search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாட்ஜில்"

    • மனைவிக்கு இ-மெயில் மூலம் மெசெஜ் அனுப்பி விட்டு பரிதாபம்
    • மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கன்னியாகுமரி:

    பத்துகாணி நிரப்பு ரோடு லட்சுமி இல்லத்தை சேர்ந்தவர் ஆடிட்டர் ஹரிஹரன் (வயது 50). இவர் அந்த பகுதியில் உள்ள நிறுவனம் ஒன்றில் ஆடிட்டர் ஆக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி நளினி (45). இவர் மதுரையில் உள்ள ஒரு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    ஹரிஹரன் கடந்த சில வருடங்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்துள் ளார். இந்நிலையில் அவரது வீட்டை அப்பகுதியை சேர்ந்த ஒருவருக்கு வாடகைக்கு கொடுத்துள் ளார். இதில் இவர்க ளுக்குகிடையே பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை காலி செய்யும்படி ஹரிஹரன் பலமுறை கூறியுள்ளார்.

    ஆனால் அவர் வீட்டை காலி செய்யவில்லை, இதனால் அவர் பத்துகாணி போலீஸ் நிலையத்திலும், மாவட்ட கலெக்டரிடமும் புகார் மனு அளித்துள்ளார். ஆனால் போலீசார், மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனம் உடைந்து போன ஹரிஹரன் என்ன செய்வது என்று தெரியாமல், மன உடைந்த நிலையில் காணப்பட்டார்.

    இந்நிலையில் அவரது மனைவி நளினிக்கு, தான் மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு பிரபல லாட்ஜில் இருப்பதாகவும், அங்கு தூக்கிட்டு தற்கொலை செய்யப்போவதாகவும் இ-மெயில் மூலம் மெசெஜ் அனுப்பி உள்ளார். இதனால் பயந்து போன நளினி தனது உறவினர்களை, லாட்ஜிக்கு அனுப்பி பார்க்கும்படி கூறியுள்ளார். அப்போது ஹரி ஹரன் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதுகுறித்து அவரது மனைவி நளினி மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். ஆடிட்டர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

    • ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
    • இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஈரோடு:

    தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சுந்தர் ராஜ் (46). துணி வியாபாரி. கடந்த ஒரு வாரத்துக்கு முன் ஈரோடு வந்து நேரு வீதியில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினார்.

    நேற்று காலை நீண்ட நேரமாகியும் அவரது அறை திறக்கப்ப டவில்லை. அறையை தூய்மைபடுத்தும் தொழிலா ளர்கள் நீண்ட நேரம் கதவை தட்டி பார்த்தனர்.

    பின்னர் ஜன்னல் வழியே பார்த்த போது சுந்தர்ராஜ் தூக்கு போட்டு தொங்கிக் கொண்டிரு ப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக லாட்ஜ் நிர்வாகத்தினர் இது குறித்து ஈரோடு டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    டவுன் போலீசார் அங்கு சென்று அவரது உடலை மீட்டு ஈரோடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோ தனைக்காக அனுப்பி வைத்தனர்.

    சுந்தர்ராஜன் எந்த காரணத்துக்காக தற்கொலை செய்து கொ ண்டார் என தெரியவில்லை. இது குறித்து டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×