என் மலர்
உள்ளூர் செய்திகள்

கஸ்தூரி கோம்பை கிராமத்தில் தார் சாலை அமைக்க பூமி பூஜை
- ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
- சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கி சாலை அமைக்கும் முதல் பணியினை தொடங்கி வைத்தார்.
தொப்பூர்,
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம் கம்மம்பட்டி ஊராட்சியில் கஸ்தூரி கோம்பை கிராமம் அமைந்துள்ளது.
இப்பகுதி பொதுமக்கள் தங்கள் கிராமப் பகுதிகளுக்கு மண் சாலை மட்டுமே அமைந்துள்ளது. இவற்றை தார்சாலையாக மாற்றிக் கொடுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இந்நிலையில் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் கம்மம்பட்டி ஊராட்சியில் உள்ள கஸ்தூரி கோம்பை கிராமத்திற்கு தார்சாலை அமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து தார் சாலை அமைக்க பூமி பூஜை போடுவதற்காக தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பி. வெங்கடேஸ்வரன் நல்லம்பள்ளி வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் உள்ளிட்டோர் கிராமத்திற்கு சென்றனர்.
இதனால் முதன் முதலாக தங்கள் பகுதியில் தார் சாலை அமையவிருப்பதால் மகிழ்ச்சி அடைந்த அக்கிராம மக்கள் அனைவரும் ஒன்று கூடி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரை ஆரத்தி எடுத்து மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
அதனை தொடர்ந்து ரூ.1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமையவுள்ள சாலைப் பணிகளுக்கு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தனர்.
மேலும் சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.பி. எந்திரத்தை இயக்கி சாலை அமைக்கும் முதல் பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் அப்பகுதியை சேர்ந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
இந்த புதிய தார்சாலை பூமி பூஜை நிகழ்ச்சியில் கம்மம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரண்யா சரவணன், பா.ம.க. மாநில அமைப்பு செயலாளர் சண்முகம், கவுன்சிலர்கள் ராஜீவ் காந்தி, வளர்மதி தமிழ்ச்செல்வன் மற்றும் கம்மம்பட்டி ஊராட்சியை சேர்ந்த வார்டு உறுப்பினர்கள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.






