search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீசார் அதிரடி சோதனை"

    • நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
    • சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர்.

    திருப்பூர்:

    நாடு முழுவதும் வருகிற 12-ந்தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு நிறைய பேர் கிப்ட் பாக்ஸ், பட்டாசு பண்டல்களை வழக்கமாக எடுத்துச்செல்லும் பைகளில் எடுத்து கொண்டு ரெயிலில் பயணம் செய்கிறார்கள். இது விதிமுறைகளுக்கு முற்றிலும் முரணானது. இதனால்c சோதனையில் சிக்கும் பட்டாசு ரகங்களை பறிமுதல் செய்வதோடு, அபராதமும் விதிக்கின்றனர். மேலும் ெரயில்வே அதிகாரிகள் கூறுகையில், இதுகுறித்து, எச்சரிக்கை அறிவிப்புகளை ஏற்கனவே அறிவித்துள்ளோம். அதையும் மீறி பட்ாசுகளை ரெயிலில் கொண்டு செல்வதால், தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம். இந்த பரிசோதனை மேலும் தொடரும் என்றனர்.

    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து ரெயில்நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    • பயணிகள் கொண்டு வரும் உடமைகள் முற்றிலும் சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து ரெயில்நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைதொடர்ந்து தமிழகத்தில் சென்ைன, மதுரை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குடைபாறைப்பட்டியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிக்கு சொந்தமான வாகன குடோன் மீது தீைவக்கப்பட்டது. இதில் ஒரு கார் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலானது.

    இதனையடுத்து பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் பா.ஜ.க நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று அமாவாசை என்பதால் பக்தர்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இதுபோன்ற இடங்களில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு செய்துள்ளனர்.

    ஏற்கனவே சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வெடிகுண்டு உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ரெயிலில் கொண்டு செல்லப்படுகிறதா என்றும் சோதனை நடத்தப்பட்டது.

    பயணிகள் கொண்டு வரும் உடமைகள் முற்றிலும் சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்பட்டது. கொடைரோடு ரெயில்நிலையத்தில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயபிரித்தா தலைமையிலான போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • 65 கிலோ பறிமுதல்
    • போலீசார் அதிரடி நடவடிக்கை

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் கஞ்சா மற்றும் குட்கா புகையிலை விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகி றார்கள்.

    நாகர்கோவில் தக்கலை குளச்சல் கன்னியாகுமரி சப்டிவிஷன்களுக்கு உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஆரல்வாய்மொழி இன்ஸ்பெக்டர் மீனா தலை மையிலான போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற் கொண்டனர். 4கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் 40 கிலோ குட்கா புகை யிலை பறிமுதல் செய்யப்பட்டது. கடைகளின் உரிமை யாளர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

    இதேபோல் நாகர்கோ வில் பகுதியில் கடைகளில் விற்பனை செய்ய வைத்திருந்த குட்கா புகையிலையை பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    மார்த்தாண்டம் இரணியல் குளச்சல் தக்கலை உள்ளிட்ட பகுதிகளிலும் உள்ள கடைகளிலும் போலீசார் சோதனை மேற்கொண்ட போது தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது.

    குட்கா புகையிலை விற்பனை செய்பவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததுடன் கடையில் இருந்த குட்கா புகையிலை பறிமுதல் செய்தனர். நேற்று ஒரே நாளில் 66 கிலோ புகையிலை பறிமுதல் செய்ததுடன் 24 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.தொடர்ந்து குட்கா புகையிலை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.

    ×