search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மார்த்தாண்டத்தில்"

    • மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.
    • 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை நடக்கிறது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் இணைந்து கலைஞர் நூற்றாண்டு விழாவையொட்டி 2-வது சிறப்பு தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமை 4-ந்தேதி காலை 8.30 மணி முதல் மதியம் 2 மணி வரை மார்த்தாண்டத்தில் உள்ள நேசமணி நினைவு கிறிஸ்தவ கல்லூரியில் நடத்துகிறது.

    முகாமில் 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளன. இந்த வேலைவாய்ப்பு முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, செவிலியர் படித்தவர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பல்லன்விளை பறையன்விளையை சேர்ந்தவர் சோபனம் (வயது 61). கொத்தனாரான இவர் கடந்த சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். பின்பு வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்காமல் இருந்துள்ளது.

    இதனால் அவரது மனைவி ராஜலட்சுமி, அவரது அறையில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மனைவிக்கு இ-மெயில் மூலம் மெசெஜ் அனுப்பி விட்டு பரிதாபம்
    • மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    பத்துகாணி நிரப்பு ரோடு லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் ஹரிஹரன் (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஆடிட்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நளினி (45). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    ஹரிஹரன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள் ளார். இந்நிலையில் அவரது வீட்டை அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்துள் ளார். இதில் இவர்க ளுக்குகிடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை காலி செய்யும்படி ஹரிஹரன் பலமுறை கூறியுள்ளார்.

    ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை, இதனால் அவர் பத்துகாணி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் போலீசார், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன ஹரிஹரன் என்ன செய்வது என்று தெரியாமல், மன உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி நளினிக்கு, தான் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் இருப்பதாகவும், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்யப்போவதாகவும் இ-மெயில் மூலம் மெசெஜ் அனுப்பி உள்ளார். இதனால் பயந்து போன நளினி தனது உறவினர்களை, லாட்ஜிக்கு அனுப்பி பார்க்கும்படி கூறியுள்ளார். அப்போது ஹரி ஹரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து அவரது மனைவி நளினி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆடிட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் துணிகரம்
    • தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    கன்னியாகுமரி மாவட்டம் காப்புக்காடு காட்டுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ஜெனிஸ். இவரது மனைவி மெர்லின் டயானா (வயது 36). இவர் தேனி மாவட்டம் பெரிய குளத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியை யாக பணிபுரிந்து வருகிறார்.

    தற்போது கல்லூரி விடு முறை என்பதால், மெர்லின் டயானா ஊருக்கு வந்தி ருந்தார். நேற்று இரவு அவர், கணவருடன் மோட் டார் சைக்கிளில் மார்த் தாண்டத்திற்கு பொருட்கள் வாங்க சென்றார்.

    பின்னர் அங்கிருந்து கணவன்-மனைவி இருவரும் பொருட்கள் வாங்கி விட்டு வீட்டுக்கு புறப் பட்டனர். மார்த்தாண் டம் அரசு மருத்துவமனை அருகே தேசிய நெடுஞ்சாலை யில் சென்ற போது பின்னால் ஒரு மோட்டார் சைக்கிள் வந்தது. அதில் வந்தவர்கள், திடீரென மெர்லின் டயானா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சங்கிலியை பிடித்துக் கொண்டு கூச்ச லிட்டார். ஆனால் அதற்குள் மர்ம நபர்கள் நகையை பறித்து விட்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்றனர்.

    இதற்கிடையில் மெர்லின் டயானாவின் கூச்சல் கேட்டு, அக்கம் பக்கத்தினர் மற்றும் அந்த பகுதி வர்த்தக நிறு வனத்தினர் திரண்டனர். அவர்கள், மர்மமனிதர்கள் சென்ற பாதையில் வாகனங்களில் சென்று பார்த்தனர்.

    ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடிய வில்லை. இதுகுறித்து மார்த் தாண்டம் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது 16 பவுன் நகை பறிபோனதாக போலீ சாரிடம் மெர்லின் டயானா புகார் தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வரு கின்றனர். எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் மார்த்தாண்டம் நகரில், கணவருடன் மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணிடம் நகை பறிப்பு சம்பவம் நடந்திருப்பது அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×