search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புற்றுநோய் பாதிப்பு"

    • ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
    • `கார்-டி’ புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும்.

    இந்தியாவில் புற்றுநோய் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்துள்ளது. 2010-ம் ஆண்டு 9 லட்சத்து 80 ஆயிரம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தார்கள். இந்த எண்ணிக்கை 2023-ம் ஆண்டில் 16 லட்சத்தை எட்டிவிட்டதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

    இதில் கவலைக்குரிய விஷயம் என்னவென்றால் ஆண்டுக்கு சுமார் 8 லட்சம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இந்த எண்ணிக்கை வரும் ஆண்டுகளில் கணிசமாக அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், ஒவ்வொரு ஆண்டும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளும் புற்றுநோயால் அவதிக்குள்ளாகிறார்கள்.

    புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடும் வேதனையை அனுபவிப்பது ஒருபுறமிருக்க, அதன் சிகிச்சை முறைகளும் மிகவும் வலி நிறைந்தவை. அதற்கு தீர்வு காணும் நோக்கத்தில் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிப்பதற்கான புதிய முறையை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த முறையின் பெயர் கார்-டி (சிமெரிக் ஆன்டிஜென் ஏற்பி டி-செல்) செல் சிகிச்சை. இது புற்றுநோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் மேம்பட்ட தொழில்நுட்பமாகும்.

     லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு பயன்படுத்தப்படும் சிகிச்சையாகும். இந்தியாவில் கார்-டி சிகிச்சைக்கு மத்திய மருந்து நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ) வணிக பயன்பாட்டிற்காக அங்கீகரித்தது.

    கீமோதெரபி போன்ற சிகிச்சைகளுக்கு குணமாகாத புற்று நோயாளிகளுக்கு கார்-டி (CAR-T) செல் சிகிச்சை நல்ல முன்னேற்றத்தை கொடுத்துள்ளது. இது குறிப்பிட்ட புற்றுநோய்களுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் புதிய நோயெதிர்ப்பு சிகிச்சையாகும். இந்த சிகிச்சையானது புற்றுநோயை எதிர்த்து போராட, நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை மாற்றியமைக்கிறது.

    கார்-டி சிகிச்சை என்பது புற்றுநோய் செல்களை தாக்குவதற்கு நோயாளியின் டி-செல்களை பயன்படுத்துவதாகும். டி-செல்கள் என்பது ஒரு வகை ரத்த வெள்ளை அணுக்களாகும். இவை உடலில் தொற்றுநோய் ஏற்படும்போது அதை எதிர்த்து போராட உதவுகிறது. இதற்காக டி-செல்கள் நோயாளியின் ரத்தத்தில் (ரத்த வெள்ளை அணுக்கள்) இருந்து எடுக்கப்பட்டு ஆய்வகத்தில் மரபணு மாற்றம்

    செய்யப்படுகின்றன. இந்த மரபணு மாற்றப்பட்ட செல்கள் மீண்டும் நோயாளிக்குள் செலுத்தப்பட்டு, அவை புற்றுநோய் செல்களைத் தாக்கி கொல்லும்.

    உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட முதல் கார்-டி சிகிச்சையின் பெயர் நெக்ஸ்கார்-19. இது இந்தியாவில் இன்மியூனோ ஆக்ட் என்ற நிறுவனத்தால் உள்நாட்டில் உருவாக்கப்பட்டது என்பது சிறப்பம்சம். லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற பி-செல் புற்றுநோய்களுக்கு சிகிச்சையளிக்கும் நோக்கத்தில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

    இந்த சிகிச்சையை வெளிநாட்டில் செய்தால் ரூ. 4 கோடி வரை செலவாகும். ஆனால் இந்தியாவில் சுமார் ரூ.40 லட்சத்தில் இந்த சிகிச்சையை செய்து கொள்ள முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்தியாவில் 10-க்கும் மேற்பட்ட நகரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகளில் இந்த சிகிச்சை இப்போது அளிக்கப்படுகிறது. பி-செல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 15 வயதுக்கு மேற்பட்ட நோயாளிகள் இந்த சிகிச்சைக்கு தகுதியுடையவர்கள். குறிப்பாக லுகேமியா மற்றும் லிம்போமா போன்ற ரத்த புற்றுநோய்களுக்கான சிகிச்சையில் நம்பிக்கைக்குரிய முடிவுகளை காட்டியுள்ளது.

    புற்றுநோய் பாதிக்கப்பட்ட சிலரது உடலில் இந்த சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதில் பலருக்கு ரத்தத்தில் புற்று நோய் செல்கள் கண்டறியப்படவில்லை. இந்த சிகிச்சை பயனுள்ளாதாய் இருந்தாலும், கடுமையான பக்க விளைவுகளைக் கொண்டதாகும்.

    ஆனால் கார்-டி செல் சிகிச்சையின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் அதன் பயன்பாட்டை விரிவுப்படுத்துவதற்கும் ஆராய்ச்சிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.

    2017-ம் ஆண்டில், அமெரிக்கா கார்-டி சிகிச்சையை முதன் முதலில் அங்கீகரித்தது. ஐரோப்பா மற்றும் சீனா உட்பட பல வளர்ந்த நாடுகளிலும் இந்த தொழில்நுட்பம் பயன்பாட்டில் இருக்கிறது. முதலில் இந்தியா இந்த சிகிச்சை முறையை வெளிநாடுகளில் இருந்து தான் பெற வேண்டி இருந்தது.

    இங்குள்ள நோயாளிகளுக்காக இறக்குமதி செய்யப்படும்போது மருத்துவமனை கட்டணம், மருத்துவர், உணவு மற்றும் பிற செலவுகளை ஒப்பிடும்போது விலை அதிகமாக இருந்தது. இப்போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்டதன் விளைவாக, விலை குறையும் என்பதால் பலராலும் இந்த சிகிச்சையை பெற முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    இந்தியாவில் உருவாக்கப்பட்ட இந்த கார்-டி செல் சிகிச்சை மூலம் முதல் நோயாளியாக, புற்றுநோயில் இருந்து மீண்டு வந்திருக்கிறார். அவரது பெயர் வி.கே. குப்தா. டெல்லியை சேர்ந்த இவர் இரைப்பை குடல் மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    கார்-டி செல் சிகிச்சையை பயன்படுத்தி மருத்துவர் ஒருவரே புற்றுநோயில் இருந்து குணமாகி இருப்பதால் இந்த சிகிச்சை புதிய நம்பிக்கையை கொடுத்துள்ளது. இந்த சிகிச்சை முறை உடலில் ஒரு முறை மட்டுமே செய்யப்படுகிறது. எந்தவொரு சிகிச்சை முறையிலும் முன்னேற்றம் அடையாத ரத்த புற்றுநோயாளிகளுக்கு இந்த சிகிச்சை பயனுள்ளதாகவே இருக்கும் என்பது மருத்துவ உலகின் கருத்தாக இருக்கிறது.

    • வளர்ந்த நாடுகளில் இறப்பு விகிதம் குறைந்துள்ளது.
    • நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து சிகிச்சை மாறுபடும்.

    ஒவ்வொரு வருடமும் ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதன் காரணமாக உலகம் முழுவதும் மூன்று லட்சத்திற்கு மேற்பட்டோர் இறக்க நேரிடுகிறது. இதில் பெரும்பாலான நோயாளிகளுக்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) தொற்று தான் முக்கிய காரணமாக இருக்கிறது.

    எந்தவிதமான ஒழுங்குப்படுத்தப்பட்ட பரிசோதனையோ அல்லது HPV தடுப்பூசி திட்டங்களோ இல்லாத ஏழை நாடுகளில் வாழும் பெண்களுக்குத் தான் 90 சதவிகித கருப்பை வாய் புற்றுநோய் தாக்குகிறது. வளர்ந்த நாடுகளில் கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைவாக இருப்பதற்கு காரணம், கடந்த முப்பது ஆண்டுகளில் அங்கு முறையான பரிசோதனை மற்றும் நோய் கண்டறிதல் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்படுகின்றன.

    இந்த புற்றுநோய்க்கு சிகிச்சை என்று பார்த்தால், நோயின் தீவிரத்தன்மையை பொறுத்து மாறுபடும். ரேடிகல் ஹிஸ்டெரெக்டோமி அல்லது கீமோ ரேடியேஷன் அல்லது இரண்டும் சேர்த்து கூட சிகிச்சை அளிக்கலாம். கருப்பை வாய் புற்றுநோய் ஆரம்பத்திலேயே கண்டறிந்துவிட்டால், அறுவை சிகிச்சை மூலம் குணப்படுத்திவிடலாம். இன்றைய காலத்தில் சிகிச்சை மூலம் பெண்களுக்கு ஏற்படும் பக்க விளைவுகளை நவீன ரேடியோதெரபி தொழில்நுட்பம் மூலம் குறைக்க முடியும்.

    எப்படி தடுப்பது?

    கருப்பை வாய் புற்றுநோய் ஒருவரை தாக்குவதற்கு ஹுயூமன் பாப்பிலோமா வைரஸ் (HPV) மூலம் ஏற்படும் தொற்றே முக்கிய காரணமாக இருக்கிறது. நாம் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை மற்றும் பழக்க வழக்கத்தை கடைப்பிடித்தால் கருப்பை வாய் புற்றுநோய் வரும் ஆபத்தைக் குறைக்க முடியும்.

    பாதுகாப்பான உடலுறவு:

    உடலுறவில் ஈடுபடும் போது எப்போதும் காண்டம் அணிய வேண்டும்; அதையும் சரியாக அணிய வேண்டும். அப்போதுதான் HPV தொற்றிலிருந்து பாதுகாக்க முடியும். அதிகமான நபர்களோடு பாலியல் உறவில் இருந்தால் HPV தொற்று ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.

     தடுப்பூசி:

    HPV தொற்று வராமல் தடுப்பதில் இந்த தடுப்பூசி சிறப்பாக செயல்படுகிறது. ஆண்களும், பெண்களும் இந்த HPV தடுப்பூசியை கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும். பாலியல் உறவில் ஈடுபடும் போது இது சிறந்த பாதுகாப்பை வழங்கும்.

    முறையான பரிசோதனை:

    தகுந்த மருத்துவரிடம் சென்று Pap smears மற்றும் HPV பரிசோதனையை அவ்வப்போது மேற்கொள்ளுங்கள். ஆரம்பத்திலேய கண்டறிந்துவிட்டால், புற்றுநோய் வளர்ச்சி பெறுவதை தடுக்க முடியும்.

    புகைபிடிக்கும் பழக்கம்:

    புகை பிடிப்பதற்கும் கருப்பை வாய் புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. புகையிலையில் உள்ள தீங்குவிளைவிக்கும் பொருட்கள் கருப்பை வாயில் உள்ள செல்களை பாதித்து HPV தொற்று ஏற்படும் வாய்ப்பை அதிகப்படுத்துகிறது. புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்தினால் கருப்பை வாய் புற்றுநோய் தாக்கும் ஆபத்து குறைவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியமும் மேம்படும்.

    ஆரோக்கியமான வாழ்க்கைமுறை:

    பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் ஆகியவற்றை டயட்டில் அதிகமாக சேர்த்துக் கொள்ளுங்கள். சீரான உடற்பயிற்சி மூலம் உடல் எடை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். மன அழுத்தத்தை குறைக்கும் பயிற்சிகளில் ஈடுபடுங்கள். இவற்றோடு சேர்த்து அடிக்கடி கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையை மேற்கொள்ளுங்கள். மருத்துவர் கூறும் ஆலோசனையை பின்பற்றுங்கள்.

    • உறுப்புகளை பாதிக்க செய்து மரணத்திற்கு வித்திடுகிறது.
    • இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.

    புற்றுநோய் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் கொடிய நோயாக உருவெடுத்திருக்கிறது. உடலின் பல்வேறு உறுப்புகளை பாதிக்கச்செய்து மரணத்திற்கு வித்திடுகிறது. உலகெங்கும் புற்றுநோய் பாதிப்புக்குள்ளாகி இறப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்துக்கொண்டிருக்கிறது.

    வாழ்க்கை முறையும், உணவுப்பழக்கங் களும்தான் புற்றுநோய்க்கு முக்கிய காரணங்களாக அமைந்திருக்கின்றன. புற்றுநோய் அபாயத்தை குறைப்பது குறித்தும், தடுப்பது பற்றியும் ஆராய்வதற்கு உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியமும், அமெரிக்க புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து 2018-ம் ஆண்டில் ஒரு குழுவை அமைத்தது. அந்த குழு 94 ஆயிரத்து 778 பேரிடம் இருந்து தகவல்களை திரட்டியது. அவர்களின் உடல் எடை, உயரம், இடுப்பு சுற்றளவு, உணவுப்பழக்கம், உடல் இயக்கம் சார்ந்த விஷயங்களை மதிப்பிட்டு மதிப்பெண் வழங்கியது.

    தினமும் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பட்டியலிட்டு, அதனை அவர்கள் முறையாக பின்பற்றுகிறார்களா? என்பதை கணக்கிட்டு அந்த மதிப்பெண்கள் மதிப்பிடப்பட்டன. முழுமையாக கடைப்பிடித்தவர்களுக்கு ஒரு புள்ளியும், பாதியளவு கடைப்பிடித்தவர்களுக்கு அரை புள்ளியும் வழங்கப்பட்டன. சரியாக கடைப்பிடிக்காதவர்களுக்கு புள்ளிகள் எதுவும் கொடுக்கப்படவில்லை.

    ஆய்வின் முடிவில் 7,296 பேர் அதாவது 8 சதவீதம் பேர் புற்றுநோய் பாதிப்புக்கு ஆளாகி இருந்தது கண்டறியப்பட்டது. அதில் அதிகம் பேர் மார்பகம், பரோஸ்டேட், பெருங்குடல் புற்று நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். ஆய்வுக்குழுவினர் கூறிய பரிந்துரைகளை முறையாக பின்பற்றாததுதான் இதற்கு காரணம்.

    4.5 முதல் 7 புள்ளிகள் வரை பெற்றவர்களுக்கு 3.5 புள்ளிகளை பெற்றவர்களை விட புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு 16 சதவீதம் குறைவு என்பதை கண்டறிந்துள்ளனர். அதேபோல் 3.75 முதல் 4.25 புள்ளிகளுக்கு உட்பட்டவர்களுக்கு புற்றுநோய் உருவாகும் அபாயம் 8 சதவீதம் குறைவாக உள்ளதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.

    ஒவ்வொரு புள்ளி அதிகரிப்பும் அனைத்து புற்றுநோய்களை உருவாக்கும் அபாயத்தை7 சதவீதம் குறைக்கிறது. அதிலும் மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய்க்கான அபாயத்தை வெகுவாக குறைக்கிறது. சிறுநீரகம், உணவுக்குழாய், கருப்பை, கல்லீரல் மற்றும் பித்தப்பை புற்றுநோய்க்கான ஆபத்துக்களும் குறைகிறது என்ற முடிவுக்கு ஆய்வு குழுவினர் வந்துள்ளனர்.

    உடல் எடையை சீராக பராமரித்து ஆரோக்கியமான உடல் எடையுடன் இருக்க வேண்டும் என்ற பரிந்துரையின் பின்னணியில் உடல் பருமன் புற்றுநோய்க்கு காரணமாக அமைந்திருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. புற்றுநோயை தடுக்க வாரத்திற்கு குறைந்தபட்சம் 150 நிமிடங்களாவது உடல் ரீதியாக சுறு சுறுப்பாக இயங்க வேண்டும் என்று உலக புற்றுநோய் ஆராய்ச்சி நிதியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

    துரித உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவு களை தவிர்ப்பது, சிவப்பு இறைச்சி வகைகளை வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல் உண்ணாமல் இருப்பது, முழு தானியங்கள், காய்கறிகள், பழங்கள், பருப்பு வகைகள், சிறு தானியங்களை உணவில் சேர்த்துக்கொள்வது, அதிக சூரிய ஒளி உடலில் படுவதை தவிர்ப்பது போன்றவற்றை அலட்சியம் செய்யாமல் பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

    புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை தடுப்பதற்கு ஆய்வுக்குழுவினர் 7 பரிந்துரைகளை வழங்கி உள்ளனர். அவற்றை பின்பற்றுவதன் மூலம் புற்றுநோய் வருவதை குறைக்க முடியும் என்று கருதுகிறார்கள். இதுதொடர்பான விரிவான ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்துள்ளனர். அவர்கள் பரிந் துரைத்த 7 விஷயங்கள் குறித்து பார்ப்போம்.

    உடல் எடையை சீராக பராமரியுங்கள்.

    உடல் இயக்க செயல்பாடுகளில் ஈடுபடுங்கள்.

    சிறந்த, சத்தான உணவை உட்கொள்ளுங்கள்.

    அதிக கலோரிகள் கொண்ட உணவுகள், பானங்களை தவிருங்கள்.

    பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி வகைகளை குறைவாக உட்கொள்ளுங்கள்.

    சர்க்கரை கலந்த பானங்களை அதிகம் பருகாதீர்கள்.

    மது அருந்தாதீர்கள்.

    முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    கடலூர்:

    கடலூரில் உலக மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் தி.மு.க. மருத்துவரணி அமைப் பாளர் டாக்டர் பால. கலைக்கோவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:-உலக நாடுகளில் தற்போது இந்தியாவில் அதிக அளவில் புற்று நோய் அதிகரித்து வருகின்றது. இதில் தமிழகத்திலும் நாளுக்கு நாள் புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் கடலூரில் தற்போது புற்றுநோயின் பாதிப்பு அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது.கடந்த சில வருடங்களில் நான் மேற்கொண்ட பரிசோதனையில் கணிச மாக புற்றுநோய் பாதிப்பு அதிகரித்து காணப்பட்டு வருகின்றது. இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் குறிப்பாக பெண்கள் இடையே புற்றுநோய் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது. 4 வகையான புற்றுநோய் உள்ளன.இதில் முதல் மற்றும் இரண்டாம் கட்ட அளவில் கண்டறிந்தால் அதற்கு சிகிச்சை அளித்து முழுமையாக குணப்படுத்த முடியும். 3 மற்றும் 4-ம் கட்டத்தில் புற்றுநோய் கண்டறிந்தால் உரிய சிகிச்சை அளிக்கப்படும்.

    ஆகையால் பெண்கள் முதற்கட்டமாக மார்பக புற்றுநோய் உள்ளதா? என்பதை சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மேலும் உடலில் மாற்றங்கள் ஏற்பட்டாலோ அல்லது கட்டிகள் உருவாகி நீண்ட நாட்கள் இருந்தால் அதனை அலட்சியமாக விடுபடாமல் உடனடியாக கண்டறிந்து மருத்துவமனைக்கு சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இது மட்டும் இன்றி புற்று நோய்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் பெண்கள் அதிகளவில் பதிவுகள் செய்து விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும். ஆகையால் பெண்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

    ×