

கடலூர்:
சிதம்பரம் ஜகனானந்தா தெருவை சேர்ந்தவர் சங்கர் (வயது 45). இவர் கடந்த 9-ந் தேதி கொத்தனார் வேலைக்காக வெளியூர் சென்றார். அதன் பின்னர் அங்கு மாயமானார். இதுகுறித்து அவரது மனைவி இன்பநிலா சிதம்பரம் டவுன் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொத்தனார் வேலைக்கு சென்ற சங்கர் என்ன ஆனார் எங்கு சென்றார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.