search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மீன்பிடி திருவிழா"

    • கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர்.
    • ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    சிங்கம்புணரி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே உள்ள குட்டையன்பட்டி கூவனக் கண்மாயில் இன்று மீன்பிடி திருவிழா நடந்தது. மதுரை, திருச்சி, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து அதிகாலை முதலே திரளான கிராம மக்கள் மீன்பிடி திருவிழாவில் பங்கேற்று மீன்களை அள்ளி செல்ல காத்திருந்தனர்.

    கிராம பெரியவர்கள், கண்மாய் ஆயக்கட்டு தாரர்கள் அருகில் உள்ள அய்யனார் கோவிலில் வழிபாடுகளை முடித்து கண்மாய் கரையில் இருந்து வெள்ளை வீசி மீன்பிடித் திருவிழாவை தொடங்கி வைத்தனர்.

    இதையடுத்து காத்திருந்த கிராம மக்கள் படையெடுத்துச் செல்லும் போர் வீரர்களை போல கண்மாய்க்குள் பாய்ந்து மீன்களை பிடிக்கத் தொடங்கினர். கச்சா, பரி, ஊத்தா முதலிய மீன்பிடி உபகரணங்களை கொண்டு மீன்களை பிடித்தனர்.

    அவர்களிடம் ஜிலேபி, கெண்டை, விரால் உள்ளிட்ட நாட்டு வகை மீன்கள் சிக்கியது. மீன்களைப் பிடித்த கிராம மக்கள் மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர்.

    நல்ல மழை பொழிந்து விவசாயம் பெருகவும், மக்களிடம் ஒற்றுமையை மேம்படுத்தவும், ஜாதி-மத பேதமின்றி அனைவரும் இலவசமாக மீன்பிடித்து செல்ல அமைக்கப்பட்டிருந்த இந்த மீன்பிடித் திருவிழா சமூக ஒற்றுமைக்கு குறிப்பிட்ட அம்சமாக விளங்கியது.

    • சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர்
    • கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும்.

    நத்தம்:

    நத்தம் தாலுகா சிறுகுடி ஊராட்சிக்கு உட்பட்ட பூசாரிபட்டி கேசரி கண்மாயில் மழைவளம் பெருகி விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் ஆண்டுதோறும் மழை காலத்தில் கேசரி கண்மாயில் நீர் சேகரிக்கின்றனர். கண்மாயில் நிறைந்த நீரை விவசாய பாசனத்திற்கு பயன்படுத்துகின்றனர். கோடையில் நீர் வற்றும் போது மீன்பிடி திருவிழா நடைபெறுகிறது.

    சிறுகுடி பூசாரிப்பட்டி மட்டுமின்றி வெளிமாவ ட்டத்தினர் மற்றும் சுற்றுவட்டார கிராமத்தினரும் பங்கேற்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்நிலையில் காலை முதலே கண்மாயில் பொதுமக்கள் குவிந்தனர். முதற்கட்டமாக வெளியூர், உள்ளூர் நபர்களுக்கு ரூ. 200 கட்டணம் வசூலிக்கப்பட்டது. இதையடுத்து கண்மாயில் இறங்கி மீன் பிடித்தனர். விரால், ஜிலேபி கெண்டை ஆகிய மீன்களை பிடித்தனர்.

    கண்மாயில் இக்கரையில் இருந்து அக்கறை சென்று திரும்பி வருவதற்குள் மீன்களை பிடிக்க வேண்டும். இதையடுத்து கட்டணம் இன்றி கிராமத்தினர் மீன் பிடிக்க அனுமதிக்கப்படுவர். பொதுமக்கள் தங்களிடம் உள்ள வலை, பரி, கச்சா, கூடை, கொசுவலை, சேலை போன்றவற்றை பயன்படுத்தி மீன்களை பிடிக்கும் முயற்சியில் உற்சாகமாக ஈடுபட்டனர்.

    முடிவில் தங்களுக்கு கிடைத்த மீன்களை பலருடன் பகிர்ந்து கொண்டன்ர். இதனால் பக்கத்து கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் மீன் குழம்பு மனம் கமகமத்தது. இதன் மூலம் கிடைத்த வருவாயை கிராமத்தில் பொது தேவைக்கு பயன்படுத்து கின்றனர்.

    • விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்லவிடுவதே கிராமத்தில் வழக்கமாக உள்ளது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்துள்ளது வெற்றியூர் கிராமம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மருதுடைய அய்யனார் கோவில் அருகில் பெருவஞ்சி கண்மாய் உள்ளது.

    இந்த கண்மாயின் மூலம் 85 ஹெக்டர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்லவிடுவதே இந்த கிராமத்தில் வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன் பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் கொடுங்குளம், புதுவெட்டி, சாத்தரசன்பட்டி, காளக் கண்மாய், கருங்குளம், வாவாரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.

    முன்னதாக கிராம பெரியவர்கள் துண்டை அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    இதில் விரால், கெழுத்தி, கெண்டை, சிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட ஏராளமான மீன்கள் சிக்கின. அதனை கிராம மக்கள் மகிழ்ச்சியாக அள்ளி சென்றனர். ஒரே நேரத்தில் பலர் மீன்களை பிடித்த சம்பவம் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    • மீன்களை பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.
    • மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள திருவாதவூரில் பிரசித்தி பெற்ற திருமறைநாதர் வேதநாயகி கோவில் உள்ளது. மாணிக்கவாசகர் அவதரித்த இங்கு பெரிய கண்மாய் உள்ளது. இந்த கண்மாய் மூலம் திருவாதவூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

    வருடந்தோறும் விவசாயம் முடிந்தவுடன் பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி விவசாய பணிகள் முடிந்த நிலையில் பெரியகண்மாயில் மீன்பிடி திருவிழா இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து மதுரை மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பெண்கள், சிறுவர்-சிறுமியர் என ஆயிரக்கணக்கானோர் நேற்று இரவு முதலே கண்மாய் கரையில் திரண்டனர். இன்று காலை ஊர் பெரியவர்கள் கொடியசைத்ததுடன் பொதுமக்கள் கண்மாயில் இறங்கி தாங்கள் கொண்டு வந்திருந்த வலை உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்கள் மூலம் போட்டி போட்டு கொண்டு மீன்களை பிடித்தனர். இதில் கட்லா, உளுவை, கெளுத்தி உள்ளிட்ட பல்வேறு ரக மீன்கள் கிலோ கணக்கில் கிடைத்தன. சிலருக்கு குறைந்த அளவு மீன்கள் கிடைத்தன.

    மீன்களை பிடித்த பொதுமக்கள் அதனை ஆர்வத்துடன் தங்களது வீடுகளுக்கு எடுத்து சென்றனர்.

    மீன்பிடி திருவிழா நடத்துவதால் ஒவ்வொரு வருடமும் மழை பெய்து விவசாயம் செழிக்கும் என்பது நம்பிக்கை.

    • திருப்பத்தூர் அருகே கண்மாய் பராமரிப்பு நிதிக்காக நடந்த மீன்பிடி திருவிழா நடந்தது.
    • கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.

    நெற்குப்பை

    சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கீழசெவல்பட்டியில் புது கண்மாய் பராமரிப்பு பணிக்காக நிதி திரட்டுவ தற்கு ஒவ்வொரு ஆண்டும் பாரம்பரிய முறைப்படி மீன்பிடி திருவிழா நடத்தப் படுவது வழக்கம். இந்த ஆண்டும் விவசாய தேவைக்கு கண்மாய் நீரை பயன்படுத்தியதால் வற்றியது.

    இதனைத்தொடர்ந்து கிராமமக்கள் ஒற்றுமையாக மீன் பிடிக்க முடிவு செய்து சுற்றுப்புற கிராமங்களுக்கும் அறிவிப்பு செய்தனர். கண்மாய் மடை பராமரிப்பு மற்றும் இதர பராமரிப்புக்கு நிதி திரட்ட முடிவு செய்து ஊத்தா கூடை மூலம் முதலில் மீன் பிடிக்கவும், தொடர்ந்து கிராமமக்கள் மீன்பிடித்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டு மீன்பிடி திருவிழா கோலாகலமாக நடந்தது.

    கீழ செவல்பட்டி மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் இருந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் சேர்ந்த சிறுவர்கள் முதல் பெரிய வர்கள், பெண்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் போட்டி போட்டுக்கொண்டு ஊத்தா கூடை, கச்சா, அரி, மீன்பிடி வலை உள்ளிட்ட உபகர ணங்களை கொண்டு ஜாதி, மத வேறுபாடின்றி ஒற்று மையாக கண்மாயில் மீன்களை பிடித்தனர்.

    இதில் கட்லா, ரோகு, ஜிலேபி, கெளுத்தி, கெண்டை மீன்கள் கிடைத் தன. கிடைத்த மீன்களை சமையல் செய்வதற்காக கிராம மக்கள் மகிழ்ச்சியோடு கொண்டு சென்றனர்.

    • முதுகுளத்தூர் அருகே 2 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடி திருவிழா நடந்தது.
    • ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.

    முதுகுளத்தூர்

    ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள கீழத்தூவல் கிராமத்தில் உள்ள ஊரணியில் மீன்பிடி திருவிழா நடந்தது.

    2 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்த இந்த மீன்பிடி திருவிழாவில் அந்த கிராமத்தைச் சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை பிடித்தனர்.

    மீன்வலைகள், கச்சாவலைகள் கொசுவலைகள் ஆகியவற்றை கொண்டு கெண்டை, அயிரை, கெளுத்தி, விரால், குரவை மீன்களை பிடித்தனர்.

    ஏராளமான மீன்கள் பிடிபட்டதால் அவற்றை வாளிகளில் அள்ளிச் சென்றனர். இதன் காரணமாக கீழத்தூவல் கிராமத்தில் அனைவரது வீடுகளிலும் மீன் குழம்பு வாசனை கம, கமத்தது.

    • கள்ளக்குறிச்சி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 5000 கிலோ மீன்களை கிராம மக்கள் அள்ளி சென்றனர்.
    • மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி அருகே சூளாங்குறிச்சி கிராமத்தில் மணிமுக்தா ஆற்றின் குறுக்கே மணிமுக்தா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் மீன் வளர்ப்பதற்காக பொதுப்பணித்துறையினர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனி நபரிடம் குத்தகைக்கு விட்டனர். அதன்படி குத்தகை காலம் முடிந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிமுக்தா அணையில் மீன் பிடி திருவிழா நடைபெற உள்ளதாக தொலைபேசி மற்றும் சமூக வலைதளம் மூலம் தகவல் பரவியது. அதன்படி நேற்று சூளாங்குறிச்சி, வாணியந்தல், ரங்கநாதபுரம், சூ.பாலப்பட்டு, அகரக்கோட்டாலம், அணைகரை கோட்டாலம் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2000 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மணிமுத்தா அணைப் பகுதியில் திரண்டனர்.

    தகவல் அறிந்த தியாகதுருகம் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது பொதுமக்கள் அனைவரும் அணைப்பகுதியில் இறங்கி வலைகளை வீசி மீன்களை பிடித்துக் கொண்டு இருந்தனர். போலீசார் பொதுமக்களிடம் அணையின் அருகே ஆழமான பகுதியில் மீன் பிடிக்க வேண்டாம் என கூறினர். ஆனால் பொதுமக்கள் மீன்பிடிக்கும் ஆர்வத்தில் ஆழமான பகுதியில் இறங்கி மீன்களை பிடித்தனர்.  தொடர்ந்து அங்கு வந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்கும் விதமாக அணையின் கதவைத் திறந்து தண்ணீரை வெளியேற்றினர். இதனால் அணையில் தண்ணீர் குறைந்தது. தொடர்ந்து பொதுமக்கள் விரால், ஜிலேபி, கெண்டை உள்ளிட்ட பல்வேறு வகையான சுமார் 5000 கிலோ மீன்களை அள்ளி சென்றனர். மணிமுக்தா அணையில் பொதுமக்கள் சுமார் 2000 பேர் கூடி சுமார் 5000 கிலோ மீன்களை பிடித்துச் சென்ற சம்பவம் இப்பகுதியில் திருவிழா போல காட்சியளித்தது.

    ×