search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுக்குழு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓபிஎஸ் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது.
    • அதிமுக பொதுக்குழுவுக்கு தடைகேட்ட ஓபிஎஸ் வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

    அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக்கோரி ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றம் பொதுக்குழு உறுப்பினர் ஒருவர் சென்னை ஐகார்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

    இந்த வழக்கு நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஓபிஎஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் குரு கிருஷ்ணகுமார் வாதாடும்போது, 11ம் தேதி பொதுக்குழு கூட்டலாம் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது, ஆனால் வேறு நிவாரணங்களை பெற உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவித்திருந்தது. அதனால் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்றார்.

    தொடர்ந்து வாதாடிய எடப்பாடி பழனிசாமியின் வழக்கறிஞர் கட்சி விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிடக்கூடாது என்று ஏற்கனவே உச்ச நீதிமன்றம் தெரிவித்திருப்பதால், அந்த அடிப்படையில் இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றார்.

    இரு தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் நகல்களை  தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை இன்று பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளி வைத்தார்.

    அதன்படி, ஜூலை 11-ல் நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கு மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்பு தொடங்கியது.

    வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை ஓபிஎஸ் தாக்கல் செய்தநிலையில் விசாரணை தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

    • ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார்.

    சிவகங்கை

    சென்னையில் கடந்த 23-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழுவில் பங்கேற்ற ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வத்தை அவமரியாதை செய்ததை கண்டித்து சிவகங்கையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

    மாநில மாணவரணி துணைச்செயலாளர் ஆசைத்தம்பி தலைமை தாங்கினார். ஆவின் சேர்மனும், மாவட்ட பேரவை செயலாளருமான அசோகன், மாநில பேரவை இணை செயலாளர் சின்னையா, மாவட்ட கவுன்சிலர் பில்லூர் ராமசாமி மற்றும் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர். 

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு.
    • உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்பு.

    அதிமுக பொதுக்குழுவை எதிர்த்த வழக்கில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்று இரு நீதிபதிகள் அமர்வு உத்தரவிட்ட நிலையில் அது மீறப்பட்டதாக சண்முகம் வழக்கு தொடர்ந்துள்ளார்.

    அதிமுக பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கிற்கான மனு தாக்கல் செய்யப்பட்டது.

    அந்த மனுவில், உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை நிராகரித்து அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் ஜூலை 11-ல் பொதுக்குழு கூடும் என அறிவித்தும் நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும், 23-ம் தேதி நடந்த பொதுக்குழுவில் ஒற்றைத் தலைமை வேண்டும் என கையெழுத்திட்டு ஒப்படைத்ததாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழு, இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ்க்கு எதிரான மனு விரைவில் விசாரணை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் சண்முகன் மனு விசாரணைக்கு வர வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.
    • கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக அதிமுக சார்பில் கடந்த 23-ம் தேதி அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்காக, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர். இதற்கு மத்தியில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது. பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

    இதையடுத்து, அதிமுக பொதுக்குழு கூட்டம் ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கில் நடத்தவுள்ளதாக சற்று நேரம் முன்பு தகவல் வெளியானது. இதற்காக, அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் கூறப்பட்டது.

    இந்நிலையில், ஈசிஆர் விஜிபியில் அதிமுக பொதுக்குழு நடத்தும் ஏற்பாடுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் இருப்பதால் குழப்பம் நீடிப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    • ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.
    • அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

    ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஆதிமுக சார்பில் கடந்த 23-ம் தேதி அன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதற்காக, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது.

    ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பு ஆதரவாளர்கள் ஒருவருக்கொருவரை எதிர்த்து கோஷங்கள் எழுப்பி முழக்கமிட்டனர். இதற்கு மத்தியில் தொடங்கிய பொதுக்குழு கூட்டத்தில் தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்டது.

    இதையடுத்து, பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் நடைபெறும் என அவைத்தலைவர் அறிவித்தார்.

    இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் ஈசிஆரில் உள்ள விஜிபி அரங்கில் நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இதற்காக, அரங்கம் அமைக்கும் பணி தீவிரமாக செய்யப்பட்டு வருகிறது.

    ×