search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The mason"

    • திருநாவலூர் அருகே பாலத்தில் இருந்து கொத்தனார் தவறி விழுந்தார்.
    • தடுப்புகட்டையில் அமர்ந்தி ருந்தார். திடீரென அவர் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதில் புகழேந்தி சம்பவ இடத்தில் பலியானார்.

    கடலூர்:

    திருநாவலூர் அருகே உள்ள சோமாசி பாளை யத்தை சேர்ந்தவர் புகழேந்தி. கொத்தனார். இவர் தேவிநந்தல் பஸ்நிலையம் அருகே பாலத்தில் உள்ள தடுப்புகட்டையில் அமர்ந்தி ருந்தார். திடீரென அவர் தவறி கீழே விழுந்ததில் தலையில் அடிபட்டது. இதில் புகழேந்தி சம்பவ இடத்தில் பலியானார். இதுகுறித்து திருநாவலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் விசாரணை நடத்தி வருகிறார்.

    • பகண்டை கூட்டுரோடு அருகே தவறி விழுந்து கொத்தனார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
    • வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார்.

    கள்ளகுறிச்சி: 

    கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் வட்டம் சீர்ப–னந்தல் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 34). கொத்தனாரார். இவர் பகண்டை கூட்டு ரோட்டில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்தபோது மாடிப்படியில் இருந்து எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை உடன் வேலை செய்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

    ×