search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவ-மாணவிகள்
    X

    பாளை சித்தா கல்லூரி அருகே பஸ்சில் தொங்கியபடி மாணவிகள் பயணம் செய்வதை படத்தில் காணலாம்.

    பாளையில் பஸ் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்த மாணவ-மாணவிகள்

    • கிராமப்புறங்கள்,விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு.
    • பெருமாள்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர்.

    நெல்லை:

    நெல்லை டவுன் பகுதியில் இருந்தும், மாநகரத்தில் விரிவாக்கப் பகுதியில் இருந்தும் தினமும் பாளை பகுதியில் உள்ள கல்லூரி களுக்கும், பள்ளிகளுக்கும் ஏராளமான மாணவ-மாணவிகள் படிப்பதற்காக வந்து செல்கின்றனர்.

    மாநகர பகுதிக்குள் குறிப்பாக டவுன், பேட்டை, கே.டி.சி. நகர் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து குறிப்பிட்ட அளவு பஸ்கள் இயக்கப்பட்டா லும் மாநகராட்சியை ஒட்டி அமைந்துள்ள கிராமப்புறங்களில் மற்றும் விரிவாக்க பகுதிகளில் இருந்து பாளைக்கு வரும் பஸ்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. இதனால் இந்த பஸ்களில் காலை மற்றும் மாலை வேலைகளில் மாணவ-மாணவிகள், பணிக்கு சென்று திரும்பும் பெண்கள் என கூட்டமாக காணப்படுகிறது.

    அந்த வகையில் இன்று காலை மாநகராட்சி விரிவாக்க பகுதியில் இருந்து டவுனுக்கு ஒரு பஸ் வந்து கொண்டிருந்தது. அந்த பஸ்சில் பெருமாள்பு ரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும் ஏராளமான மாணவ -மாணவிகள் படிக்கட்டில் தொங்கியபடி பயணித்தனர். இதனை அந்த வழியாக வந்த சிறப்பு இன்ஸ்பெக்டர் ஒருவர் பார்த்து உடனடியாக அந்த பஸ் டிரைவரை பஸ்சை நிறுத்த சொல்லி அதில் தொங்கிக் கொண்டிருந்த மாணவிகளை படிக்கட்டில் இருந்து பஸ்சுக்குள் போகுமாறு அறிவுரை வழங்கினார். அதன் பின்னர் பஸ்சை கிளம்ப அறிவுறுத்தினார். தொடர்ந்து காலை மற்றும் மாலை வேலைகளில் மாநகர பகுதியில் பெரும்பாலான பஸ்களில் பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. எனவே இந்த வேலைகளில் கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×