search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் எச்சரிக்கை"

    • அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
    • கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.

    திருப்பூர்:

    கோவை கார் குண்டுவெடிப்பு தொடர்பாக என்.ஐ.ஏ., விசாரணை துவங்கியுள்ளது. அதில் பல்வேறு பயங்கரவாத செயல்களுக்கு திட்டமிட்ட சதி வெளிச்சத்துக்கு வந்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். அனைத்து வகையிலும் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவ்வகையில் திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையிலும் போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளனர். முக்கிய கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் கண்காணிப்பு மற்றும் சோதனை நடத்தப்படுகிறது.விடுதிகள், கூரியர் சர்வீஸ்கள், வாகன பார்க்கிங் மையங்கள் என சந்தேகப்படும் விதமாக புதிய நபர்கள் நடமாட்டம் கண்காணிக்கும் வகையில் உரிய அறிவுரைகள் அதன் உரிமையாளர் மற்றும் ஊழியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் அசம்பாவிதங்களுக்கு திட்டமிடும் நபர்கள் முக்கியமான எரிபொருளாக பெட்ரோல் பயன்படுத்தும் வாய்ப்பு உள்ளது. எனவே பெட்ரோல் பங்க்குகளில் வாகனங்கள் தவிர தனியாக பாட்டில், கேன் போன்றவற்றில் பெட்ரோல் விற்பனை செய்யக் கூடாது என போலீசார் எச்சரித்துள்ளனர்.இது குறித்த அறிவிப்பு பெட்ரோல் பங்க்குளில் வைக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக பாட்டில்களில் பெட்ரோல் விற்பதில்லை என்பதில் பங்க் உரிமையாளர்கள் மிகுந்த உறுதியுடன் உள்ளனர்.

    • 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.
    • தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    வெள்ளகோவில்

    திருப்பூர் மாவட்டம் முத்தூர் அருகே வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் தென்புறம் கீழ்பவானி பாசன கால்வாய் செல்கிறது.அணையில் இருந்து கீழ்பவானி பாசன பிரதான கால்வாயில் வினாடிக்கு 2 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இதனால் இப்பகுதியை கடந்து செல்லும் தண்ணீர் தற்போது வினாடிக்கு சுமார் 2 ஆயிரம் கன அடி வரை கால்வாய்களின் இரு கரைகளையும் தொட்டபடி பாய்ந்து சென்று வருகிறது.

    இந்த நிலையில் வள்ளியரச்சல் பஸ் நிறுத்தம் அருகில் செல்லும் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் இப்பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் மற்றும் அருகில் உள்ள நகர, கிராம பகுதிகளை சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரி மாணவ - மாணவிகள், தனியார் நிறுவன ஊழியர்கள், வடமாநில தொழிலாளர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் நேரில் வந்து கால்வாயின் உள்ளே படிக்கட்டுகளில் இறங்கி நீரில் குளிப்பதற்கு போலீசார் தடை விதித்து உள்ளனர்.

    இதுபற்றி போலீசார் வெளியிட்டுள்ள எச்சரிக்கை அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- வள்ளியரச்சல் கீழ்பவானி பாசன கால்வாய் பாலத்தின் இருபுறமும் அகலமாகவும், உள் பகுதி மிகவும் ஆழமான பகுதியாக இருப்பதாலும், கால்வாயில் தற்போது தண்ணீர் அதிக அளவு செல்வதாலும், உயிருக்கு ஆபத்தான விபத்து ஏற்படும் அபாயம் உள்ள பகுதி என்றும், இங்கு தண்ணீரில் இறங்கி குளிப்பவர்கள் எதிர்பாராதவிதமாக உள்ளே தவறி விழுந்து நீரில் வேகமாக அடித்து செல்ல வாய்ப்பு உள்ளது என்றும், இதனால் உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது என கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள். மேலும் இப்பகுதியில் கீழ்பவானி பாசன கால்வாயில் குளிப்பதற்கு தடை என போலீசார் எச்சரிக்கை அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர்.மேலும் இந்த கீழ்பவானி பாசன கால்வாய் பகுதியில் மேல்புற பகுதிகளில் பாலத்தின் மேலே அமர்ந்து இரவு நேரங்களில் மது அருந்தவும், போதை நிலையில் தண்ணீரில் இறங்கி குளிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாகவும், இதை மீறுபவர்கள் மீது உரிய சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று போலீசார் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    • ஆன்லைன் மூலம் நடைபெறும் பண பரிமாற்றம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
    • லோன் ஆப்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    ஆன்லைன் மூலம் நடைபெறும் பண பரிமாற்றம் மற்றும் குற்றச் செயல்களை தடுக்க சைபர் கிரைம் போலீசார் பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர். இதில் லோன் ஆப், ஆன்லைன் மூலம் கடன் பெறுவதை தவிர்க்க வேண்டும். நீங்கள் அந்த ஆன்லைன், லோன் ஆப் மூலம் கடன் பெற்றால், பெரும் விளைவை எதிர்கொள்ள நேரிடும்.

    இதில் பான்கார்டு, வங்கிக் கணக்கு விவரம் மற்றும் உங்களது புகைப்படம் ஆகியவற்றை பதிவு செய்யச் சொல்லும். அந்த ஆப்-ல் உள்ள விதிமுறைகளை உறுதி செய்யச்சொல்லும். பின்பு செல்போன் எண்ணை எடுத்து கொள்ளும். நாம் எப்போதும் மற்ற ஆப்-ல் அனுமதி கேட்பது போல இருக்கும் என்று எண்ணி உறுதிசெய்து லோன் வாங்கிவிடுவோம்.

    நாம் வாங்கிய கடனுக்கு மிக அதிகபட்சமான வட்டியை கட்ட சொல்லி மிரட்டுவார்கள். அப்படி நாம் கட்டா விட்டால் வட மாநிலத்தைச் சேர்ந்த சில திருட்டு கும்பல் நம்முடைய மொபைலை ஹேக் செய்து, நமது மனைவி குழந்தைகளின் போட்டோவை திருடி மார்பிங் செய்து மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

    நம் செல்போனில் பதிவு செய்துள்ள மற்ற எண்களுக்கும் தகாத வார்த்தைகளால் குறுந்தகவல் அனுப்பியும் மற்றும் நம் புகைப்படத்தை தவறாக சித்தரித்து அதனை அனைவருக்கும் அனுப்பிவிடுவேன் என்று நம்மை மிரட்டுவார்கள். நாம் அதற்கு பயந்து அவர்கள் கூறிய வட்டியையும், அசலையும் செலுத்திவிட்ட பின்னரும் மீண்டும் பணத்தை நம்மை கட்ட சொல்லி மிரட்டுவார்கள்.

    இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேணுகா தேவி கூறியதாவது:-

    லோன் ஆப் மூலம் பீகார், ஜார்க்கண்ட் போன்ற வடமாநில கும்பல்கள் பல்வேறு மோசடிகளை நடத்தி வருகின்றனர்.இது சம்பந்தமாக திண்டுக்கல், பழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து 70க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளது.ஆகவே இதுப்போன்ற ஆப் லோன்களை இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்வதை பொதுமக்கள் தவிர்த்திட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    • புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே கோவில் வளாக பகுதியில் மது குடிக்க வருபவர்களை எச்சரித்து போலீசார் பதாகை வைத்துள்ளனர்
    • கோவில் அருகிலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தாலுகா மேல கரும்பிரான்கோட்டையில் பழமை வாய்ந்த வீர விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலின் நுழைவு பகுதி மற்றும் அந்த சாலை நெடுகிலும் ஆலங்குடி காவல் துறையினர் எச்சரிக்கை பதாகைகள் வைத்துள்ளனர்.

    அதில் இக்கோவிலின் புனிதம் கெட்டு விடக்கூடாது என்பதற்காக கோவில் வளாகம் உள்ளே மது அருந்த அனுமதி கிடையாது என்றும், மீறி னால் தண்டிக்கப்படுவீர்கள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    இதற்கிடையே கோவிலின் வளாகத்தை சுற்றி உள்ள புதர் காடுகளில் இளைஞர்கள் மறைந்து இருந்து மது அருந்தியதோடு, மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை வீசி சென்றுள்ளனர்.

    கோவில் அருகிலேயே டாஸ்மாக் கடை அமைந்துள்ளதால் இதுபோன்ற அத்துமீறல்கள் நடைபெறுவதாக கோவிலுக்கு வருகை தரும் பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

    மேலும் கோவிலை சுற்றி விவசய பயிர்கள் சாகுபடி செய்து வரும் நிலையில் மது பிரியர்களை கட்டுப்படுத்த ஆலங்குடி காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    ×