search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்நிலையம்"

    • சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.
    • காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது :-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின்நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) நிர்மலா நகர் மின் வழித்தடத்தில் உள்ள மின்பாதையில் நெடுஞ்சாலைத்துறையால் சாலை விரிவாக்க பணிக்காக மின்கம்பங்கள் மாற்றும் பணி நடைபெற உள்ளது.

    எனவே வி.பி.கார்டன், எலிசாநகர், நட்சத்திரா நகர், மருதம் நகர், நெய்தல் நகர் ஆகிய இடங்களில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கத்தரிப்புலம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்.
    • கூட்டத்தில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த கத்தரிப்புலம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு ஊராட்சி தலைவர் வீரமணி தலைமை தாங்கினார், துணை தலைவர் சுதா, மாவட்ட கவுன்சிலர் சோழன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    முன்னதாக ஊராட்சி செயலாளர் வீரபாண்டியன் வரவேற்றார்.

    பற்றாளர் தேவகுமார் கூட்டத்தை நடத்தினார்.

    கூட்டத்தில் கத்தரிப்புலம் ஊராட்சியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானம் நிறைவேற்ற ப்பட்டது.

    இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர்.

    • ரூ.190 கோடி மதிப்பீட்டில் 110 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ளது.
    • 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் வட்டம் குமாரபாளையம் ஊராட்சி வடுகபட்டியில்ரூ.190 கோடி மதிப்பீட்டில் 110 ஏக்கரில் நிறுவப்பட்டுள்ள தனியார் துறை துணை மின் நிலையம் மற்றும் 25 மெகாவாட் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி திட்டத்தை தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    இந்நிகழ்ச்சியில் கோவை மண்டல மின்சார வாரிய முதன்மைபொறியாளர் வினோதன், திருப்பூர் மாநகராட்சி 4-ம் மண்டலத்தலைவர்இல.பத்மநாபன், இந்திய காற்றாலை மின் உற்பத்தி உரிமையாளர்கள்சங்க தலைவர் கஸ்தூரிரங்கன் உள்ளிட்ட ஏராளமான தொழில்முனைவோர் பங்கேற்றனர். 

    • துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
    • நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை நகர உதவி செயற்பொறியாளர் கருப்பையா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சை மணிமண்டபம் துணை மின் நிலையத்தில் நாளை (செவ்வாய்க்கிழமை ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    எனவே யாகப்பா நகர், அருளானந்த நகர், அருளானந்த அம்மாள் நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணா நகர், காமராஜர் நகர், பாத்திமா நகர் , மேரீஸ் கார்னர், திருச்சி ரோடு, ராமகிருஷ்ணபுரம், மங்களபுரம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ.நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர் , பாண்டியன் நகர், எஸ்.இ. அலுவலகம், கலெக்டர் பங்களா சாலை, டேனியல் தாமஸ் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், என்.எஸ்.போஸ் நகர், தென்றல் நகர், துளசியாபுரம், தேவன் நகர் , பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி ஆகிய இடங்களில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×