search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதல் மந்திரி குமாரசாமி"

    கர்நாடக சட்டசபையில் அடுத்த மாதம் ஜூலை 5-ந்தேதி முதல்-மந்திரி குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும். #KarnatakaBudget #Kumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மந்திரி சபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு பிறகு மந்திரி கிருஷ்ணபைரே கவுடா நிருபர்களிடம் கூறியதாவது:-

    காங்கிரஸ் - ஜே.டி.எஸ். கூட்டணி அரசின் முதல் பட்ஜெட் கூட்டத்தொடர் அடுத்த மாதம் (ஜூலை) 2-ந் தேதி தொடங்குகிறது.



    முதல் நாளில் கவர்னர் வி.ஆர். வாலா உரையாற்றுகிறார். முதல்-மந்திரியும், நிதித்துறையை கூடுதலாக கவனிப்பவருமான குமாரசாமி ஜூலை 5-ந் தேதி கூட்டணி அரசின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அதைத் தொடர்ந்து பட்ஜெட் விவாதம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார். #KarnatakaBudget #Kumaraswamy
     
    கர்நாடக மாநில தலைநகர் பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் அமைய வேண்டும் என இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னத் ஜஸ்டரிடம் முதல் மந்திரி குமாரசாமி கோரிக்கை விடுத்துள்ளார். #Bengaluru #USConsulate #CMKumaraswamy
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்துள்ளது. இதனால் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர் குமாரசாமி முதல் மந்திரியாக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் கென்னர் ஜஸ்டரை குமாரசாமி இன்று சந்தித்தார்.

    தலைநகர் பெங்களூருவில் அமெரிக்க தூதரகம் நிச்சயம் அமைய வேண்டும் என குமாரசாமி ஜஸ்டரிடம் வலியுறுத்தியுள்ளார்.

    அப்போது, கர்நாடக அரசு அமெரிக்காவுடன் நல்ல உறவை பேணி வருகிறது. தூதரகம் அமைப்பதற்கு தேவையான இடம், உள்கட்டமைப்பு வசதிகள் உள்பட அனைத்து தேவைகளையும் தமது அரசு நிறைவேற்றி தரும்.

    அமெரிக்காவில் ஏராளமான எண்ணிக்கையில் கன்னடர்கள் வேலை செய்து வருகின்றனர் என்பதையும், கர்நாடகாவில் இருந்து அமெரிக்கா செல்லும் சுற்றுலா பயணிகள் அதிகரித்து வருவதையும் அவர் சுட்டிக்காட்டினார். மேலும், பெங்களூருவில் 370க்கு மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகள் செயல்பட்டு வருவதையும் அவர் குறிப்பிட்டு பேசினார்.

    பெங்களுருவில் அமெரிக்க தூதரகம் உள்பட அனைத்து நாட்டு தூதரகங்களும் அமைக்கப்பட வேண்டும் என குமாரசாமி தனது விருப்பத்தை தெரிவித்தார். #Bengaluru, #USConsulate, #CMKumaraswamy
    கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி மத்திய அரசு நான்கு ஆண்டு நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். #Kumaraswamy #PMModi
    பெங்களூரு:

    பிரதமர் மோடி தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சி 4 ஆண்டுகளை நிறைவு செய்ததை, அக்கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.

    இந்நிலையில், கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி மத்திய அரசு நான்கு ஆண்டு நிறைவு செய்துள்ளதற்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நான்கு ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இதற்காக பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.



    தேர்தல் பிரச்சாரத்தின் போது அவர்கள் பல்வேறு வாக்குறுதிகளை அளித்துள்ளனர். ஆனால் அவர்கள் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில்லை.

    பிரதமர் மோடியை சந்திக்க விரைவில் டெல்லி செல்கிறேன். அவரை சந்திக்க நேரம் கேட்டுள்ளேன். நாளை அல்லது நாளை மறுதினம் பிரதமரை சந்திக்க உள்ளேன். மேலும், பல்வேறு மந்திரிகளையும் பார்க்க உள்ளேன் என தெரிவித்தார்.

    டெல்லியில் பிரதமர் மோடியை கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி நாளை (திங்கட்கிழமை) சந்தித்துப் பேச உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #Kumaraswamy #PMModi
    ×