என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கால்நடைகளால் விபத்து அபாயம்"

    • மாடுகள் அவிழ்த்துவி:டுவதால் சாலையோரம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் சிதறி கிடக்கும் உணவுகளை உண்பதற்காக சுற்றி திரிகின்றன.
    • கால்நடைகள் தண்டவாள த்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் ரெயில் நிலையம் அருகே அனுமந்தநகர், மேற்கு மரியநாதபுரம், ரவுண்ட் ரோடு புதூர் ஆகிய பகுதிகளில் உள்ளவர்கள் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் மாடுகளை தொழுவத்தில் அடைக்காமல் அவிழ்த்து விடுகின்றனர்.

    அந்த மாடுகள் சாலையோரம் மற்றும் ரெயில் தண்டவாளங்களில் சிதறி கிடக்கும் உணவுகளை உண்பதற்காக சுற்றி திரிகின்றன. மேலும் ரெயில் நிலையம் அருகே உள்ள ரெயில்வே கூட்டுறவு பண்டகசாலையின் முன்பாக கால்நடைகள் கூட்டம் கூட்டமாக போக்கு வரத்துக்கு இடையூறாக திரிகிறது.

    இந்த நிலையில் அங்கு சிதறி கிடக்கும் உணவுகளை கால்நடைகள் உண்ணும் போது பிளாஸ்டிக் பைகளை யும் சேர்த்து உண்பதால் கால்நடைகளுக்கு உடல் சம்பந்தமான உபாதைகள் ஏற்படுகிறது. மேலும் கால்நடைகள் தண்டவாள த்தைக் கடக்கும் சமயத்திலும் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

    எனவே சாலைகள் மற்றும் ரெயில் தண்டவாள ங்களில் கால்நடைகளை சுற்றி திரிய விடும் மாட்டின் உரிமை யாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, கால்நடைகளை பறிமுதல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • தண்டவாளத்தில் மாடுகள் சுற்றித்திரிவதால் ரெயில் அடிபட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.
    • அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் நகரில் மாடுகளை வளர்ப்பவர்கள் அதனை முறையாக பராமரிப்பது இல்லை. பெரும்பாலும் பாலை மட்டும் கரந்துவிட்டு மாடுகளை சாலைகளில் சுற்றவிடுகின்றனர்.

    இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பிரதான சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென குறுக்கே வருவதால் விபத்துகள் ஏற்பட்டு வருகின்றன. மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை அறிவுறுத்தியும் அபராதம் விதித்தபோதும் இதனை கட்டுப்படுத்த முடியவில்லை. இந்த நிலையில் ரெயில் நிலையத்திலும் மாடுகள் சுற்றித்திரிவது அதிகரித்துள்ளது.

    வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். தினசரி 70-க்கும் மேற்பட்ட ரெயில்கள் திண்டுக்கல் ரெயில்நிலையத்தை கடந்து செல்கிறது. இதனால் ரெயில்நிலையம் எப்போதுமே பரபரப்பாக காணப்படும்.

    இந்த நிலையில் பிளாட்பாரங்களில் சுற்றித்திரியும் மாடுகள் திடீரென பயணிகள் கூட்டத்தில் புகுந்துவிடுவதால் அவர்கள் அச்சத்துடனேயே உள்ளனர். மேலும் ரெயில் தண்டவாளத்தில் அதிகளவில் சுற்றித்திரிவதால் விபத்து அபாயம் உள்ளது.

    எனவே அதிகாரிகள் கால்நடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×