search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு"

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணிகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு எனும் கொள்கையில் காங்கிரஸ் உறுதியாக உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்தார். #LSPolls #Rahul #RahulCampaign
    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் பிரசாரத்தை தொடங்கி வைப்பதற்காக தமிழகம் வந்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சென்னையில்  இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    சமூக நல்லிணக்கமே காங்கிரஸ் கட்சியின் முக்கிய நோக்கமாக உள்ளது. நாட்டில் இப்போது பயங்கரவாதத்தைவிட வேலையின்மையை மக்கள் பெரிய பிரச்சினையாக கருதுகிறார்கள். பாஜக ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் வேலையின்மை அதிகரித்துள்ளது. அதிக வேலைவாய்ப்புகளை தரக்கூடிய சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

    எனவே, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் சிறு மற்றும் நடுத்தர தொழில்துறையை முன்னேற்றுவதன் மூலம் வேலைவாய்ப்பை அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். வேலைவாய்ப்பு உருவாக்கத்திற்கான திட்டங்கள் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இடம்பெறும்.  ஜிஎஸ்டி வரி சிக்கல்கள் எளிமையாக்கப்படும்.

    காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் விவசாயக் கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும். விவசாயிகளும் விவசாயமும் இல்லாத இந்தியா வலிமையாக இருக்காது என்பது காங்கிரசின் நம்பிக்கை. உற்பத்தி மாநிலமான தமிழகத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்க முயற்சிப்போம்.

    நான் ஒவ்வொரு முறையும் செய்தியாளர்களை சந்திக்கிறேன். ஆனால், பிரதமர் மோடி சந்திக்கிறாரா?  நாக்பூரில் இருந்து நாட்டை ஆட்சி செய்ய நினைத்தால் இனி முடியாது. நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் எல்லாம் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்தை கடைப்பிடிக்க வேண்டும் என்று மோடி திணித்து வருகிறார்.



    ரபேல் விவகாரத்தில் விசாரணை நடத்தப்பட்டால் அனில் அம்பானியும், பிரதமர் மோடியும் குற்றவாளிகள் ஆவார்கள். அனில் அம்பானிக்கு ரூ.30 ஆயிரம் கோடி ஒப்பந்தம் கிடைக்க, பிரதமர் தலையிட்டு பேசியுள்ளார். ரபேல் ஒப்பந்தம் குறித்து பாதுகாப்புத்துறை பேசும்போது, பிரதமர் அலுவலகமும் பேசியது பிரச்சினை.

    தமிழகம் தற்போது பிரதமர் மோடியால் இயக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் தமிழ் மொழி மற்றும் கலாச்சாரம் மீது தாக்குதல் நடக்காமல் பார்த்துக்கொள்வோம். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர்  மீது எனக்கு தனிப்பட்ட கோபம் எதுவும் இல்லை. அவர்களை விடுவிப்பது தொடர்பாக நீதிமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். இலங்கையில் நடந்த படுகொலையில் காங்கிரசுக்கு தொடர்பு இருப்பதாக யாரும் கருதவில்லை.

    பாராளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மற்றும் அரசு பணிகளில் 33 சதவீத இடஒதுக்கீடு எனும் கொள்கையில் உறுதியாக உள்ளோம். காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் இது இடம்பெறும். மத்தியில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த இட ஒதுக்கீடு அமல்படுத்தப்படும்.

    நீட் தேர்வால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. உயர்கல்வியைப் பொருத்தவரை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான் சரியாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். #LSPolls #Rahul #RahulCampaign 
    ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேறியது. #OdishaAssembly #33pcreservation #womenreservation
    புவனேஸ்வர்:

    பாராளுமன்ற தேர்தல் மற்றும் அனைத்து மாநில சட்டசபை தேர்தல்களில் போட்டியிட பெண்களுக்கு உரிய வகையில் பிரதிநிதித்துவம் அளிக்கப்படுவதில்லை என பெண்ணுரிமை ஆர்வலர்கள் நாடு முழுவதும் குரல் எழுப்பி வருகின்றனர்.

    இந்நிலையில், ஒடிசா மாநிலத்தில் எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

    147 உறுப்பினர்களை கொண்ட ஒடிசா மாநில சட்டசபையில் தற்போது 12 பெண் எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். ஆண்-பெண்களுக்கு இடையிலான இந்த விகிதாச்சாரத்தை ஓரளவுக்கு சீரமைக்க முதல்-மந்திரி நவீன் பட்நாயக் தீர்மானித்தார்.

    இதைதொடர்ந்து,  எம்.எல்.ஏ., எம்.பி. பதவிகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்க வகைசெய்யும் மசோதா ஒன்றை அவர் சட்டசபையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா எதிர்ப்பு ஏதுமின்றி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    எனினும், நேற்றிரவு இந்த மசோதா மீதான விவாதத்தில் பங்கேற்றுப் பேசிய சட்டசபை பா.ஜ.க. தலைவர் கே.வி.சிங்டியோ, பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் ஆளும்கட்சியால் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மசோதாவில் ஏதோ உள்நோக்கம் உள்ளதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் கட்சி கொறடாவும் இதே கருத்தை முன்வைத்தார்.

    இதற்கு பதிலளித்த அரசு கொறடா, பெண்களுக்கு அதிகாரம் அளிக்கும் விஷயத்தில் அனைத்து மாநிலங்களுக்கும் ஒடிசா முன்மாதிரியாக இருந்து வந்துள்ளது என தெரிவித்தார். #OdishaAssembly #33pcreservation #womenreservation 
    மகாராஷ்டிர மாநிலத்தில் மலைப்பாதையில் சென்றுகொண்டிருந்த பேருந்து பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். #MaharashtraAccident #BusFellDown
    ராய்காட்:

    மகாராஷ்டிர மாநிலம் தபோலியில் உள்ள வேளாண் பல்கலைக்கழக ஊழியர்கள், சடாரா மாவட்டத்தில் உள்ள மகாபலேஸ்வர் பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அவர்கள் சென்ற பேருந்து, இன்று மதியம் ராய்காட் மாவட்டம் அம்பெனலி காட் மலைப்பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து திடீரென பள்ளத்தாக்கில் தலைகீழாக விழுந்தது.

    சுமார் 500 அடி ஆழ பள்ளத்தில் விழுந்ததால் பேருந்து முற்றிலும் சிதைந்து போனது. பேருந்தினுள் இருந்தவர்கள் பலர் உடல் உறுப்புகள் சிதைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் சம்பவ இடத்திற்குச் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 33 பேர் உயிரிழந்ததாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார். #MaharashtraAccident #BusFellDown
    ×