search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணர்கள்"

    • தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள்.

    பூந்தமல்லி:

    படியில் பயணம் நொடியில் மரணம் என்று அரசு பஸ்களில் எழுதி போட்டிருந்தாலும் படியில் பயணம் செய்வதே சாகச பயணம் என்பது போய் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கிய படி பயணிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

    அதிலும் படிக்கட்டுகளில் ஒருவர் மீது ஒருவர் பிடித்து கொண்டு சாகசம் செய்வது போல் பயணிப்பதை பார்ப்பவர்களே பதற்றப்படுகிறார்கள். கீழே விழுந்தால் என்ன நிலைமை என்று ஒவ்வொருவரும் ஆதங்கப்படுகிறார்கள்.

    ஆனால் மாணவர்களோ எதையும் காதில் வாங்குவதில்லை. தங்கள் சாகச பயணத்தை தினமும் படிக்கட்டுகளில் நிகழ்த்தி வருகிறார்கள்.

    குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்தில் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் (16), பேருந்து குன்றத்தூர் தேரடி அருகே வந்த போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது, பேருந்தின் பின் சக்கரம் அவனது இரண்டு கால்கள் மீதும் ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த மாணவனை பொதுமக்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவனின் இரண்டு கால்களும் பாதத்திற்கு கீழ் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதால், அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான். எவ்வளவு அறிவுரை கூறினாலும், அதனை காதில் வாங்காததன் விளைவாக தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    நேற்று வரை துள்ளித் திரிந்த மாணவன் இன்று தனது இரு கால்களையும் பறிகொடுத்து முடமாகி இருக்கிறான். அவனது எதிர்காலமே இருண்ட காலமாக மாறியிருக்கிறது. இது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து அல்ல. தானாக விலை கொடுத்து வாங்கிய விபத்து.

    இந்த மாணவரை போல் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். இந்த சம்பவத்தை பார்த்த பிறகாவது அவர்கள் திருந்த வேண்டும்.

    • பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்கள் அறிமுக விழா நடந்தது.
    • பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார்.

    சிவகாசி

    சிவகாசி பி.எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியின் முதலாமாண்டு மாணவர்களுக்கு, மாணவர்கள் அறிமுக விழா கல்லூரி கலையரங்கில் நடந்தது. பி.எஸ்.ஆர். கல்விக்குழும தாளாளர் சோலைசாமி தலைமை தாங்கினார். கல்லூரியின் இயக்குநர் விக்னேஷ்வரி அருண்குமார் முன்னிலை வகித்தார்.

    முதல்வர் செந்தில்குமார் மற்றும் டீன் மாரிச்சாமி கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். சிறப்பு விருந்தினராக திரைப்பட நடிகர் டாக்டர்.தாமு கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

    அவர் பொறியியல் கல்லூரியின் முக்கியத்துவம், அதன் பயன்பாடுகள் குறித்து பேசினார். கல்வி கற்பதில், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கு மற்றும் அவர்களின் நற்செயல்களை பற்றி மாணவர்களுக்கு எடுத்துரைத்தார்.

    தற்போதைய மாணவர்கள் மற்றும் இளைஞர்கள், வாழ்க்கையில் சமூக வலைதளங்களின் தாக்கம் மற்றும் அதனால் நேரம், காலம் எவ்வாறு வீணடிக்கப்பபடுகிறது என்பது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிறு சிறு கதைகள் மற்றும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கமளித்தார்.

    மாணவர்கள் தங்கள் உடலையும் ஆரோக்கியமாக பேணிக்காப்பதன் மூலமாக, மனதையும், சிந்தனையையும் நல்வழியில் செலுத்தி, சமுதாயத்தில் உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் எனக்கூறினார். உலகை வல்லரசாக்கும் திறமை, இன்றைய இளைஞர்களாக மாணவர்கள் கையில் தான் உள்ளது என கூறினார்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம், முதலாமாண்டு துறைத்தலைவர் பேராசிரியர் ஸ்ரீராம் மற்றும் பேராசிரியர்கள் செய்திருந்தனர். இயற்பியல் துறை பேராசிரியர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    ×