search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Students Rally"

    • முக்கிய வீதிகளின் வழியாக சென்று பேரணி மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.
    • மாணவ- மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

    சீர்காழி:

    சீர்காழியில் சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப்பள்ளி, சீர்காழி மனவளக்கலை மன்றம்,சீர்காழி அரிமா சங்கம் சார்பில் சர்வதேச யோகா தின விழா மற்றும் விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமைஆசிரியர் எஸ்.அறிவுடைநம்பி தலைமை வகித்து பேரணியை துவக்கிவைத்தார்.

    எல்.ஐ.சி உதவி இணை மேலாளர் வை.ரவீக்அ ஹமது, வளர்ச்சி அதிகாரி அரவிந்தன் முன்னிலை வகித்தனர்.தொடர்ந்து மாணவ, மாணவிகள் பங்கேற்ற யோகா விழிப்பு ணர்வு பேரணி பள்ளியில் தொடங்கி முக்கிய வீதிகளின் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது.

    முன்னதாக மாணவ, மாணவிகள் பல்வேறு யோகாசனங்களை செய்தனர்.

    இதில் உடற்கல்வி இயக்குனர்முரளிதரன், யோகா உடற்கல்வி ஆசிரியர் முரளி, மார்கண்டன், ராக்கேஷ் பங்கேற்றனர்.

    • முசிறி ஜெயேந்திரா பள்ளியில் மண் வளத்தை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி சென்றனர்
    • துறையூர் ரோடு மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் ஸ்ரீஜெயேந்திர வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஈஷா யோகா மையம் சார்பாக மண்வளம் காப்போம் மாணவர்கள் பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளி தாளாளர் வடிவேல் தலைமை தலைமை தாங்கினார். ஈஷா யோகா பயிற்சி மைய சரவணன் பள்ளி துணைத்தலைவர் சந்தோஷ், நூலக வாசக வட்டத் தலைவர் அம்மன் சிவகுமார்,

    போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனர்.

    இந்த பேரணி துறையூர் ரோடு மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது. பின்னர் மாணவ, மாணவிகள் மண் காப்போம் உறுதிமொழி எடுத்தனர்.

    • வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.
    • விடுதலைப் போராட்ட வீரர்கள், தேச தலைவர்கள், செஸ் ஒலிம்பியாட் சிறப்புகள் போன்ற வேடம் அணிந்து மாணவர்கள் சென்றனர்.

    வீரபாண்டி :

    75-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு திருப்பூர் தாராபுரம் சாலை கோவில் வழி பகுதியில் உள்ள பிரண்ட்லைன் குழுமம் பள்ளி மாணவர்கள் தங்களது வீடுகளில் தேசிய கொடியை ஏற்றி தங்களது நாட்டுப்பற்றை வெளிப்படுத்தினர்.மேலும் திருப்பூர் - காங்கயம் சாலையில் பேரணியை நடத்தினர். பேரணியை பிரண்ட்லைன் குழும பள்ளிகளின் தாளாளர் டாக்டர் சிவசாமி, செயலாளர் டாக்டர் சிவகாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    விடுதலைப் போராட்ட வீரர்கள், தேச தலைவர்கள், செஸ் ஒலிம்பியாட் சிறப்புகள் போன்ற வேடம் அணிந்து மாணவர்கள் சென்றனர்.பேரணிக்கு திருப்பூர் நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு கொடுத்தனர்.

    ×