search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மண் வளம்"

    • தென்னந்தோப்புகளிலும், வட்டப்பாத்திகளிலும், பசுந்தாள் உரங்களை சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சணப்பு பரவலாக பயிரிடப்படுகிறது.
    • நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறி விடும்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஆகிய வட்டாரங்களில் உள்ள சுற்றுப்பகுதிகளில் கிணற்றுப்பாசனத்துக்கு பல ஆயிரம் ஏக்கரில் ஆண்டு முழுவதும் பல்வேறு சாகுபடி மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய விளைநிலங்களில், ஒரே மாதிரியான சாகுபடிகளை தொடர்ச்சியாக மேற்கொள்வதால் மண் வளம் குறைந்து விளைச்சலும் பாதிக்கிறது. இதைத்தவிர்க்க சில விவசாயிகள் சாகுபடிக்கு முன்பாக மண் வளத்தை மேம்படுத்த பசுந்தாள் உரப்பயிர்கள் சாகுபடி செய்கின்றனர்.

    தென்னந்தோப்புகளிலும், வட்டப்பாத்திகளிலும், பசுந்தாள் உரங்களை சாகுபடி செய்வது வழக்கமாக உள்ளது. குறிப்பாக சணப்பு பரவலாக பயிரிடப்படுகிறது. காற்றில் உள்ள தழைச்சத்தை தனது வேர் முடிச்சுகளில் உள்ள நுண்ணுயிர்கள் வாயிலாக சேமிக்கும் திறன் கொண்ட சணப்பு பயிர் விதைத்த 45 நாட்களில் சுமார் 2 மீட்டர் உயரத்துக்கு வேகமாக வளர்ந்து ஏக்கருக்கு 4 முதல் 5 டன் தழை உரத்தையும் சுமார் 15 கிலோ தழைச்சத்தையும் தரும் தன்மை கொண்டதாகும். நன்கு வளர்ந்த சணப்பு பயிர் பூக்கும் முன் மண்ணுடன் சேர்த்து உழுவதால் 5 முதல் 6 வாரத்துக்குள் நன்றாக மக்கி பயிருக்கு நல்ல உரமாக மாறி விடும்.

    சணப்பு பயிர் சாகுபடி செய்யப்பட்ட தென்னந்தோப்புகளில் மண் அரிப்பு தடுக்கப்படும் என வேளாண்துறை சார்பில் தெரிவிக்கின்றனர். எனவே வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை சீசனில், சணப்பு பயிரிட்டு செடி வளர்ந்ததும், உழுது மண் வளத்தை மேம்படுத்த விவசாயிகள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் அந்த சீசன் சமயங்களில் சணப்பு விதை கிடைப்பதில்லை. எனவே வேளாண்துறை சார்பில் குறிப்பிட்ட சீசன்களில் சணப்பு விதைகளை இருப்பு வைத்து வினியோகிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விவசாயம் மீது ஆர்வம் கொண்ட புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்றார்.
    • தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்தார்.

    வேதாரண்யம்:

    நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் தாலுகா, மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் அகிலன்.

    இவர் பட்டபடிப்பு முடித்துள்ளார்.

    விவசாயம் மீது ஆர்வம் கொண்ட இவர் புதிய முயற்சியாக தோட்டக்கலைத்துறை மூலம் 100 சதவீத மானியம் பெற்று தனக்கு சொந்தமான ஒரு ஏக்கரில் கோழிக்கொண்டை பூவினை சாகுபடி செய்து உள்ளார்.

    இது குறித்து அவர் கூறும்போது:-

    தோட்டக்கலைத்துறை மூலம் ஒத்துழைப்பு பெற்று புகையிலை சாகுபடிக்கு மாற்றாக கோழி கொண்டை பூ சாகுபடி செய்து உள்ளேன்.

    இந்த பூ கிலோ ரூ. 75 முதல் 100 வரை சந்தையில் விற்ப்பனையாகிறது. ஒரு ஏக்கரில் சாகுபடி செய்யபட்டுள்ள கோழி கொண்டை பூ நான்கு மாத அறுவடையில் ரூ. 50 ஆயிரம் கிடைக்கும்.

    என எதிர்பார்க்கிறேன் மண்ணையும் மக்களையும் காக்க இந்த முயற்சியில் இப்பகுதியில் முதன்முதலாக ஈடுபட்டுள்ளேன் என்றார்.

    • முசிறி ஜெயேந்திரா பள்ளியில் மண் வளத்தை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி சென்றனர்
    • துறையூர் ரோடு மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் ஸ்ரீஜெயேந்திர வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஈஷா யோகா மையம் சார்பாக மண்வளம் காப்போம் மாணவர்கள் பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளி தாளாளர் வடிவேல் தலைமை தலைமை தாங்கினார். ஈஷா யோகா பயிற்சி மைய சரவணன் பள்ளி துணைத்தலைவர் சந்தோஷ், நூலக வாசக வட்டத் தலைவர் அம்மன் சிவகுமார்,

    போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனர்.

    இந்த பேரணி துறையூர் ரோடு மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது. பின்னர் மாணவ, மாணவிகள் மண் காப்போம் உறுதிமொழி எடுத்தனர்.

    • கொழிஞ்சி கடும் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.
    • கொழிஞ்சியில் சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் தழைச்சத்து அதிக அளவில் இருப்பதால் நெற்பயிர்கள் செழித்து வளரும்.

    உடுமலை:

    மண்வளம் காப்பதில் பசுந்தாள் உரப்பயிர்களில் கொழிஞ்சி முதலிடம் பிடிக்கிறது. மண்ணின் வெப்பத்தைக் கட்டுப்படுத்தவும், மண் வளத்தை மேம்படுத்தவும் வேளாண்மைத்துறையினர் வழிகாட்டுகின்றனர். இதுகுறித்து உடுமலை வேளாண்மைத்துறையினர் கூறியதாவது:-

    கொழிஞ்சி கடும் வெப்பத்தைத் தாங்கி வளரக்கூடிய பயிராகும்.பூச்சி நோய் தாக்குதல் குறைவான பயிராகும். சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்கள் கடும் வெப்பத்தைத் தாங்காது.அத்துடன் அவற்றை பூப்பூக்கும் பருவத்துக்கு முன் மடக்கி உழவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் தண்டு கெட்டிப்பட்டு நார்த்தன்மை அதிகரித்து விடும்.இதனால் சீக்கிரம் மக்காமல் நிலத்திலேயே தங்கி விடும். ஆனால் கொழிஞ்சியைப் பொறுத்தவரை எத்தனை நாட்கள் நிலத்தில் விட்டு வைத்திருந்தாலும் மடக்கி உழுததும் எளிதில் மக்கி விடும்.அத்துடன் வளரும் காலம் வரை நிலத்துக்கு மூடாக்கு போல செயல்பட்டு மண் வெப்பமாவதைத் தடுக்கும்.

    நெல் அறுவடைக்கு 15 நாட்களுக்கு முன் தண்ணீர் பாய்ச்சுவதை நிறுத்தி விடலாம்.அதனையடுத்து 7 நாட்களுக்குப் பிறகு ஒரு ஏக்கருக்கு 8 கிலோ உளுந்து விதையுடன் 5 கிலோ கொழிஞ்சி விதையையும் சேர்த்து 10 மணி நேரம் தண்ணீரில் ஊற வைத்து விதைக்க வேண்டும்.இதனைத் தொடர்ந்து 7 நாட்கள் கழித்து நெல்லை அறுவடை செய்து விடலாம்.பின்னர் உளுந்தும் கொழிஞ்சியும் தண்ணீர் பாய்ச்சாமலேயே நன்கு வளரும்.உளுந்தை 75 நாட்களில் அறுவடை செய்து விடலாம்.அடுத்த போக நெல் சாகுபடிக்கு 15 நாட்கள் முன் நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்சி கொழிஞ்சியை மடக்கி உழுது விடலாம்.

    கொழிஞ்சியில் சாம்பல் சத்து, மணிச்சத்து மற்றும் தழைச்சத்து அதிக அளவில் இருப்பதால் நெற்பயிர்கள் செழித்து வளரும்.குறிப்பாக நெல் சாகுபடியில் யூரியாவின் பயன்பாட்டைக் குறைப்பதில் கொழிஞ்சிக்கு பெரும்பங்கு உள்ளது.மடக்கி உழுத செடியிலுள்ள விதைகள் மண்ணுக்குள் புதைந்திருந்தது அறுவடைக்குப் பிறகு தானாகவே முளைக்கும்.எனவே நெல் சாகுபடிக்கு முன் கொழிஞ்சி சாகுபடி மேற்கொண்டு விவசாயிகள் பயனடையலாம்.அத்துடன் அனைத்து விதமான பயிர் சாகுபடியிலும் பசுந்தாள் உரப்பயிரான கொழிஞ்சி சாகுபடி செய்து மடக்கி உழுவதன் மூலம் மண் வளத்தை மேம்படுத்தலாம்என்று அதிகாரிகள் கூறினர்.

    • உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார்.
    • இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.

    உடுமலை : 

    திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில்ஈஷா யோகா மையம் சார்பில் மண் வளம் பாதுகாப்பு குறித்து மாபெரும் விழிப்புணர்வு வாகன பேரணி வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனை கூட்டம் உடுமலை லட்சுமி ஜூவல்லர்ஸ்நகைக்கடை மாடியில் நடந்தது. இதில் உடுமலைப்பேட்டை சுற்றியுள்ள அனைத்து கிராம விவசாயிகளும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஈஷா யோகா மைய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார் விளக்கஉரை அளித்தார் .பின்பு மண் வளம் பாதுகாப்பு குறித்த குறும்படம் அனைவருக்கும் காட்டப்பட்டது.

    இதில் ஒவ்வொரு நொடியும் ஒரு ஏக்கர் நிலத்தின் மண் பாலைவனம் ஆகிறது. 62 சதவீதம் மண்வளம் கிட்டத்தட்ட அழிந்துவிட்டது. இந்தியாவில் விளையும் காய்கறிகளில் 60 சதவீதம் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது .இந்தியாவின் விவசாய நிலங்களில் கிட்டத்தட்ட 25 சதவீதம் பாலைவனமாக மாறி வருகிறது எனஅவர் தெரிவித்தார். மேலும் சத்குரு தொடங்கியுள்ள மண் காப்போம் இயக்கத்திற்கு ஆதரவாகவும் அதற்கான விழிப்புணர்வு பிரச்சார பயணத்திற்காகவும் உடுமலைப்பேட்டையில் இருந்து பல்வேறு பொதுநல அமைப்புகளின் சார்பில் மாபெரும் வாகன பேரணி வரும் 18-ந் தேதி நடைபெற உள்ளது எனவும் இதற்கு அனைத்து பகுதி பொதுமக்களும் விவசாயிகளும் ஆதரவு தரவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

    உலக அளவில் கவனம் ஈர்த்து வரும் மண் காப்போம் இயக்கத்திற்கு இதுவரை 74 நாடுகள் ஆதரவு அளித்துள்ளது .மேலும் ஐநா.வின் பல்வேறு சுற்றுச்சூழல் அமைப்புகளும், சர்வதேச விஞ்ஞானிகள் உட்பட பல தரப்பினரும் ஆதரவு தெரிவித்து வந்துள்ளனர் .இதேபோல் தமது பகுதியிலும் அனைவரும் கலந்து கொண்டு ஆதரவு தரவேண்டும் எனஈஷா யோகா மையம் சார்பில் பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், லட்சுமி ஜுவல்லரி உரிமையாளர் சிபி சக்கரவர்த்தி ஆகியோர் கேட்டுக்கொண்டனர். 

    ×