search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dindigul Railway Station"

    • தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் பஸ் மூலம் திண்டுக்கல் வந்து செல்கின்றனர்.
    • பழைய தண்டவாளத்தை மாற்றி ஒரு அடி தூரத்திற்கு 52 கிலோ எடை இருக்கும் படியான புதிய தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில்நிலையம் வழியாக தினசரி 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன. தேனி மாவட்டத்தில் இருந்து சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல பொதுமக்கள் பஸ் மூலம் திண்டுக்கல் வந்து செல்கின்றனர்.

    மேலும் வடமாநிலங்களை தென்மாவட்டங்களுடன் இணைக்கு முக்கிய சந்திப்பாக திண்டுக்கல் ரெயில் நிலையம் உள்ளது. இங்கு ரெயில்வே தண்டவாள பராமரிப்பு பணிகள்மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    அதன்படி சரக்கு ரெயில் தண்டவாளங்களை மாற்றிவிட்டு புதிய தண்டவாளம் மாற்றும் பணியில் 20-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். தண்டவாள உதவி பொறியாளர் மேற்பார்வையில் நடைபெற்று வரும் இந்த பணிகள் விரைவில் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ரெயில்வே அதிகாரி கூறுகையில், ஏற்கனவே இருந்த பழைய தண்டவாளத்தை மாற்றி ஒரு அடி தூரத்திற்கு 52 கிலோ எடை இருக்கும் படியான புதிய தண்டவாளம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதன்மூலம் அதிக வலுவுள்ள ரெயில்கள் மற்றும் கூடுதல் ரெயில்கள் அதிகளவில் இயக்க முடியும்.

    நாளுக்குநாள் ரெயில்போக்குவரத்து அதிகரித்து வரும் நிலையில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றார்.

    • தென்னக ரெயில்வேயின் தென்மண்டல ரெயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது.
    • கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    திண்டுக்கல்:

    தென்னக ரெயில்வேயின் தென்மண்டல ரெயில் உபயோகிப்பாளர்கள் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திண்டுக்கல் மாவட்ட தொழில்வர்த்தகர் சங்கத்தின் கூடுதல் செயலாளர் விஜயகுமார், திண்டுக்கல் மாவட்டம் சார்பில் கலந்து கொண்டு பல்வேறு கோரிக்கைகள் குறித்த மனுவை அளித்தார்.

    புதிதாக மற்றொரு அதிவிரைவு தேஜஸ்ரெயில் மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்பட வேண்டும். பாரதபிரதமரின் வந்தேபாரத் ரெயில் சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை இயக்கப்பட வேண்டும். திண்டுக்கல் ரெயில்நிலையத்தில் அனைத்து ரெயில்களும் 3 நிமிடம் மட்டுமே நின்று செல்கின்றன. இதை 5 நிமிடமாக அதிகரிக்க வேண்டும். எல்.இ.டி டிஜிட்டல் போர்டு அனைத்து பிளாட்பாரங்களிலும் புதிதாக அமைத்து செயல்படுத்த வேண்டும்.

    திண்டுக்கல் ரெயில்நிலையத்தின் முன்பகுதியில் இருந்து கடைசி பிளாட்பாரம் வரை சுரங்கப்பாதையை நீட்டிக்க வேண்டும். திண்டுக்கல் ரெயில்நிலையத்திற்கு வரும் வயதானோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் பேட்டரி கார்கள் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.

    • தண்டவாளத்தில் மாடுகள் சுற்றித்திரிவதால் ரெயில் அடிபட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகரில் மாடுகளை வளர்ப்பவர்கள் அதனை முறையாக பராமரிப்பது இல்லை. பெரும்பாலும் பாலை மட்டும் கரந்துவிட்டு மாடுகளை சாலைகளில் சுற்றவிடுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும் அபராதம் விதித்தபோதும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் ரெயில் நிலையத்திலும் மாடுகள் சுற்றித்திரிவது அதிகரித்துள்ளது.

    வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தினசரி 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திண்டுக்கல் ரெயில்நிலையத்தை கடந்து செல்கிறது. இதனால் ரெயில்நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் பிளாட்பாரங்களில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென பயணிகள் கூட்டத்தில் புகுந்துவிடுவதால் அவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர். மேலும் ரெயில் தண்டவாளத்தில் அதிகளவில் சுற்றித்திரிவதால் விபத்து அபாயம் உள்ளது.

    எனவே அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து ரெயில்நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.
    • பயணிகள் கொண்டு வரும் உடமைகள் முற்றிலும் சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களை தொடர்ந்து ரெயில்நிலையங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவையில் பா.ஜ.க நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டதைதொடர்ந்து தமிழகத்தில் சென்ைன, மதுரை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றன. திண்டுக்கல் மாவட்டத்தில் குடைபாறைப்பட்டியை சேர்ந்த பா.ஜ.க நிர்வாகிக்கு சொந்தமான வாகன குடோன் மீது தீைவக்கப்பட்டது. இதில் ஒரு கார் மற்றும் 7 மோட்டார் சைக்கிள்கள் எரிந்து சாம்பலானது.

    இதனையடுத்து பா.ஜ.க சார்பில் போராட்டம் நடத்தப்பட்டது. தீ வைப்பு சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்யாவிட்டால் தொடர் போராட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலும் பா.ஜ.க நிர்வாகிகளின் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

    திண்டுக்கல் மாவட்டத்தில் இரவு நேர வாகன சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விடுமுறை நாளான இன்று அமாவாசை என்பதால் பக்தர்கள் கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. எனவே இதுபோன்ற இடங்களில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு செய்துள்ளனர்.

    ஏற்கனவே சென்னை, பெங்களூர் உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து திண்டுக்கல் வழியாக தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயில்களில் கஞ்சா, புகையிலை பொருட்கள் கடத்தப்படுகிறதா என்று சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வெடிகுண்டு உள்ளிட்ட அபாயகரமான பொருட்கள் ரெயிலில் கொண்டு செல்லப்படுகிறதா என்றும் சோதனை நடத்தப்பட்டது.

    பயணிகள் கொண்டு வரும் உடமைகள் முற்றிலும் சோதனை செய்தபிறகே அனுமதிக்கப்பட்டது. கொடைரோடு ரெயில்நிலையத்தில் ரெயில்வே இன்ஸ்பெக்டர் ஜெயபிரித்தா தலைமையிலான போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். இதுபோன்ற சோதனை தொடர்ந்து நடைபெறும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • திண்டுக்கல் ரெயில் நிலையம் உள்ளது.திண்டுக்கல் வழியாக நாளொன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
    • ரெயில்வே நிர்வாகம் சாலை ஓரத்தில் உள்ள செடிகளை அகற்றி சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குள்ளனம்பட்டி:

    தென் மாவட்டங்களில் அமைந்துள்ள பிரதான ரெயில் நிலையங்களுள் ஒன்றாக திண்டுக்கல் ரெயில் நிலையம் உள்ளது.திண்டுக்கல் வழியாக நாளொன்றுக்கு 60-க்கும் மேற்பட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன.தினமும் சுமாா் 10 ஆயிரம் பயணிகள் வந்து செல்கின்றனா்.

    இந்த நிலையில் ரெயில்வே நுழைவு வாயிலுக்கு உள்ளே செல்லும் சாலை ஓரத்தில் அடர்ந்த மரங்களும், செடிகளும் உள்ளது.இந்த செடிகளுக்கு மத்தியில் மது பிரியர்கள் மது அருந்துகின்றனர்.போதை தலைக்கேறியதும் மது பாட்டிலை சுக்குநூறாக உடைத்து வீசுகின்றனர்.மேலும் மரங்கள் மற்றும் செடிகள் நிறைந்து அடர்ந்த பகுதியாக உள்ளதால் சமூக விரோத செயல்களும் நடைபெறுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

    இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த ஒருவர்  கூறுகையில், ரெயில்வே நுழைவு வாயிலுக்கு செல்லும் வழியில் மாலை நேரங்களில் மது பிரியர்கள் உட்கார்ந்து செடிகளுக்கு நடுவில் மது அருந்துகின்றனர்.மேலும் ஒரு சிலர் இரவு நேரங்களில் பெண்களை அழைத்து உல்லாசத்தில் ஈடுபடுகின்றனர்.

    செடிகள் அடர்ந்து காணப்படுவதால் வெளியில் யாருக்கும் தெரிவதில்லை.மேலும் ஒரு சில சமூக விரோதிகள் நூதன முறையில் யாசகம் செய்வதாக கூறி அமர்ந்து கொண்டு, இரவு நேரங்களில் அந்த வழியாக நடந்து செல்பவர்களிடம் வழிப்பறியிலும் ஈடுபடுகின்றனர்.

    போலீசாரும் மது போதையில் இருப்பவர்களை நாங்கள் எதுவும் செய்ய முடியாது என கூறுகின்றனர்.

    இதனால் இந்த பகுதிகள் முழுவதும் மது அருந்தும் கூடாரமாகவே திகழ்கிறது.ஆகவே போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.ரெயில்வே நிர்வாகம் சாலை ஓரத்தில் உள்ள செடிகளை அகற்றி சமூக விரோத செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    திண்டுக்கல்லில் ரெயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற பெண்ணை போலீசார் காப்பாற்றினர்.
    குள்ளனம்பட்டி:

    ஒட்டன்சத்திரம் அருகே கருப்பணபுரத்தை சேர்ந்தவர் சீத்தாராமன். இவரது மனைவி கல்பனா (வயது21). இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.

    கருத்து வேறுபாடு காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்தது. இதனால் கல்பனா கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறினார்.

    திண்டுக்கல் ரெயில் நிலையத்துக்கு வந்த கல்பனா தற்கொலை செய்து கொள்வது என முடிவு செய்தார்.

    பாலக்காடு எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு பாய்வதற்கு முயன்ற கல்பனாவை ரெயில்வே போலீசார் வடிவேல் மற்றும் சபீதா ஆகியோர் துரிதமாக செயல்பட்டு காப்பாற்றினர்.

    மேலும் கல்பனாவின் தாய் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அவர்களிடம் கல்பனாவை ஒப்படைத்தனர். ரெயில்வே போலீசாரை ஏ.டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டினார். #tamilnews
    திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
    திண்டுக்கல்:

    7 சி.பி.சி. பரிந்துரைத்த ரூ.18 ஆயிரம் குறைந்தபட்ச சம்பளத்தை உயர்த்தி வழங்க வேண்டும், சம்பள நிர்ணய பார்முலாவை உயர்த்தி வழங்க வேண்டும், ரெயில்வே நிர்வாகத்தை தனியார் மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், வாரிசுகளுக்கு வேலை கொடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் ரெயில் நிலையம் முன்பு எஸ்.ஆர்.எம்.யு. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

    மூர்த்தி தலைமையில் 50 பேரும், சுசிதரன் தலைமையில் 40 பேரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் ரெயில்வே நிர்வாகத்தை கண்டித்து கோ‌ஷங்கள் எழுப்பினர்.திண்டுக்கல் ரெயில் நிலையம், பணியாளர்கள், ஆர்ப்பாட்டம்
    ×