search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மதுரவாயல்"

    மதுரவாயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    மதுரவாயல், துண்டலம் தாஸ் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சதிஷ். கார்பெண்டர். கடந்த 31-ந்தேதி அவர் செட்டியார் அகரம் கீரை தோட்டம் பகுதியில் உள்ள மதுபான கடைக்கு சென்றார்.

    அப்போது அங்கு வந்த 5பேர் கும்பலில் ஒருவன் சதிஷிடம் சென்று ஒரு போன் செய்துவிட்டு தருவதாக கூறி செல்போனை கேட்டார். உடனே சதிஷ் தனது செல் போனை அந்த நபரிடம் கொடுத்தார்.

    சிறிது நேரத்தில் கழித்து செல்போனை எடுத்துக் கொண்டு அந்த கும்பல் அங்கிருந்து தப்பி செல்ல முயன்றனர். இதனை தடுக்க முயன்ற சதீசை அவர்கள் பீர் பாட்டிலால் சரமாரியாக தாக்கி தப்பி ஓடிவிட்டனர்.

    இதில் முதுகு, மூக்கில் படுகாயமடைந்த சதிஷ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மதுரவாயல் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், பொன்ராஜ் மற்றும் ஈஸ்வரன் ஆகியோர் தப்பி சென்ற கும்பலை தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வழிப்பறி கும்பல் மதுரவாயல் சர்வீஸ் சாலை அருகே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் விரைந்து சென்று அங்கிருந்த மதுரவாயல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்த சிவா, விஷ்ணு, கிரிதரன், ராஜேஷ், குன்றத்தூர் புதுவட்டாரம் பகுதியைச் சேர்ந்த மகேஷ், ஆகிய 5 பேரை கைது செய்தனர். அவர்கள் அனைவரும் கும்பலாக சேர்ந்து மதுரவாயல் மற்றும் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் செல்போன் பறிப்பில் தொடர்ந்து ஈடுபட்டு வந்தது தெரிந்தது.

    அவர்களிடம் இருந்து 15 செல்போன்கள், திருட்டிற்கு பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
    மதுரவாயலில் தனியாருக்கு சொந்தமான 16-வது மாடி குடியிருப்பில் இருந்து தவறி விழுந்த மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    பூந்தமல்லி:

    மதுரவாயலில் தாம்பரம்-புழல் பைபாஸ் சாலையை ஒட்டி தனியாருக்கு சொந்தமான 16 மாடிகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் ஏராளமான வீடுகள் உள்ளன. இங்குள்ள 6-வது மாடியில் வசித்து வருபவர் பாண்டியன். இவரது மகன் சிபிசக்ரவர்த்தி (வயது 18). பிளஸ்-2 முடித்துள்ள இவர், ‘நீட்’ தேர்வு எழுதி உள்ளார்.

    இந்தநிலையில் நேற்று இரவு தனது நண்பர் ஒருவருடன் சிபிசக்ரவர்த்தி அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள 16-வது மாடிக்கு சென்றார். அப்போது திடீரென கால் தவறி சிபிசக்ரவர்த்தி மாடியில் இருந்து கீழே விழுந்தார். இதில் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார்.

    இதனைக்கண்டதும் அந்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்த மதுரவாயல் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது:-

    சம்பவம் நடந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் சிலர் மொட்டை மாடிக்கு சென்று சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளனர். எனவே மொட்டை மாடிக்கு செல்லும் வழியை குடியிருப்புவாசிகள் பூட்டி வைத்துள்ளனர்.

    ஆனால் உயிரிழந்த சிபிசக்ரவர்த்தி மற்றும் அவரது நண்பர் மொட்டை மாடிக்கு ஜன்னல் வழியாக செல்ல முயன்றுள்ளனர். அப்போது கால் தவறி கீழே விழுந்து சிபிசக்ரவர்த்தி இறந்து போய் இருப்பது தெரியவந்துள்ளது.

    இருவரும் எதற்காக மொட்டை மாடிக்கு சென்றார்கள்? என்பது குறித்து அவரது நண்பரிடம் விசாரித்து வருகிறோம்.

    இவ்வாறு போலீசார் கூறினர். #tamilnews
    மதுரவாயலில் சப்-இன்ஸ்பெக்டர் வீட்டில் கட்டிட பணியின்போது கால் தவறி கிணற்றில் விழுந்து தொழிலாளி பலியானார். 2 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.
    போரூர்:

    மதுரவாயல் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ரமேஷ் (வயது43). கட்டிட தொழிலாளி.

    இவர் மதுரவாயல் 4-வது தெரு வேல் நகரில் வசித்து வரும் ஓய்வு பெறும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மதியழகன் வீட்டில் கட்டிட பணியில் ஈடுபட்டார்.

    கடந்த 7-ந்தேதி பணியில் ஈடுபட்டபோது ரமேஷ் திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் தேடி வந்தனர்.

    இந்த நிலையில் மதியழகன் வீட்டில் இருந்து கிணற்றில் அழுகிய நிலையில் ரமேசின் உடல் மிதந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் ரமேசின் உடலை மீட்டனர்.

    விசாரணையில் ரமேஷ் பணியில் ஈடுபட்டபோது கால் தவறி கிணற்றுக்குள் விழுந்து பலியாகி இருப்பது தெரிந்தது. 2 நாட்களுக்கு பிறகு அவரது உடல் மீட்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து பாதுகாப்பு இல்லாமல் கட்டிட பணியில் ஈடுபட்டதாக காண்டிராக்டர் விநாயகம் மற்றும் மதியழகனை போலீசார் கைது செய்தனர்.

    ×