search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பேத்தாய் புயலின் கோரத்தாண்டவம் - ஆந்திராவில் 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்
    X

    பேத்தாய் புயலின் கோரத்தாண்டவம் - ஆந்திராவில் 3.50 லட்சம் ஏக்கர் பயிர்கள் நாசம்

    ஆந்திர மாநிலத்தை சூறையாடிய பேத்தாய் புயலின் கோரத்தாண்டவத்துக்கு மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலங்களில் இருந்த பயிர்கள் அழிந்து, நாசமடைந்தன. #CyclonePhethai #Andhracrops ##Andhracropsdamage
    ஐதராபாத்:

    ஆந்திர மாநிலத்தை நேற்று சக்தி வாய்ந்த பேத்தாய் புயல் தாக்கியது. இதனால், விசாகப்பட்டினம், குண்டூர், கிருஷ்ணா, கிழக்கு மற்றும் வடக்கு கோதாவரி மாவட்டங்கள் பெரும் பாதிப்புள்ளாகின.

    புயலை தொடர்ந்து பெய்த கனமழையால் பெருக்கெடுத்த வெள்ளத்தில் மூழ்கி சுமார் மூன்றரை லட்சம் ஏக்கர் விளைநிலத்தில் இருந்த நெல், சோளம், மிளகாய் பருத்தி உள்ளிட்ட பயிர்கள் நாசமடைந்தன.

    குறிப்பாகம் குண்டூர் மாவட்டத்தில் மட்டும் 80 ஆயிரம் ஏக்கரில் இருந்த நெல்பயிர்கள் அறுவடை முடிந்து உலர வைப்பதற்கான நேரத்தில் நாசமாகின. மேலும், சுமார் 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான புகையிலை, சோளம், மிளகாய் போன்ற பணப்பயிர்கள் நாசமடைந்தன,

    கிருஷ்ணா மாவட்டத்தில் சுமார் 1.50 லட்சம் ஏக்கர் அளவிலான நெல், சோளம், மிளகாய் மற்றும் வாழை பயிர்கள் நாசமாகின. கிழக்கு மற்றும் மேற்கு கோதாவரி மாவட்டங்களில் புயல் காற்றில் பல ஏக்கர்களில் இருந்த வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தன.

    மேற்கண்ட 5 மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் தொடர்பாக செய்யப்பட்ட ஆரம்பகட்ட மதிப்பீட்டில் பேத்தாய் புயலால் சுமார் 450 கோடி ரூபாய் அளவிலான பயிர்கள் அழிந்துப் போனதாக தெரியவந்துள்ளது.

    மேலும், குளிர் தாங்க முடியாமல் சுமார் 800 ஆடுகள் மற்றும் சில கால்நடைகளும் இறந்தன. புயல் பாதித்த பகுதிகளை இன்று வான்வழியாக பறந்து சென்று ஆய்வு செய்த முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான இழப்பீடு விரைவில் அளிக்கப்படும் என தெரிவித்துள்ளர்.



    புயல் பாதித்த 14 மண்டலங்களில் உடனடியாக மின்சார வினியோகம் செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட சுமார் 32 ஆயிரம் மக்கள் 187 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான உணவு உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். #CyclonePhethai #Andhracrops ##Andhracropsdamage
    Next Story
    ×