search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பாரம்பரிய மீன்பிடி திருவிழா காளையார்கோவில் அருகே மீன்களை அள்ளி சென்ற மக்கள்
    X

    பாரம்பரிய மீன்பிடி திருவிழா காளையார்கோவில் அருகே மீன்களை அள்ளி சென்ற மக்கள்

    • விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்லவிடுவதே கிராமத்தில் வழக்கமாக உள்ளது.
    • ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலை அடுத்துள்ளது வெற்றியூர் கிராமம். இங்குள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன், மருதுடைய அய்யனார் கோவில் அருகில் பெருவஞ்சி கண்மாய் உள்ளது.

    இந்த கண்மாயின் மூலம் 85 ஹெக்டர் விவசாய நிலம் பாசன வசதி பெறுகிறது. இந்த ஆண்டு விவசாய பணிகள் முடிவடைந்த நிலையில் கண்மாயில் உள்ள மீன்களை ஏலத்திற்கு விடாமல் அதனை கிராம மக்களே பிடித்து செல்லவிடுவதே இந்த கிராமத்தில் வழக்கமாக உள்ளது.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான மீன் பிடி திருவிழா இன்று காலை நடைபெற்றது. இதில் கொடுங்குளம், புதுவெட்டி, சாத்தரசன்பட்டி, காளக் கண்மாய், கருங்குளம், வாவாரி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது குடும்பத்தோடு கலந்து கொண்டு கச்சை, ஊத்தா, தூரி, வலை உள்ளிட்டவைகளை கொண்டு மீன்களை ஆர்வமுடன் பிடித்தனர்.

    முன்னதாக கிராம பெரியவர்கள் துண்டை அசைத்து மீன்பிடி திருவிழாவை தொடங்கி வைத்தனர். இதைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான கிராம மக்கள் ஒரே நேரத்தில் கண்மாயில் இறங்கி மீன்களை பிடித்தனர்.

    இதில் விரால், கெழுத்தி, கெண்டை, சிலேபி, ரோகு, கட்லா உள்ளிட்ட ஏராளமான மீன்கள் சிக்கின. அதனை கிராம மக்கள் மகிழ்ச்சியாக அள்ளி சென்றனர். ஒரே நேரத்தில் பலர் மீன்களை பிடித்த சம்பவம் அனைவரையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது.

    Next Story
    ×