search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேத்தாய் புயல்"

    ஆந்திர மாநிலத்தை சூறையாடிய பேத்தாய் புயலின் கோரத்தாண்டவத்துக்கு மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் இருந்த பயிர்கள் அழிந்து, நாசமடைந்தன. #CyclonePhethai #Andhracrops ##Andhracropsdamage
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தை நேற்று சக்தி வாய்ந்த பேத்தாய் புயல் தாக்கியது. இதனால், விசாகப்பட்டினம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் வடக்கு கோதாவரி மாவட்டங்கள் பெரும் பாதிப்புள்ளாகின.

    புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூழ்கி சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலத்தில் இருந்த நெல், சோளம், மிளகாய் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தன.

    குறிப்பாகம் குண்டூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கரில் இருந்த நெல்பயிர்கள் அறுவடை முடிந்து உலர வைப்பதற்கான நேரத்தில் நாசமாகின. மேலும், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான புகையிலை, சோளம், மிளகாய் போன்ற பணப்பயிர்கள் நாசமடைந்தன,

    கிருஷ்ணா மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் அளவிலான நெல், சோளம், மிளகாய் மற்றும் வாழை பயிர்கள் நாசமாகின. கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் புயல் காற்றில் பல ஏக்கர்களில் இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    மேற்கண்ட 5 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக செய்யப்பட்ட ஆரம்பகட்ட மதிப்பீட்டில் பேத்தாய் புயலால் சுமார் 450 கோடி ரூபாய் அளவிலான பயிர்கள் அழிந்துப் போனதாக தெரியவந்துள்ளது.

    மேலும், குளிர் தாங்க முடியாமல் சுமார் 800 ஆடுகள் மற்றும் சில கால்நடைகளும் இறந்தன. புயல் பாதித்த பகுதிகளை இன்று வான்வழியாக பறந்து சென்று ஆய்வு செய்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு விரைவில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளர்.



    புயல் பாதித்த 14 மண்டலங்களில் உடனடியாக மின்சார வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 32 ஆயிரம் மக்கள் 187 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CyclonePhethai #Andhracrops ##Andhracropsdamage
    வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி ஆந்திராவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MET #PethaiCyclone
    சென்னை:

    தென்கிழக்கு வங்கக்கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டி உள்ளது.

    மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கில் 730 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 930 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 470 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

    இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு, திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும். நாளை மறுநாள் ஆந்திராவின் கடலோர பகுதியான ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில்,  வங்கக்கடலில் உருவாகியிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியது. இந்த ‘பேத்தாய்’ புயல் ஆந்திராவின் மசூலிப்பட்டினம்-காக்கிநாடா இடையே டிச.17ம் தேதி பிற்பகல் கரையை கடக்கும்.  

    இதனால் ஆந்திர கடலோர பகுதிகளில் டிச.16 மற்றும் 17ம் தேதிகளில் கனமழை பெய்யும். புயலால் கோதாவரி, விசாகப்பட்டினம், கிருஷ்ணா, குண்டூர் மாவட்டங்கள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த ஏனம் மாவட்டமும் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. #MET #PethaiCyclone
    சென்னை அருகே உருவாகியுள்ள பேத்தாய் புயலால் அடுத்த 2 நாட்களுக்கு பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. #PethaiCyclone #IMD
    சென்னை:

    தென்கிழக்கு வங்க கடலில் நிலை கொண்டு இருந்த தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று இன்று காலை புயலாக மாறியது.

    இந்த புயலுக்கு நாடுகள் வரிசைப்படி தாய்லாந்து ‘பேத்தாய்’ என பெயர் சூட்டி உள்ளது.

    மணிக்கு 11 கி.மீ. வேகத்தில் மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று காலை 8.30 மணி நிலவரப்படி சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கில் 730 கி.மீ. தொலைவிலும், ஆந்திராவின் மசூலிப்பட்டினத்தில் இருந்து கிழக்கு தென்கிழக்கில் 930 கி.மீ. தொலைவிலும், இலங்கையின் திரிகோணமலையில் இருந்து 470 கி.மீ. தொலைவிலும் மையம் கொண்டு உள்ளது.

    இந்த புயலானது அடுத்த 24 மணி நேரத்தில் (16-ந்தேதி) தீவிர புயலாக மாறி வடக்கு மற்றும் வடமேற்கு, திசையில் வடதமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரை நோக்கி நகரும்.

    நாளை மறுநாள் (17-ந்தேதி) மாலை ஆந்திராவின் கடலோர பகுதியான ஓங்கோலுக்கும் காக்கிநாடாவுக்கும் இடையே கரையை கடக்கிறது.


    இதன் காரணமாக சென்னை மற்றும் வட தமிழகத்தின் கடலோர பகுதிகளில் இன்று பரவலாகவும் ஒரு சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும். நாளை பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    புயல் ஆந்திரா நோக்கி நகர்வதால் சென்னைக்கு புயல் ஆபத்து நீங்கியது என்றாலும் நாளை தீவிர புயலாக மாறுவதால் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    கஜா போன்று ‘பேத்தாய்’ புயலும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கஜா புயல் கரையை கடந்த போது 120 கி.மீ. வேகத்தில் சூறைக்காற்று வீசியது. அதுபோல் பேத்தாய் புயலும் ஆந்திராவில் கரையை கடக்கும்போது 100 கி.மீ. வேகத்தில் சூறைக் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இன்று மாலை வடதமிழகம், புதுவை கடலோர ஆந்திராவில் மணிக்கு 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும். 16-ந்தேதி 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும் அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும். நாளை வட தமிழகத்தில் 65 கி.மீ. வேகத்தில் காற்று வீசும், 17-ந்தேதி 80 முதல் 90 கி.மீ. வேகத்திலும், அதிகபட்சம் 100 கி.மீ. வேகத்திலும் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

    புயல் கரையை கடந்த பின்பு தீவிரம் குறைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறி 18-ந்தேதி ஒடிசா கடற்கரை நோக்கி செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வட தமிழகத்துக்கு 18-ந்தேதி மழை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

    சென்னையில் நேற்று பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இரவில் கடல் காற்று பலமாக வீசத் தொடங்கியது. லேசாக மழை தூறியது. இன்றும் அதே நிலை நீடித்தது. எதிர்பார்த்த அளவுக்கு மழை இல்லை. காற்று மட்டுமே பலமாக வீசி வருகிறது. #PethaiCyclone #IMD
    ×