search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய ஜெயில்"

    • பணிகள் விரைவில் தொடங்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    • 89 ஏக்கர் நிலத்திற்கு முன்பு நுழைவு அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது.

    கோவை,

    கோவையில் தற்போது மத்திய சிறை அமைந்துள்ள காந்திபுரம் பகுதி மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியாகும். மேலும் மாநகரின் மையப்பகுதியிலும் ஜெயிலானது அமைந்துள்ளது.

    மத்திய ஜெயில் வளாகத்தில் போதிய அளவில் வசதிகள் இல்லை. இதனால் வேறு இடத்துக்கு ஜெயில் வளாகத்தை மாற்ற தீர்மானிக்கப்பட்டு இருந்தது. அதன் பேரில் கோவை மாவட்டம் காரமடை அருகே உள்ள பிளிச்சி பகுதிக்கு புதிய ஜெயில் வளாகத்திற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது. 

    இதையடுத்து பூமிதான இயக்கத்தின் கீழ் கையகப்படுத்தப்பட்டிருந்த 100 ஏக்கர் நிலம் புதிய ஜெயில் வளாகத்திற்கு ஏற்ற இடமாக தேர்வு செய்யப்பட்டது. பிளிச்சியில் புதிய மத்திய ஜெயில் வளாகம் அமைப்பதற்கான பணிகளில் முதற்கட்டமாக 95 ஏக்கர் நிலம் கையகப்ப டுத்தப்பட்டுள்ளது.

    இதில் தற்போது 89 ஏக்கர் நிலத்திற்கு முன்பு நுழைவு அனுமதி சான்று வழங்கப்பட்டுள்ளது.

    வருவாய்த்துறைக்கு சொந்தமான ஒரு நிலத்தை வேறு அரசுத்துறைக்கு வளர்ச்சி பணிகளுக்காக மாற்றி கொடுக்கும்போது முன் நுழைவு அனுமதி சான்றிதழ் இருந்தால் தான் சம்பந்தப்பட்ட அரசுத்துறையில் இருந்து நிதி ஒதுக்கீடு திட்டம் தயாரித்தல் உள்ளிட்ட பணிகள் தொடங்கும் என்பது விதியாகும். 

    இதன் அடிப்படையில் தற்போது வழங்கப்பட்டுள்ள முன் நுழைவு அனுமதி சான்றிதழின் மூலம் வருவாய்த்துறைக்கு சொந்தமான அந்த நிலம் தற்போது ஜெயில் துறையினர் வசம் வந்துள்ளது.

    இதையடுத்து புதிய ஜெயில் வளாகம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டுள்ளது.
    • ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை.

    மதுரை

    தமிழகத்தில் மதுரை உள்பட 9 இடங்களில் மத்திய சிறைச்சாலைகள் உள்ளன. அங்கு பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழக சிறைத்துறை போலீஸ் டி.ஜி.பி அமரேஷ் பூஜாரி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    மதுரை கரிமேடு பகுதியில் மத்திய ஜெயில் உள்ளது. இங்கு 1850 கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். அவர்களை பாதுகாக்கும் பணியில் 500-க்கும் மேற்பட்ட சிறைத்துறை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

    மதுரை மத்திய ஜெயிலில் கைதிகள் மற்றும் உடைமைகளை சோதனை செய்ய அதிநவீன கருவிகள் இல்லை. எனவே ஜெயிலுக்குள் தடை செய்யப்பட்ட பொருட்கள் ரகசியமாக எடுத்துச் செல்லப்பட்டன.

    எனவே மதுரை மத்திய ஜெயிலில் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை மத்திய ஜெயிலுக்குள் பல்வேறு இடங்களில் 50-க்கும் மேற்பட்ட சி.சி.டி.வி கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டன. அடுத்த படியாக சிறைவாசிகளுக்கு இன்டர்காம் நேர்காணல் வசதி ஏற்பாடு செய்து தரப்பட்டது. மேலும் புதிதாக ஒரு நூலகம் தொடங்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் கைதிகளின் உடைமைகளை சோதனை செய்யும் வகையில் அதிநவீன சாதனங்களை கொள்முதல் செய்ய வேண்டும் என்று டி.ஜிபி. அமரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். இதன்படி மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு வசந்த கண்ணன் மற்றும் அலுவலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அதிநவீன கருவிகளை கொள்முதல் செய்வது தொடர்பாக ஆலோசனை நடத்தினர்.

    இதன் அடிப்படையில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் கொள்முதல் செய்யப்பட்டு, மதுரை மத்திய ஜெயில் நுழைவாயிலில் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சிறைக்குள் கொண்டு செல்லும் பொருட்கள் அனைத்தையும் ஆய்வுக்கு உட்படுத்த முடியும். மதுரை மத்திய ஜெயிலில் புதிய எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் செயல்பாட்டை, சிறைத்துறை அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இது தொடர்பாக அதிகாரிகள் கூறியதாவது:-

    மதுரை மத்திய ஜெயில் வளாகத்தில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு உள்ளது. இது கைதிகளின் உடமைகளை துல்லியமாக பரிசோதனை செய்யும். தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை எடுத்து செல்ல முயன்றால், அதனை இந்த அதிநவீன எந்திரம் உடனடியாக காட்டிக் கொடுத்து விடும்.

    மதுரை மத்திய ஜெயிலில் அதிநவீன எக்ஸ்ரே பேக்கேஜ் மிஷின் பொருத்தப்பட்டு இருப்பதால், ஜெயிலுக்குள் இனிவரும் காலங்களில் தடை செய்யப்பட்ட பொருட்களின் பயன்பாடு முற்றிலுமாக தடுக்கப்படும் .

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • காங்கேயம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
    • பழனிசாமியை மீட்டு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.

    கோவை:

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள சிவன்மலையை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 50). இவர் காங்கேயம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியில் நடந்த ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    பின்னர் திருப்பூர் விரைவு மகளிர் நீதிமன்ற காவலில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.கடந்த 13-ந் காலையில் பழனிசாமி திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். இதனை பார்த்த சக கைதிகள் இது குறித்து ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக அவர்கள் விரைந்து சென்று பழனிசாமியை மீட்டு ஜெயிலில் உள்ள ஆஸ்பத்திரியில் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறை கைதிகள் வார்டில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர்.

    ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் பழனிசாமி பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஜெயில் அதிகாரிகள் ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் பழனிசாமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×