search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொத்தனார்"

    • சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார்.
    • வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குழித்துறை, நவ.19-

    மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியை சேர்ந்தவர் விஜயன் (வயது 50), கட்டிட தொழிலாளி. இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்கள் வெளியூரில் வசித்து வருகின்றனர். விஜயன் கொடுங்குளத்தில் உள்ள தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். சம்பவத்தன்று அதிக அளவில் மது குடித்த நிலையில் தூங்க சென்றார். பின்னர் காலையில் அவர் எழும்பவில்லை.

    இதையடுத்து அக்கம் பக்கத்தினர் அருகில் சென்று பார்த்தபோது விஜயன் இறந்தது தெரியவந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார்.
    • புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    மதுக்கூர்:

    மதுக்கூர் அருகே விக்ரமம் அக்ரஹாரத்தைச் சேர்ந்தவர் சுப்ரமணியன் (வயது 51) கொத்தனார். சம்பவத்தன்று சுப்ரமணியன் மது அருந்தி விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். பின்னர் கழிவறைக்கு சென்றபோது தவறி வழுக்கி விழுந்தார். அப்போது அவருக்கு வலிப்பு ஏற்பட்டது. இதையடுத்து சுப்ரமணியன் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் மதுக்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
    • மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

    குழித்துறை:

    மார்த்தாண்டம் அருகே உள்ள பல்லன்விளை பறையன்விளையை சேர்ந்தவர் சோபனம் (வயது 61). கொத்தனாரான இவர் கடந்த சில நாட்களாக ஏதோ மன வருத்தத்தில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் சாப்பிட்டுவிட்டு தூங்க சென்றார். பின்பு வெகு நேரமாகியும் அறைக்கதவு திறக்காமல் இருந்துள்ளது.

    இதனால் அவரது மனைவி ராஜலட்சுமி, அவரது அறையில் சென்று பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதுகுறித்து மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இரணியல்-ஆளூர் ரெயில்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ராஜீவ் பிணமாக கிடந்தார்.
    • தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இரணியல் :

    வேர்கிளம்பி பகுதியைச் சேர்ந்தவர் ராஜீவ் (வயது 54). இவர் கேரளாவில் கொத்தனார் வேலை செய்து வந்தார். தற்பொழுது கேரளாவில் இருந்து ஊருக்கு வந்த ராஜீவ் மீண்டும் கேரளாவிற்கு செல்வதற்கு தயாரானார்.

    இதையடுத்து நேற்று மாலை வீட்டில் இருந்து வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றார். இந்த நிலையில் இன்று காலை இரணியல்-ஆளூர் ெரயி ல்வே தண்டவாளத்தில் ரெயிலில் அடிபட்டு ராஜீவ் பிணமாக கிடந்தார்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இட த்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள். பிணமாக கிடந்த ராஜீவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி ப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    ராஜீவ் தற்கொலை செய்து கொண்டது குறித்து அவரது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதைக் கேட்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ராஜீவ் தற்கொலைக்கான காரணம் குறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகி றார்கள்.

    • பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    • மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் செட்டிநாயக்கன்பட்டி பாறைக்குளத்தை சேர்ந்தவர் மதிவாணன்(65). கொத்தனார் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லை. இதனால் வேலைபார்க்கும் ஊதியத்தின் பெரும்பகுதியை குடித்து செலவழித்து வந்துள்ளார்.

    அதிகளவு மதுபோதையில் பாறைக்குளம் பகுதியில் கிடந்த மதிவாணன் இறந்துவிட்டார். அவரது உடலை தெருநாய்கள் கடித்து குதறியதில் சிதைந்து காணப்பட்டது. இதை பார்த்த அப்பகுதி மக்கள் தாடிக்கொம்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து அவரது உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் மதிவாணன் எவ்வாறு இறந்தார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரல்வாய்மொழி 4 வழி சாலையையொட்டியுள்ள மரத்தில் பிணமாக தொங்கினார்.
    • தற்கொலை செய்து கொண்டவருக்கு மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    கன்னியாகுமரி:

    ஆரல்வாய்மொழி 4 வழி சாலையையொட்டியுள்ள மரத்தில் ஒருவர் பிணமாக தொங்கினார்.

    இன்று காலை வாக்கிங் சென்ற பொதுமக்கள் இதை பார்த்து ஆரல்வாய்மொழி போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து ஆரல்வாய்மொழி போலீ சார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    அப்போது தூக்கில் பிணமாக தொங்கியவர் ஆரல்வாய்மொழி குருசடி பகுதியைச் சேர்ந்த பவுல்ராஜ் (வயது 50) கொத்தனார் என்பது தெரிய வந்தது. போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    தற்கொலை செய்து கொண்ட பவுல்ராஜ் எதற்கு தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து விசாரணை நடத் தப்பட்டு வருகிறது. தற்கொலை செய்து கொண்ட பவுல்ராஜிக்கு ஜெயமதி பாய் என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

    • மொபட் மீது அரசு பஸ் மோதி கொத்தனார் தலை நசுங்கி பலியானார்.
    • அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் அருகே உள்ள திருத்தங்கலை சேர்ந்தவர் மாரிமுத்து மகன் முருகன்(வயது27). கொத்தனாரான இவர் சம்பவத்தன்று ராஜ பாளையம் பி.டி.ஆர். நகர் பகுதியில் இவரது நண்பர் விக்னேசின் திரும ணத்திற்காக மொபட்டில் சென்றுள்ளார்.

    திருமணம் முடித்து இவரும், இவரது மற்றொரு நண்பர் முனீஸ்வரன்(26) என்பவரும் ராஜபாளையம் பழைய பஸ் நிலையம் நோக்கி வந்துள்ளனர். அப்போது எதிர் திசையில் ஒரு அரசு பஸ் வந்தது. அந்த பஸ்சை இடையன்குளத்தை சேர்ந்த முத்து என்பவர் ஓட்டி வந்தார்.சத்திரப்பட்டி சாலையில் உள்ள மில் கிருஷ்ணாபுரம் விலக்கு அருகே மொபட் வந்தபோது, அரசு பஸ் மோதியது. இதில் முருகன் தலை மீது பஸ்சின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த விபத்தில் முருகனின் நண்பரான முனீஸ்வரன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவர் இந்த விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரமோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
    • போலீசார் சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை

    கன்னியகுமரி:

    ராஜாக்கமங்கலம் அருகே எறும்பு காடு புல்லுவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜதுரை (வயது 50). இவரது மனைவி முருகம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    ராஜதுரை கொத்தனார் வேலை செய்து வருகிறார். வெளியூரில் தங்கிய வேலை செய்து வந்த ராஜதுரை அவ்வப்போது வீட்டிற்கு வருவது வழக்கம்.

    கடந்த சில நாட்களாக ராஜதுரை புல்லு விளை உள்ள வீட்டில் வசித்து வந்தார்.நேற்று வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜதுரை வீடு திரும்பவில்லை.

    இதையடுத்த அவரது மனைவி மற்றும் மகன்கள் அவரை தேடினார்கள்.எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் மேலகிருஷ்ணன்புதூர் சந்திப்பு பகுதியில் இன்று காலை ரோட்டோரத்தில் ராஜதுரை பிணமாக கிடந்தார்.அவரது உடல் பகுதியில் ரத்த காயங்கள் இருந்தது.அவரை மர்மநபர்கள் கல்லால் தாக்கி கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா சுசீந்திரம் இன்ஸ்பெக்டர் சாய் லட்சுமி ஆகியோர் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த ராஜதுரை உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.ராஜதுரை கொலை செய்யப்பட்டு கிடந்த இடத்தின் அருகே மது பாட்டில்கள் உடைந்து கிடந்தது. மேலும் செங்கற்க ளும் சாலையில் சிதறி கிடந்தன.

    எனவே மர்மநபர்கள் ராஜதுரையை செங்க ற்களால் தாக்கி கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் கருதுகி றார்கள் .இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. கொலை செய்யப்பட்ட ராஜதுரை மீது ஏற்கனவே சில திருட்டு வழக்குகள் உள்ளது.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவரது சகோதரர் கண்ணன் வீட்டில் இருந்த ரூ. 15,000 மதிப்பிலான செல்போனை ராஜதுரை எடுத்துச் சென்றதாக அவரது சகோதரர் கண்ணன் ராஜாக்கமங்கலம் போலீசில் புகார் செய்தார்.

    இதையடுத்து போலீசார் ராஜதுரை பிடித்து சென்றனர். பின்னர் அவரது மனைவி முருகம்மாள் போலீஸ் நிலையத்திற்கு சென்று செல்போனை விரைவில் வாங்கி தருவதாக கூறியதன் அடிப்படையில் ராஜதுரையை போலீசார் விடுவித்தனர்.

    இந்த நிலையில் ராஜ துரை கொலை செய்யப்ப ட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .குடிபோதை தகராறு ஏற்பட்ட தகராறில் அவர் கொலை செய்ய ப்ப ட்டாரா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணையை தொடங்கி உள்ளார்கள்.

    • உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைப்பு
    • நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை

    நாகர்கோவில்:

    மார்த்தாண்டம் அருகே சிதறால் திக்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சஜின் (வயது 29) கொத்தனார். இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.

    கணவன்-மனைவிக்கு ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சஜின் அடிக்கடி குடித்துவிட்டு வந்துள்ளார்‌. நேற்று சஜின் வீட்டிலிருந்து வெளியே செல்வதாக கூறிவிட்டு சென்றார்.

    இந்த நிலையில் குழித்துறை தாமிரபரணி ஆற்றுப் பாலத்தின் அருகே உள்ள ரெயில்வே தண்டவாளத்தில் சஜின் ரெயிலில் அடிபட்டு பிணமாக கிடந்தார். இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர்கள் குமார்ராஜ், விஜயகுமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

    பிணமாக கிடந்த சஜினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து நாகர்கோவில் ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    • சிதம்பரத்தை சேர்ந்த கொத்தனார் மாயமானார்.
    • மனைவி இன்பநிலா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

    கடலூர்:

    சிதம்பரம் ஜகனானந்தா தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் கடந்த 9-ந் தேதி கொத்தனார் வேலைக்காக வெளியூர் சென்றார். அதன் பின்னர் அங்கு மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி இன்பநிலா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொத்தனார் வேலைக்கு சென்ற சங்கர் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 2-வது மனைவிக்கு குழந்தை இல்லாததால் கொத்தனார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்துகொண்டார்.
    • திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார்.

    கடலூர்:

    கடலூர் அருகே அரிசிபெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன் (வயது 37). கொத்தனார். இவருக்கு கன்னிகா என்ற பெண்ணுடன் திருமணமாகி 10 வருடம் ஆன நிலையில் விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் சாமுண்டீஸ்வரி என்ற பெண்ணை கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு 2-வது திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் சாமுண்டீஸ்வரிக்கு குழந்தை இல்லாத காரணத்தினால் தியாகராஜன் மன வருத்தத்தில் இருந்து வந்தார். சம்பவத்தன்று தியாகராஜன் மதுவில் விஷம் கலந்து குடித்தார் . இதில் மயக்கம் அடைந்த தியாகராஜனை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி தியாகராஜன் உயிர் இழந்தார். இது குறித்து திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பகண்டை கூட்டுரோடு அருகே தவறி விழுந்து கொத்தனார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    கள்ளகுறிச்சி: 

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சீர்ப–னந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 34). கொத்தனாரார். இவர் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடன் வேலை செய்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    ×