search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மண்வளத்தை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி
    X

    மண்வளத்தை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி

    • முசிறி ஜெயேந்திரா பள்ளியில் மண் வளத்தை வலியுறுத்தி மாணவர்கள் பேரணி சென்றனர்
    • துறையூர் ரோடு மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முசிறி கைகாட்டியில் ஸ்ரீஜெயேந்திர வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளி மற்றும் ஈஷா யோகா மையம் சார்பாக மண்வளம் காப்போம் மாணவர்கள் பேரணி மற்றும் மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது.

    பேரணிக்கு பள்ளி தாளாளர் வடிவேல் தலைமை தலைமை தாங்கினார். ஈஷா யோகா பயிற்சி மைய சரவணன் பள்ளி துணைத்தலைவர் சந்தோஷ், நூலக வாசக வட்டத் தலைவர் அம்மன் சிவகுமார்,

    போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கருணாநிதி மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவிகள் பேரணியில் கலந்துகொண்டனர்.

    இந்த பேரணி துறையூர் ரோடு மற்றும் முக்கிய விதிகள் வழியாக சென்று தா.பேட்டை ரோட்டில் உள்ள தனியார் மண்டபத்தை வந்தடைந்தது. பின்னர் மாணவ, மாணவிகள் மண் காப்போம் உறுதிமொழி எடுத்தனர்.

    Next Story
    ×