search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூமி பூஜை"

    • ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
    • வன்னியர் சங்க கொடியினை பெரியசாமி ஏற்றி வைத்தார்.

    தொப்பூர், 

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் பாகலஹள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட விநாயகபுரம் பகுதியில் நல்லம்பள்ளி மத்திய ஒன்றிய பா.ம.க சார்பில் பா.ம.க கொடியினை தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன் ஏற்றி வைத்தார். வன்னியர் சங்க கொடியினை பெரியசாமி ஏற்றி வைத்தார்.

    அதனை தொடர்ந்து விநாயகபுரம் பகுதியில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.6.30 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டில் பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர் முருகன், மாவட்ட துணை தலைவர் முத்துவேல், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜெயகுமார், பொருளாளர் உத்திரகுமாரி, பசுமை தாயகம் சுப்பிரமணி, ராஜேந்திரன், வார்டு உறுப்பினர், பெரியண்ணன், கிளை தலைவர் மணி, கிளை பொருளாளர் முனிராஜ் மற்றும் பா.ம.க நிர்வாகிகள் பிரேம்குமார், வெற்றிவேல் மற்றும் பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர்.

    • பல வருடங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.
    • சாலையை ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா வேப்பன–அள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் பஸ்தல்பள்ளி ஊராட்சி முடிபிநாயக்கன் பாளையம் முதல் திம்மராய–சாமி கோவில் வரை சுமார் 2 கி.மீ. தொலைவில் ரூ.41.50 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நடை பெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் சூளகிரி ஒன்றியக்குழு தலைவர் லாவண்யா ஹேம்நாத் பூமிபூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். பல வருடங்களாக இந்த சாலை குண்டும் குழியுமாக இருந்து வருகிறது.

    இதுகுறித்து தகவலறிந்த ஒன்றிய குழு தலைவர், அரசு அதிகாரிகளுடன் நேரில் சென்று சாலையை ஆய்வு செய்து பொது மக்களிடம் குறைகளை கேட்டறிந்து பின்னர் உடனடியாக புதிய சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    இந்த சாலை அமைக்க நடவடிக்கை எடுத்த ஒன்றியக்குழு தலைவர் மற்றும் ஒன்றிய குழு உறுப்பினர்களுக்கும், அதி–காரிகளுக்கும், பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி துணை அலுவலர் டென்சிங், ஊராட்சி மன்ற தலைவர் கவிதா ராஜப்பன், ஒன்றி்ய குழு உறுப்பினர் காஞ்சனா பழனி, ஒன்றியக் குழு உறுப்பினர் ராதா–கிருஷ்னண், ஊராட்சி மன்ற துணை தலைவர் சரஸ்வதி திம்மராஜ், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் மாதேஷ், செல்வராஜ், ஊர் கவுண்டர் ரங்கநாதன், முனிகிருஷ்னா, சிவகுமார், சுவாமி மூர்த்தி, சண்முகம், சின்னபையன் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • பணிகளை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, சப்-கலெக்டர் சரண்யா ஆகியோர் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர்.
    • துறை அதிகாரிகள் மற்றும் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஓசூர்,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பாகலூர் சாலையில், ஜி.ஆர்டி சர்க்கிள் அருகே, இந்து சமய அறநிலையத் துறைக்குட்பட்ட ஸ்ரீ காளிகாம்பாள் காமட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், ரூ.76 லட்சம் மதிப்பில் மலர் வணிக வளாகம் அமைக்கப்படவுள்ளது.

    இதற்கான அடிக்கல் நாட்டு விழாவை, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில், காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.

    இதைத் தொடர்ந்து, ஓசூரில் கட்டுமானப் பணிகளை, ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் , மாநகராட்சி மேயர் எஸ்.ஏ சத்யா, சப்-கலெக்டர் சரண்யா ஆகியோர் பூஜைகள் செய்து தொடங்கி வைத்தனர்.

    மேலும் இதில், தி.மு.க இளைஞரணி மாநில துணை செயலாளர் பி.எஸ்.சீனிவாசன், மாவட்ட அறங்காவலர் குழு நிர்வாகிகள், கோவில் செயல் அலுவலர்கள் சின்னசாமி, சாமிதுரை, துறை அதிகாரிகள் மற்றும் ஓசூர் முன்னாள் எம்.எல்.ஏ. மனோகரன், மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ரூ.40 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் பவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.
    • ரூ.40 லட்சம் மதிப்பிலான திட்ட பணிகளுக்கு காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர். மனோகரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    காரிமங்கலம்,

    தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் 1-வது வார்டை சேர்ந்த காட்டுசிகல அள்ளி கிராமத்தில் ரூ.40 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை மற்றும் பவர் பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடும் நிகழ்ச்சி நடைப்பெற்றது.

    நகர்புற சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் காட்டுசிகல அள்ளி 1-வது வார்டில் உள்ள சின்னான்டியூர், பட்டாதாரன் கொட்டாய் ஆகிய பகுதிகளில் ரூ.17 லட்சம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கவும், அதே பகுதியில் 2023-24 மாநில நிதி ஆணைய திட்டத்தின் கீழ் ரூ.23 லட்சம் மதிப்பில் பவர் பிளாக் சாலை அமைத்தல் என ரூ.40 லட்ச மதிப்பிலான திட்ட பணிகளுக்கு காரிமங்கலம் பேரூராட்சி தலைவர் பி.சி.ஆர் மனோகரன் பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் துணைத் தலைவர் சீனிவாசன், செயல் அலுவலர் ஆயிஷா, கவுன்சிலர்கள் சத்திரமேஷ், ராதா ராஜா, சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இந்நிகழ்ச்சியில் செயற்பொறியாளர் முருகன், தலைமை எழுத்தர் ரவி, பஞ்சாயத்து தலைவர் கண்ணபெருமாள், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் பிரபு, முன்னாள் கவுன்சிலர் சண்முகம், ஒன்றிய பிரதிநிதி கோவிந்தராஜ், தகவல் தொழில்நுட்ப அணி சம்பத் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்

    • ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்கப்பட உள்ளது.
    • களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    மத்தூர், ஆக.8-

    கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் ஒன்றியம், களர்பதி ஊராட்சி அங்கம்பட்டி முதல் மேக்கலாம்பட்டி வரை 1350 மீட்டர் தூரம் ஊராட்சி ஒன்றிய பொதுநிதியில் இருந்து ரூ.33.5 லட்சம் மதிப்பீட்டில் புதிய தார்சாலை அமைக்க களர்பதி ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி புகழேந்தி தலைமை வகித்து பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் விஜியலட்சுமி பெருமாள், மத்தூர் ஊராட்சி மன்றத் தலைவர் மீனா சக்தி, களர்பதி ஊராட்சி மன்றத்துணைத் தலைவர் தமிழ்செல்வி கருணாநிதி, அ.தி.மு.க ஒன்றிய

    அவைத் தலைவர் சென்னகிருஷ்ணன், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் முக்கிய பிரமுகர்களான எல்.சி. முருகன், வேடி, பாலு, அ.தி.மு.க தகவல் தொழில் நுட்ப பிரிவு பூபதி, மனோஜ் (எ) அண்ணாமலை, ஊராட்சி செயலர் சரவணன் மற்றும் ஊர் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து ெகாண்டனர். 

    • ரூ.1கோடியே 16 லட்சத்து மதிப்பிலான கனிமங்கள் மற்றும் குவாரிகள் மேம்பாட்டு திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.
    • பூஜைக்கு பின்பு அமைச்சர் சின்னபேட்டுதானப் பள்ளியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார்.

    சூளகிரி,

    வேப்பனப் பள்ளி தொகுதி சூளகிரி ஒன்றியம் துப்புகானப்பள்ளி ஊராட்சிக்கு அரசுதிட்ட பணியை உணவு துறை மற்றும் உணவு பொருள் வழங்கல் அமைச்சர் சக்கரபாணி தொடங்கி வைத்தார். அவரை சூளகிரி உத்தனப்பள்ளி நுழைவு சாலையில் தி.மு.க. எம். எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் பூங்கொத்துமாலை பொன்னாடை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே வேப்பனஅள்ளியை அடுத்த துப்பு காணப்பள்ளி ஊராட்சி, சின்னபேட்டு காணப்பள்ளியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சார்பில் ரூ.1கோடியே 16 லட்சத்து மதிப்பிலான கனிமங்கள் மற்றும் குவாரிகள் மேம்பாட்டு திட்டத்திற்கான பூமி பூஜை நடைபெற்றது.

    இதில் உணவு மற்றும் உணவுப் பொருள்வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் துப்பு காணப்பள்ளிஊராட்சி மன்ற தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

    இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சரயு, கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் சார் ஆட்சியர் சரண்யா, தி.மு.க மேற்கு மாவட்ட செயலாளரும், ஓசூர் எம்.எல்.ஏ.வுமான பிரகாஷ், பர்கூர் எம்.எல்.ஏ. மதியழகன், ஓசூர் மேயர் சத்யா, முன்னாள் எம்.எல்.ஏ. முருகன், மாநில, மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் சினிவாசன், ஷேக் ரஷீத், பாக்கியராஜ், வீராரெட்டி, சுகுகுமார், பி.டி.ஓ. விமல் ரவிக்குமார், டி.எஸ்.பி. முரளி மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

    பூஜைக்கு பின்பு அமைச்சர் சின்னபேட்டுதானப் பள்ளியில் புதிய அங்கன்வாடி கட்டிடத்தை திறந்து வைத்தார். பின்பு மாதர் சங்கத்தினர் தங்கள் கோரிக்கை நிறைவேற்ற வேண்டும் என சங்க நிர்வாகி சரஸ்வதி மற்றும் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

    • ஒடசல்பட்டி புதூரில் ரூ.33.60 லட்சம் மதிப்பில் தார் சாலை அமைக்க பூமி பூஜை நடைபெற்றது.
    • புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலைமையில் பூமிபூஜை நடந்தது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் ஒன்றியம் மணியம்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட ஒடசல்பட்டி புதூரில் ரூ.30.60 லட்சம் மதிப்பில் புதூர் மாரியம்மன் கோவில் முதல் சுடுகாடு வரை புதிய தார் சாலை அமைக்கும் பணிக்கு கடத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சிவபிரகாசம் தலை மையில் பூமிபூஜை நடந்தது.

    இதில் துணை செயலாளர் சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா சரவணன், ஆண்டி கவுண்டர், மாவட்ட அமைப்புசார ஒட்டுனர் சங்க அமைப்பாளர் வடிவேல், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசந்திரன், மாவட்ட பிரதிநிதி ராஜேந்திரன், பாண்டுரங்கன், குமரவேல், சின்னதுரை, பச்சியப்பன், மதன்பாலாஜி உள்பட பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.

    • ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.
    • நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர்.

    ஓசூர்,  

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி 28-வது வார்டிற்குட்பட்ட சென்னத்தூர் பகுதியில், மாநகராட்சியின் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் தார்சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

    இதையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சியில், ஓசூர் எம்.எல்.ஏ. ஒய்.பிரகாஷ் மற்றும் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா ஆகியோர் கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தனர். இதில், மாநகராட்சி கவுன்சிலர் புருஷோத்தம ரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • நகராட்சி பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பில் புதிய உரக்கிடங்கு அமைத்தல் பணிகள் தொடங்கப்பட்டது.
    • பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.

    தாராபுரம்:

    தாராபுரம் நகராட்சி பகுதியில் தார் சாலை மற்றும் உரக்கடங்கு உள்ளிட்ட ரூ.46 லட்சம் பணிகளுக்கு பூமி பூஜை செய்து பணியை திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்தார்.

    விழாவிற்கு நகராட்சி தலைவர் கு.பாபபு கண்ணன் தலைமை தாங்கினார்.நகராட்சி ஆணையாளர் எஸ்.எம்.பாரிஜான் முன்னிலை வகித்தார். அப்போது திருப்பூர் மாவட்ட 4ம் மண்டல தலைவர் இல.பத்மநாபன் தொடங்கி வைத்து கூறியதாவது:-தாராபுரம் நகராட்சி பகுதியில் சுமார் 40ஆண்டு காலமாக முடிக்கப்படாத குறிப்பாக அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் கிடப்பில் போடப்பட்ட பணிகளை திமுக., அரசு பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் பணியில் முழு முயற்சியில் இப்பணிகளை நிறைவேற்றியதுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

    அதில் அலங்கியம் சாலை முதல் உடுமலை சாலைவரை ரூ.16 லட்சம் மதிப்பில் தார்சாலையும்,அரசமரம் பகுதியில் ரூ.6லட்சம் மதிப்பில் தார்சாலை புதுப்பித்தல்,நகராட்சி பகுதியில் ரூ.24லட்சம் மதிப்பில் புதிய உரக்கிடங்கு அமைத்தல் உள்ளிட்ட ரூ.46 லட்சம் மதிப்பிலான பணிகளுக்கு பூமி பூஜை செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது.இதன் அனைத்து பணிகளும் தாமதமின்றி மேற்கொள்ளப்படும் என கூறினார்.

    நிகழ்ச்சியின் போது தி.மு.க., நகர செயலாளர் எஸ். முருகானந்தம், பொறியாளர் சண்முக வடிவு,மாநில செயற்குழு உறுப்பினர் கே.எஸ் தனசேகர், நகரத் தலைவர் கதிரவன், நகராட்சி கவுன்சிலர்கள் சாந்தி, புனிதா, கமலக்கண்ணன், துரை சந்திரசேகர், சீனிவாசன் முத்துலட்சுமி,தேவி அபிராமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    • ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.
    • புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    விழுப்புரம்: 

    விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ஒன்றியம் பொன்னக்குப்பம் ஊராட்சியில் இருந்து சி. என். பாளையம் செல்லும் சாலையை முதலமைச்சர் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 59.08 லட்சம்மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்ப தற்கும், துத்திப்பட்டு கிரா மத்தில் இருந்து இருளர் காலனி மயான பாதை செல்லும் சாலையை ரூ 46 லட்சம்மதிப்பீட்டில் தார்சாலையாகஅமைப்பதற்கும்,துத்திப்பட்டு முதல் கிருஷ்ணா புரம் வரை செல்லும் சாலையை ரூ 1.18 கோடி மதிப்பீட்டில்புதிய தார்சாலை அமைப்பதற்கு பூமி பூஜை விழா இன்று காலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு செஞ்சி ஒன்றிய குழுதலைவர் விஜயகுமார் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் சிறுபான்மையினர்நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு 2 கோடியே 23 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய தார் சாலை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில்செஞ்சி மத்திய ஒன்றிய செயலாளர் விஜயராகவன், அனந்தபுரம் நகர செயலாளர் சம்பத், பேரூராட்சி மன்ற தலைவர் முருகன், ஒன்றிய கவுன்சிலர் அலுமேலுகிருஷ்ணமூர்த்தி, ஊராட்சி மன்ற தலைவர் மங்கை முனுசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாபு சிங்,வனக்குழு தலைவர் நடராஜன்,அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் பழனி, நிர்வாகிகள் பிரதாப், முத்து, பாண்டியன், சுரேஷ், சரவணன் , அரசு ஒப்பந்த தாரர் சரவணன், செஞ்சி ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர் பழனி உள்ளிட்டோர்கலந்து கொண்டனர்.

    • ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
    • சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கி சாலை அமைக்கும் முதல் பணியினை தொடங்கி வைத்தார்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சியில் கஸ்தூரி கோம்பை கிராமம் அமைந்துள்ளது.

    இப்பகுதி பொதுமக்கள் தங்கள் கிராமப் பகுதிகளுக்கு மண் சாலை மட்டுமே அமைந்துள்ளது. இவற்றை தார்சாலையாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.

    இந்நிலையில் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கம்மம்பட்டி ஊராட்சியில் உள்ள கஸ்தூரி கோம்பை கிராமத்திற்கு தார்சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

    அதைத் தொடர்ந்து தார் சாலை அமைக்க பூமி பூஜை போடுவதற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் கிராமத்திற்கு சென்றனர்.

    இதனால் முதன் முதலாக தங்கள் பகுதியில் தார் சாலை அமையவிருப்பதால் மகிழ்ச்சி அடைந்த அக்கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

    அதனை தொடர்ந்து ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.

    மேலும் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கி சாலை அமைக்கும் முதல் பணியினை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    இந்த புதிய தார்சாலை பூமி பூஜை நிகழ்ச்சியில் கம்மம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சரவணன், பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், கவுன்சிலர்கள் ராஜீவ் காந்தி, வளர்மதி தமிழ்ச்செல்வன் மற்றும் கம்மம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    • திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது.
    • ரூ.50 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

    கடத்தூர்,

    தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சி பகுதியில் ரூ.70 லட்சத்தில் திட்ட பணிகளுக்கான பூமி பூஜை பேரூராட்சி தலைவர் கே.எஸ். மணி தலைமையில் நடைபெற்றது.

    5-வது வார்டில் ரூ.20 லட்சம் மதிப்பில் மூன்று வீதிகளில் தார் சாலை மற்றும் 6-வது வார்டில் ரூ.50 லட்சம் மதிப்பில் பேவர்பிளாக் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது.

    இந்த நிகழ்சியில் துணைத்தலைவர் வினோத் (எ) தீர்த்தகிரி, சிவன், மாறன் உள்பட ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×