search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் கொண்டாட்டம்"

    • பசுக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது
    • அனைவருக்கும் அன்னதானம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அப்பகுதியை சேர்ந்த பசுக்களை போஸ்டர் அடித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது.

    இதனைதொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து விட்டு பின் பசுக்களுக்கு படையலிட்டனர். ஊர் பொதுமக்கள் சார்பாக அனைத்து பசுக்களுக்கும் பரிசாக கயிர் மற்றும் சலங்கை கொடுக்கப்பட்டு படையலிட்ட சாதம் பசுக்களுக்கு ஊட்டி விடப்பட்டது. பின்பு அங்கு இருந்த பொலி நீரை எடுத்து பசுக்களின் மீது தெளித்து பசுக்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ளூர் காளைகளை கொண்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

    • கொல்லி மலை பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடினர்.
    • விழாவையொட்டி வீடு களில் வண்ண கோல மிட்டு, கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டி, பாரம்பரிய ஆண்டி குலத்தான் ஆட்டம், பாரம்பரிய கொல்லிமலை கும்மி பாட்டுடன் பெண்கள் நடனம் ஆடினர்.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள பெரிய கோம்பைபுதூர் பகுதியில் வசிக்கும் கொல்லி மலை பழங்குடியின மக்கள், தங்கள் பாரம்பரியத்தை மீட்டெடுக்கும் வகையில் பொங்கல் விழாவை கொண்டாடினர்.

    பெண்கள் புத்தாடை அணிந்தும், புதுப்பானையில் பொங்கல் வைத்தும், சிறப்பு பூஜைகள் செய்தும் சூரியனை வழிபட்டனர். விழாவையொட்டி வீடு களில் வண்ண கோல மிட்டு, கரும்பு, மஞ்சள் தோரணங்கள் கட்டி, பாரம்பரிய ஆண்டி குலத்தான் ஆட்டம், பாரம்பரிய கொல்லிமலை கும்மி பாட்டுடன் பெண்கள் நடனம் ஆடினர்.

    அப்போது அவர்கள் பொங்கலோ பொங்கல் என கோஷமிட்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    • பறை இசை முழங்க விழா நடைபெற்றது.
    • நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர தி.மு.க சார்பில் நகர செயலாளர் ச. இளஞ்செழியன் தலைமையில் காந்தி திடல் மைதானத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதில் மகளிர் அணியினர் குலவையிட்டும், கும்மியடித்தும், பறை இசை முழங்க விழா நடைபெற்றது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது.

    இதில் முன்னாள் எம்.எல்.ஏ., மு. திராவிடமணி, ஒன்றிய செயலாளர் லியாகத் அலி, முன்னாள் நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினர்கள் தங்கராஜ், சீனி, நகர நிர்வாகிகள், அவை தலைவர் செல்வராஜ், துணை செயலாளர்கள் ஜபரூல்லா ஜெயக்குமார் நாகேஷ்வரி மாவட்ட பிரதிநிதிகள் ரசாக், நெடுஞ்செழியன், மணிகண்டன், பொருளாளர் தமிழழகன், பேரூர் செயலாளர் சுப்பிரமணி, நகர் மன்ற தலைவர் பரிமளா, ஒன்றிய அவைதலைவர் கருப்பையா, ஒன்றிய துணை செயலாளர்கள் வெங்கடாசலம், பத்மாவதி, மாவட்ட பிரதிநிதிகள் பால்ராஜ் நேச குமார் யூசுப் முபாரக் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் அவைத்தலைவர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    • பம்பை, உடுக்கை, சிலம்பம், கும்மி, தப்பாட்டம், வாய்ப்பாட்டு, வயலின் இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
    • மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடினார்கள்.

    கடலூர்:

    கடலூர் தேவனாம்பட்டினத்தில் அரசு பெரியார் கலைக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர் திருநாள் பெருவிழா கொண்டாடப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர் ஜோதி வெங்கடேஸ்வரன் தலைமை தாங்கினார். பொருளியல் துறை தலைவர் ராமகிருஷ்ணன் சாந்தி முன்னிலை வகித்தார்.

    இவ்விழாவில் மங்கள இசை உடன் விளக்கேற்றி பொங்கல் வைத்து இயற்கை வழிபாடு செய்து கொண்டாடப்பட்டது. பின்னர் மாணவ மாணவிகளுக்கு பொங்கல் வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து பாரம்பரிய விளையாட்டான கயிறு இழுத்தல், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.

    மேலும் பம்பை, உடுக்கை, சிலம்பம், கும்மி, தப்பாட்டம், வாய்ப்பாட்டு, வயலின் இசை உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் மாணவ மாணவிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு பொங்கல் விழாவை விமர்சையாக கொண்டாடினார்கள்.

    மேலும் அனைவரும் வண்ண ஆடைகளுடன் பாரம்பரிய உடைகள் அணிந்து மாணவ-மாணவிகள் விழாவில் கலந்து கொண்டது கல்லூரி முழுவதும் வண்ணமயமாக காட்சியளித்தது.

    இதற்கான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் மற்றும் விழா ஒருங்கிணைப்பை தமிழ் துறையினர் மற்றும் நெய்தல் தமிழ் மன்றம் செய்திருந்தனர். முடிவில் தமிழ் துறை தலைவர் கீதா நன்றி கூறினார்.

    ×