search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பஸ் பயணம்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    திருப்பதி:

    தெலங்கானாவில் அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவச பஸ் பயண சேவை வழங்கப்படுகிறது.

    இந்த திட்டம் பெண்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் ஆட்டோ டிரைவர்கள் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் மஹ்பூப்நகரை சேர்ந்த தேவா (வயது 45) குடிபோதையில் தனது ஆட்டோவுடன் முதல் மந்திரி முகாம் அலுவலகமான ஐதராபாத் பிரஜா பவனுக்கு வந்தார்.


    பின்னர் பெண்களுக்கான இலவச பஸ் பயணத்தால் எங்கள் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

    இதனைத் தொடர்ந்து ஆட்டோவுக்கு திடீரென தீ வைத்தார். இதனை பார்த்த பிரஜா பவன் ஊழியர்கள் மற்றும் போலீசார், ஆட்டோவில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.

    இருப்பினும் தீ பரவியதில் ஆட்டோ முழுவதும் எரிந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக போலீசார் ஆட்டோ டிரைவைர் தேவாவை கைது செய்தனர்.

    • தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.
    • தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள்.

    பூந்தமல்லி:

    படியில் பயணம் நொடியில் மரணம் என்று அரசு பஸ்களில் எழுதி போட்டிருந்தாலும் படியில் பயணம் செய்வதே சாகச பயணம் என்பது போய் சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பஸ்களில் தொங்கிய படி பயணிப்பதையே வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.

    அதிலும் படிக்கட்டுகளில் ஒருவர் மீது ஒருவர் பிடித்து கொண்டு சாகசம் செய்வது போல் பயணிப்பதை பார்ப்பவர்களே பதற்றப்படுகிறார்கள். கீழே விழுந்தால் என்ன நிலைமை என்று ஒவ்வொருவரும் ஆதங்கப்படுகிறார்கள்.

    ஆனால் மாணவர்களோ எதையும் காதில் வாங்குவதில்லை. தங்கள் சாகச பயணத்தை தினமும் படிக்கட்டுகளில் நிகழ்த்தி வருகிறார்கள்.

    குன்றத்தூர் அடுத்த கொல்லச்சேரி நான்கு ரோடு சந்திப்பு அருகே சேக்கிழார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த சில மாணவர்கள் காலை மற்றும் மாலை என இரண்டு வேளைகளும் அவ்வழியாக செல்லும் அரசுப் பேருந்தில் ஆபத்தான நிலையில் படியில் தொங்கியபடி பயணம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டிருந்தனர்.

    இந்நிலையில், நேற்று மாலை பள்ளி முடிந்ததும் அந்த வழியாக வந்த அரசுப் பேருந்து ஒன்றின் படிக்கட்டுகளில் தொங்கிக் கொண்டு வந்த 11-ம் வகுப்பு படிக்கும் மாணவன் சந்தோஷ் (16), பேருந்து குன்றத்தூர் தேரடி அருகே வந்த போது, திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்தான். அப்போது, பேருந்தின் பின் சக்கரம் அவனது இரண்டு கால்கள் மீதும் ஏறி இறங்கியது. இதில், படுகாயமடைந்த மாணவனை பொதுமக்கள் உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத் தான நிலையில் மாணவன் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாணவனின் இரண்டு கால்களும் பாதத்திற்கு கீழ் கடுமையாக சேதமடைந்து காணப்பட்டதால், அதனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றினர். தொடர்ந்து மாணவன் சிகிச்சை பெற்று வருகிறான். எவ்வளவு அறிவுரை கூறினாலும், அதனை காதில் வாங்காததன் விளைவாக தனது இரண்டு கால்களையும் இழந்த மாணவன் சந்தோஷின், எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

    நேற்று வரை துள்ளித் திரிந்த மாணவன் இன்று தனது இரு கால்களையும் பறிகொடுத்து முடமாகி இருக்கிறான். அவனது எதிர்காலமே இருண்ட காலமாக மாறியிருக்கிறது. இது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்து அல்ல. தானாக விலை கொடுத்து வாங்கிய விபத்து.

    இந்த மாணவரை போல் தினமும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பஸ் படிக்கட்டுகளில் தொங்கி ஆபத்தான முறையில் பயணிக்கிறார்கள். இந்த சம்பவத்தை பார்த்த பிறகாவது அவர்கள் திருந்த வேண்டும்.

    • கிராமப்புறங்கள்,விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
    • பெருமாள்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பகுதியில் இருந்தும், மாநகரத்தில் விரிவாக்கப் பகுதியில் இருந்தும் தினமும் பாளை பகுதியில் உள்ள கல்லூரி களுக்கும், பள்ளிகளுக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிப்பதற்காக வந்து செல்கின்றனர்.

    மாநகர பகுதிக்குள் குறிப்பாக டவுன், பேட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட அளவு பஸ்கள் இயக்கப்பட்டா லும் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் இந்த பஸ்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவ-மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் என கூட்டமாக காணப்படுகிறது.

    அந்த வகையில் இன்று காலை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் இருந்து டவுனுக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெருமாள்பு ரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவ -மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதனை அந்த வழியாக வந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்த்து உடனடியாக அந்த பஸ் டிரைவரை பஸ்சை நிறுத்த சொல்லி அதில் தொங்கிக் கொண்டிருந்த மாணவிகளை படிக்கட்டில் இருந்து பஸ்சுக்குள் போகுமாறு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் பஸ்சை கிளம்ப அறிவுறுத்தினார். தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலைகளில் மாநகர பகுதியில் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த வேலைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×