிமக்களுக்காக அரசு 2007-ம் ஆண்டு பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் இயற்றப்பட்டு 2009-ம் ஆண்டு திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இச்சட்டத்தில் தீர்ப்பாயம் அமைத்து இழந்த சொத்துக்களை மீண்டும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது.

    திருப்பூர் மாவட்டத்தில் தீர்ப்பாயம் மூலம் (திருப்பூர், தாராபுரம்,உடுமலை) இதுவரை 324 மனுக்கள் பெறப்பட்டு 303 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட கலெக்டரிடம் 89 மேல் முறையீடு மனுக்கள் பெறப்பட்டு, அதில் 83 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. மாவட்ட சமூக நல அலுவலகத்தில் சமரச அலுவலரிடம் ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை 27 மனுக்கள் பெறப்பட்டு, 25 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.

    மேலும் முதியோர்களு க்காக இலவச அரிசி திட்டம், ஓய்வூதியம், அரசு மருத்துவமனைகளில் தனி படுக்கை வசதி அமைக்கப்ப ட்டுள்ளது. ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்காக அவர்களை பராமரிக்கும் பொருட்டு அரசு முதியோர் இல்லங்களை உருவாக்கியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் 12 முதியோர் இல்லங்கள் பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்புச் சட்டம் 2007-ன் கீழ் சமூக நலத்துறையில் பதிவு செய்யப்பட்டு செயல்பட்டு வருகிறது.12 முதியோர் இல்லங்களில் 250 ஆண் மற்றும் பெண் முதியோர்கள் தங்கி உள்ளனர். மேலும் மத்திய அரசு முதியோருக்காக 14567 என்ற உதவி எண்ணை ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதன் பின்னர் உலக முதி யோர் தின விழாவில் இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி உலகம் முதியோர் தினத்தை முன்னிட்டு 80 வயதுக்கு மேற்பட்ட 13 வாக்காளர்களுக்கு இந்திய தேர்தல் ஆணையத்தின் கடிதத்தை வழங்கி சிறப்பு செய்தார். மேலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முதியோர் இல்லங்களுக்கு ஊன்று கோல்கள் மற்றும் ரோட்டரி சங்கத்தின் சார்பில் ரூ.1.50 லட்சத்திற்கான காசோலை மாவட்ட கலெக்டரிடம் வழங்கினார்கள்.

    இவ்விழாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முருகேசன், மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் எஸ் சௌமியா, மாவட்ட சமூக நல அலுவலர் அம்பிகா, யூனிவர்சல் பீஸ் பவுண்டேஷன் நிறுவனர் ராஷ்ரிய ரத்னா குருஜி.சிவாத்மா சர்வாலயம் முதியோர் இல்ல தலைமை நிர்வாக அதிகாரி ஆர் ராஜம்மாள், பிரபஞ்ச அமைதி சேவாஸ்ரமம் சேவையர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ஜனநாயக கடமை குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பொதுத்தேர்தலை போன்று பள்ளி மாணவர் தேர்தல் நடைபெற்றது. இதில் மாணவர்கள் கை விரலில் மையிட்டு, ஐ-பேடில் வாக்களித்தனர்.
    கோவை:

    கோவை காந்திபுரத்தில் உள்ள சுகுணா இண்டர்நேஷனல் பள்ளியில் மாணவர் நிர்வாக குழுவுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. தலைவர், தலைவி, விளையாட்டு செயலாளர், கலை இலக்கிய செயலாளர் ஆகிய 4 பொறுப்பாளர்கள், நிலம், நீர், காற்று, நெருப்பு ஆகிய அணிகளை கொண்ட 4 அணித்தலைவர் மற்றும் 4 துணை தலைவர்கள் என மொத்தம் 12 பொறுப்புகளுக்கு 38 மாணவ-மாணவிகள் போட்டியிட்டனர்.இவர்கள் சக மாணவர்களிடம் ஆதரவு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து வாக்குபதிவு நேற்று நடைபெற்றது.



    இதற்காக பள்ளியின் தரைத்தளத்தில் உள்ள அரங்கில் 8 மேஜைகள் போடப்பட்டு, ஒவ்வொன்றிலும் ஐ-பேடு வைக்கப்பட்டிருந்தது. வாக்குபதிவை பள்ளியின் நிறுவனர் லட்சுமி நாராயணசாமி வாக்களித்து தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து இயக்குனர் அந்தோணிராஜ், தலை மை ஆசிரியை அனிதா, மழலையர் பள்ளி பொறுப்பாளர் மீரா ஆகியோர் வாக்குப்பதிவு செய்தனர். இதையடுத்து மாணவ-மாணவிகள் வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னதாக அவர்களுக்கு பொதுத்தேர்தலில் வைப்பது போல கை விரலில் மை வைக்கப்பட்டது.அதன்பின்னர் அவர்கள், 12 பதவிகளுக்கு போட்டியிடும் மாணவ-மாணவிகளின் புகைப்படங்களை தொட்டு இணைய தளம் மூலம் வாக்களித்தனர். அவர்களில் யாரையும் பிடிக்கவில்லையென்றால் பொதுத்தேர்தலில் உள்ளது போன்று ‘நோட்டா’ வாக்கு பதிவு செய்யும் வசதியும் இருந்தது. ஆனால் யாரும் நோட்டாவுக்கு வாக்களிக்கவில்லை.

    இதுகுறித்து பள்ளி நிறுவனர் லட்சுமி நாராயணசாமி, தாளாளர் சுகுணா ஆகியோர் கூறியதாவது:-

    பள்ளி மாணவ-மாணவிகள் பள்ளியில் படிக்கும் போதே அரசியல் அறிவுபெறவேண்டும். தேர்தல் விதிமுறைகள் பற்றி தெரிந்து கொள்வது முக்கியம். தேர்தலில் வாக்களிப்பது என்பது நமது ஜனநாயக கடமை.நாட்டின் நலன் கருதி அதை தவற விடக்கூடாது.இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த தேர்தலை நடத்தினோம். இதில் 742 மாணவ-மாணவிகள், 86 ஆசிரியர்கள், பள்ளி நிர்வாக உறுப்பினர்கள் 4 பேர் என மொத்தம் 832 பேர் வாக்களித்தனர். பின்னர் வாக்கு பதிவு எண்ணப்பட்டு, 12 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள் வாழ்த்து தெரிவித்தனர். 
    ×