search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போஸ்டர் அடித்து பசுவை மட்டுமே வைத்து பொங்கல் கொண்டாட்டம்
    X

    ஊசூரில் வினோத பொங்கல் கொண்டாட்டம் நடந்த காட்சி.

    போஸ்டர் அடித்து பசுவை மட்டுமே வைத்து பொங்கல் கொண்டாட்டம்

    • பசுக்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது
    • அனைவருக்கும் அன்னதானம்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே உள்ள ஊசூர் கிராமத்தில் மாட்டுப் பொங்கல் முன்னிட்டு பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.

    இதில் சிறப்பு அழைப்பாளராக அப்பகுதியை சேர்ந்த பசுக்களை போஸ்டர் அடித்து மேளதாளத்துடன் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டது.

    இதனைதொடர்ந்து ஊர் மக்கள் ஒன்றாக கூடி பொங்கல் வைத்து சூரியனுக்கு படைத்து விட்டு பின் பசுக்களுக்கு படையலிட்டனர். ஊர் பொதுமக்கள் சார்பாக அனைத்து பசுக்களுக்கும் பரிசாக கயிர் மற்றும் சலங்கை கொடுக்கப்பட்டு படையலிட்ட சாதம் பசுக்களுக்கு ஊட்டி விடப்பட்டது. பின்பு அங்கு இருந்த பொலி நீரை எடுத்து பசுக்களின் மீது தெளித்து பசுக்களை வீட்டிற்கு அழைத்து சென்றனர்.

    விழா முடிவில் அனைவருக்கும் அன்னதானம் சிறப்பாக வழங்கப்பட்டது. இதனையடுத்து அப்பகுதியில் உள்ளூர் காளைகளை கொண்டு மஞ்சுவிரட்டு நடத்தப்பட்டது.

    Next Story
    ×